யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/18

16.11.2018 வெள்ளிக்கிழமை பள்ளிகள்,கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளூர் விடுமுறை-நாகை மாவட்டம்

கூகுள் டியோ செயலி' உபயோகப்படுத்தினால் ரூ.9 ஆயிரம் வரை ரொக்க பரிசு: கூகுள் அறிவிப்பு :

கூகுள் டியோ செயலி (Google Duo) உபயோகப்படுத்தினால் ரூ.9 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது. கூகுள் டியோவை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது கூகுள் நிறுவனம் தனது புதிய வீடியோ அரட்டை செயலியை (Video Chat App) கடந்த ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயலியை பதிவு செய்யும் போது, பயன்பாட்டில் இருக்கும் சிம் மற்றும் தொலைப்பேசி எண்ணை சரிபார்த்து உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெறும் வகையிலும் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

கூகுள் டியோவில் உள்ள ஒரு சிறந்த அம்சம் "நாக் நாக்". இது அண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் உள்ளதாகும். அண்ட்ராய்டு போனில் அழைப்பு பெறும் போது, அழைப்பை எடுக்கும் முன்னே மோபைல் திரையில் அழைப்பாளரிடம் இருந்து நேரடி வீடியோ காண்பிக்கப்படுகிறது.
இந்த செயலி வேகமாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோ செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் ரோக்கப்பரிசு அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது,.
அதில், இந்தியாவில் அதன் வீடியோ அழைப்புப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் நபர்களுக்கு கூகுள் பே பேமென்ட் மூலம் மொத்தமாக 9,000 ரூபாய் வரை வருடத்திற்கு சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளது. இநத செயலி மூலம் புதிய பயனாளர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இது உங்களுக்கும், தொடர்பை ஏற்படுத்துபவர்களும் பணப் பரிசு கிடைக்கும் என்று கூறி உள்ளத
...

சிறப்பாசியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை - செங்கோட்டையன்

சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சம்பத் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் ஏதும் இருந்தால், அவற்றை விசாரித்து தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும், இதே காலஅவகாசத்தில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

பெற்றோர்களே எச்சரிக்கையாக வண்டி ஓட்டுங்கள்- குட்டி போலீஸ் உங்களைக் கண்காணிக்கிறது

இத்தனை நாட்களாக ப்ரோக்ரஸ் கார்டைப் பார்த்து மாணவர்கள்தான் பயப்பட்டார்கள். இனி பெற்றோர் பயப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது' அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர்.
அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆரம்பித்துள்ளது. வரும் காலங்களில் இந்த முறை மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீட்டு அட்டை ஒன்றை மாணவர்களுக்கு அளிப்பர். அதில், மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் செல்லும் பயணங்கள் குறித்து மாதத்துக்கு 12 முறை மதிப்பிட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் தங்களின் பெற்றோர் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுகிறார்களா, வண்டி ஓட்டும்போது போன் பேசாமல் இருக்கிறார்களா, ஹெல்மெட் / சீட் பெல்ட் அணிகிறார்களா, சரியான முறையில் ஓவர்டேக் எடுக்கின்றனரா, ஹாரன் அடிக்கிறார்களா மற்றும் பிற விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்று மாணவர்கள் கண்காணிக்க வேண்டும். பின்னர் அதை அட்டையில் மதிப்பிட்டு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும். 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் சாலை விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை ஆசிரியர்களே கண்காணித்து மதிப்பிட உதவுகின்றனர். அதே நேரம் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பீட்டு அட்டையை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 200 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 'குட்டி போலீஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். ஒருவழிச் சாலையில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த மாணவர்களே ட்ராபிக் போலீஸ் போல சீருடை அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ''எங்க டீச்சர்களும் ரூல்ஸ ஃபாலோ பண்றாங்களான்னு செக் பண்ணுவோம்a

ஓபிசி மாணவர்களுக்கு வங்கி தேர்வு இலவச பயிற்சி :

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணி யாளர் நலச் சங்க தமிழ்நாடு தலைவர் கோ.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கம், எம்பவர் அறக் கட்டளை மற்றும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 23 முதல் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும். இதில் பங் கேற்க விரும்பும் ஓபிசி மாணவர் கள் வங்கி தேர்வு வாரியத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண் ணப்பத்தின் நகலை empower.socialjustice@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது periyariasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


பயிற்சி வகுப்புக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பதிவு கட்டண மாக ரூ.100 மட்டும் முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விவரங் களுக்கு 9381007998, 9092881663 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

EMIS Flash News : நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.

EMIS Flash news-
இவ்வாண்டு முதல் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாமினல் ரோல் தயாரிக்கும் பொழுது அது சார்ந்த தகவல்கள் திரட்டப்படுவது அரசின் EMIS வலைதளம் மூலமே நடந்தன. 

எனவே 10,11,12 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் EDIT வசதி நிறுத்தப்பட்டு இருந்தது, ஆனால் +1 மாணவர்களின் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளதால் EMIS ல் EDIT வசதி செய்யப்படவேண்டும் என பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.  
               இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் +1 மாணவர்களின் பதிவில் திருத்தங்கள் செய்து மாணவரின் தகவல்களை நிகழ்நிலைக்கு கொண்டு வரகேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்aaa

12/10/18

6TH STD SOCIAL SCIENCE UNIT-WISE QUESTION PAPERS (EM) TERM-2 (NEW)



6th Social Science Unit 1 (His-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 2 (His-2) test EM (Term -2).pdf

6th Social Science Unit 3 (His-3) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Geo-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Civ-1) test EM (Term -2).pdf

6th Social Science Unit 2 (Civ-2) test EM (Term -2).pdf

6th Social Science Unit 1 (Eco-1) test EM (Term -2)pdf.


6TH STD SOCIAL SCIENCE UNIT-WISE QUESTION PAPERS (EM) TERM-2 (NEW)

6th Std - Term 2 - QR Videos - Tamil - Page 5


ஆசிரியர் பணி தகுதி தேர்வு : கவுன்சிலுக்கு அதிகாரம்

ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில், மாநில கல்வியியல் கவுன்சிலின் கருத்தை கேட்ட பின், பாடத்திட்ட மாற்றம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, 'டெட்' என்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும், பி.எட்., மட்டும் படித்தால் போதாