யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/7/18

பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள சிக்கல்கள்.

முறைகேடுகளையும் நேர விரயத்தையும் தடுக்க COMPUTER BASED EXAMINATION தேர்வு நடத்த TNPSC திட்டமிட்டுள்ளது,

உடற்கல்வி வருடாந்திர செயல் திட்ட அட்டவணை- 2018- 2019

Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைப்பு, EMIS ID CARD PHOTO பதிவேற்றம் செய்யக் கூடாது மற்றும் EMIS DATA பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அறிவுரைகள் - SPD PROC

சரியாகப் படிக்காதவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்

சரியாகக் கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது என்பது உள்பட தனியார்
பள்ளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 இதற்கான சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தொல்லை கொடுக்கக் கூடாது. பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
 தனியார் பள்ளிகளில் நல்ல அறிவுடைய பாடத்திட்டம் சார்ந்தவை, இணையான பாடத் திட்டம் சார்ந்தவை மற்றும் பிற பாடத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 விடைத்தாள் மதிப்பீடு: அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவும் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அதனுடைய கட்டடங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். அரசின் சார்பாக நடத்தப்படும் தேர்வுகள், விடைத்தாள்கள் மதிப்பீடு போன்ற பணிகளுக்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை மாற்றுப் பணிக்காக அனுப்பிட வேண்டும்.
 அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி ஆகியன மேற்கொள்ளப்படும். தேவைப்படும்பட்சத்தில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களை அதில் ஈடுபடுத்த அனுப்பிட வேண்டும்.
 கட்டணத்தை முறைப்படுத்த...தனியார் பள்ளிக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தைத் தவிர வேறு எந்தப் பெயரிலும் கட்டணத்தை பெறக் கூடாது.
 சரியாகப் படிக்காதவர்கள்: தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் யாரையும் சரியாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி பொதுத் தேர்வுகள் எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குள் நலன்களைக் கெடுக்கும் வகையிலான போட்டிகளை நடத்தக் கூடாது.
 வெளிப்படையான சேர்க்கை: தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வி ஆண்டின் சேர்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தபட்சம் 30 நாள்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறிவிப்பை, பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், இணையதளத்திலோ அல்லது தகவல்களைத் தெரிவிக்கும் பள்ளி தொடர்பான பிற அம்சங்களின் வாயிலாகவோ வெளியிட வேண்டும்.
 பெற்றோர்-ஆசிரியர் சங்கம்: அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளிலும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்தவும், அதில் பெற்றோரை பங்கெடுக்கச் செய்யவும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை அமைக்க வேண்டும்.
 அனுமதி பெறாமல் மூடக் கூடாது: தனியார் பள்ளியையோ அல்லது பள்ளியில் தொடங்கப்படும் பாடப் பிரிவையோ உரிய அரசு அமைப்பின் ஒப்புதலைப் பெறாமல் மூடக் கூடாது. அவ்வாறு மூடும் போது படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உரிய தகுந்த ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
 ஆசிரியர்களுடன் ஒப்பந்தம்: தனியார் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகக் குழு தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தம் செய்யலாம். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளருடன், பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்கெனவே பணியிலுள்ள பணியாளருடன் சட்டம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தத்தைச் செய்து செயல்படுத்திட வேண்டும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தங்கம் தென்னரசு கேள்வி: இந்த மசோதா தொடர்பான விவாதம் வியாழக்கிழமையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசோதாவில் உள்ள அம்சங்களை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சூழல் இல்லாமல் நீட் தேர்வுக்கு பயற்சி அளிக்கும் மையங்களாக மாறி வருகின்றன. அதைத் தடுப்பதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்துமா என்று கேள்வி எழுப்பினார்.
 இதற்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், சிபிஎஸ்இ பள்ளிகள் ஒருமுறை மட்டுமே தடையின்மைச் சான்றிதழ் பெற்றால் போதும் என இருந்தது. இப்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று பெற வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
 விடுமுறை நாள்களில்: தனியார் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி நாள்களில் பயிற்சி அளித்தால் அவர்களுக்கான உரிமைகள் ரத்து செய்யப்படும் என்றார்.a

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு புதிய கட்டடம் - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து மாவட்டங்களிலும்,
பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.




  சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சக்கரபாணி: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள, மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, கலையரங்கம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, அரசு முன் வருமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அந்த பள்ளியில், போதிய வசதி உள்ளது.
சக்கரபாணி: அந்த பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.நான்கு வகுப்பறை உடைய கட்டடம் பழுதடைந்துள்ளது. ஒரு கட்டடம் இடியும் நிலையில் உள்ளது.அதற்கு பதிலாக, 12 வகுப்பறைகள் உடைய, புதிய கட்டடம் கட்ட வேண்டும். கூடுதலாக, ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.

  சக்கரபாணி: அனைத்து பள்ளிகளுக்கும், தேவையான கட்டடம் கட்டித்தர வேண்டும். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்?
அமைச்சர் செங்கோட்டையன்: அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் வாயிலாக, பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்யவும், பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்டவும் உத்தரவிடப் பட்டுள்ளது.'நீட்' தேர்வு குறித்த புள்ளி விபரம் தற்போது இல்லை. இந்த ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள், இந்த மாதத்தில் துவங்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டில் பாடங்கள்; கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுனர்

ராமநாதபுரம் : அனைவருக்கும் கல்வி இயக்க
ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.



ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனரான இவர், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை மூலம் மாணவர்களை கவரும் வகையில் ஏற்கனவே பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

  தற்போது, தனியார் பள்ளிகளில் பயன்படுத்துவது போன்ற ஸ்மார்ட் போர்டு கல்வியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். 'இன்ராக்டிவ்' என்ற கருவி மூலம், புரஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தி வருகிறார். இதில், பென் டிரைவ் பயன்படுத்தியும் பாடங்கள் நடத்தலாம்.
இதேமுறையில் வேலுார் மாவட்டம் வாணியம்பாடியில் ஆசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். இதை அறிந்த உலகராஜ் அவரிடம் சென்று இதனை கற்று வந்துள்ளார். இதற்காக ரூ.80 ஆயிரம் சொந்த செலவில், புரஜெக்டர், லேப்டாப் , இன்ட்ராக்டிவ் கருவி, ஸ்பீக்கர், ஸ்கிரீன் உள்ளிட்ட உபகரணங்கள் என வாங்கியுள்ளார்.
ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று இந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஸ்மார்ட் போர்டில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். லேசர் பேனாவை மாணவர் கையில் கொடுத்து ஸ்கிரீனில் எழுதப்படும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுத வேண்டும். அந்த மாணவர் சரியாக எழுதும் வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது.

  இதனால், கூடுதல் பயிற்சி கிடைக்கும். சரியாக எழுதியதும் வாழ்த்துக்கள், சிறப்பு, நன்று, என அறிவிப்பு வருவதுடன், மத்தாப்பு கொளுத்துவது போல், கைதட்டல், கை கொடுப்பது, டாடா காட்டுவது போல் திரையில் வரும். இதை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்கள் எளிதல் உற்சாகத்துடனும், கற்றலில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க முடிகிறது, என்றார் உலகராஜ்.

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, மாணவர்களுக்கு தோப்புக்கரணப் பயிற்சி!!!

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க,
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.

  ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தில், வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அலமேலு தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். 6 - 10ம் வகுப்பு வரை, 155 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
காலை, 9:30 மணிக்கு, பள்ளி துவங்கியதும், மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க, தோப்புக்கரணம் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும்.
ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும்.
தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன், அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்து விடுமோ என்ற பயம், பலருக்கும் உண்டு.

இந்நிலையில், பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 'அரசு அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், 'டிஜி லாக்கர்' என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

5/7/18

1,6,9,11 வகுப்பு பாடப்புத்தகங்கள் எளிமையா உள்ளனவா? என ஆய்வுக்கூட்டம்

குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக பாடநூல் ஆய்வுக்கூட்டம் சனியன்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர். 1,6,9,11 ஆம் வகுப்புப் பாடநூல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டாலும் நேரம் போதாமை காரணமாக முதல் வகுப்பு நூல்களுக்கானவை மட்டும் முன் வைத்து பேசப்பட்டது. பிற நூல்களுக்கு மீண்டும் விரைவில் கூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பாடநூல்களில் உள்ள நிறை குறைகளை ஆசிரியர்கள் பட்டியலிட தொகுத்திருக்கிறோம். தொகுத்தவற்றை மீண்டும் சரிபார்த்து உறுதிப்படுத்தியபின் பரிந்துரைகளை விரைவில் பதிவிடுகிறோம். அரசுக்கும் அளிக்கிறோம். பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தது மட்டுமல்லாமல் வெகு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் பங்கேற்றது பெருமகிழ்வைத் தந்தது. பேராசிரியர்களின் ஆதரவு போற்றத்தக்கது.

எம்.பி.பி.எஸ்.: அரசு கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 1,329 மாணவர்களுக்கு: தமிழகத்தில் மொத்தம் 2,447 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; இவற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 1,329 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 1,118 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்துப் பிரிவினருக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
1,118 காலியிடங்கள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 828 பேர் அழைக்கப்பட்டு, 813 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 719 இடங்கள் நிரம்பின. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. மூன்று நாள்கள் கலந்தாய்வின் முடிவில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 29 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், தனியார் கல்லூரிகளில் 59 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 808 இடங்கள் நிரம்பின.
4 இடங்கள்: பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு: தரவரிசைப் பட்டியலில் 1,418 -இலிருந்து 2,380 வரையிலான 963 அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா : காத்திருக்கும் 5,500 ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில்
நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500 பேர் உள்ளனர். மத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர். சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.
ஆனால் இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதி மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குப் பின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஜூலை 4) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல்

தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் – என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.

டி.எல்.எட்., தகுதியை 2019க்குள் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் உடல் ரீதியான மற்றும் மகப்பேறு காலங்கள் போன்ற காரணங்களால் ஆசிரியைகள் பலர் இத்தகுதி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை 80 ஆயிரம் காலி இடங்கள்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில், சிவில் பிரிவில், 13 ஆயிரத்து 874 இடங்கள் உட்பட, மொத்தம், 80 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில், கடந்த 30ல் துவங்கியது. பொதுப்பிரிவான சிவிலுக்கு நடந்து முடிந்துள்ளது. தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள, 500 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து, 20 சதவீத அடிப்படையில் சிவிலுக்கு, 15721 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2150 பேர் விண்ணப்பித்ததில், 1847 பேர் மட்டுமே பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்றனர். 13 ஆயிரத்து 874 இடங்கள் காலியாக உள்ளன.மெக்கானிக்கலை பொருத்தவரை, 21 ஆயிரத்து 670 இடங்களுக்கு, 4800 பேர் விண்ணப்பித்துள்ளனர். எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு, 50 ஆயிரத்து 989 இடங்களுக்கு, 4050 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 
நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட, 90 ஆயிரம் இடங்களில், 10 ஆயிரம் இடங்களே நிரம்பும் நிலை இருப்பதால், 80 ஆயிரம்காலி இடங்களுடன் கல்லுாரிகள் செயல்படும் நிலை உள்ளது.

4/7/18

சிறுபான்மையினர் பகுதிகளில் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு, சில பரிந்துரைகளை அளித்துள்ளது; அதன் விபரம்:சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர், பாகுபாடு மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்.இதன் மூலம், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் கல்வியறிவு பெறுவர். முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில், உருது நடுநிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். அங்கு, தாய்மொழியாக உருது இருக்க வேண்டும்.இவ்வாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாளில் கூட்டல் பிழை : ஆசிரியர்கள் உட்பட, 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்'

பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் ஏற்படுத்திய, ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர் கள், 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பின், தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியாகின. இந்தத் தேர்வை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய, சலுகை வழங்கப்பட்டது.இந்த சலுகையை பயன்படுத்தி, 2,500க்கும் மேற்பட்டவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள், இரு வாரங்களுக்கு முன் வெளியாகின. அதில், 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால், மதிப்பெண் மாறியது.இந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை ஆய்வு செய்து, அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள், துறை அலுவலர்கள் யார் யார் என, பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஆசிரியர்கள் உள்ளிட்ட, 1,000 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.விளக்கத்துக்கு சரியான பதில் அளிப்பவர்களை தவிர, மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தேர்வுத்துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 

எந்த தரவரிசைக்கு எந்த இன்ஜி., கல்லூரி? : 3 ஆண்டு விபரம் வெளியிட்டது பல்கலை

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்ற புதிய தகவலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதில், மூன்றாண்டு தரவரிசை எண்கள் இடம் பெற்றுள்ளன. 
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.04 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியானது. ஜூலை, 10க்கு பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை போக்கும் வகையில், அண்ணா பல்கலையில் இருந்து, புதிய வழிகாட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://tnea.ac.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், எந்த தரவரிசை எண் வரையிலான மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைத்தது. இன வாரியாக எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண் தேவை, 2015 முதல், 2017 வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள், கல்லுாரி வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால், கல்லுாரிகளை எளிதில் தேர்வு செய்ய முடியும். 

கால்நடை மருத்துவ படிப்பு : இன்று தரவரிசை பட்டியல்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, உணவு தொழில்நுட்பம் போன்ற
படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன. அதேபோல, கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற, பி.டெக்., படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 12 ஆயிரத்து, 217 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இன்று காலை, வெளியிடப்படுகிறது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர், பாலச்சந்திரன் வெளியிட உள்ளார்.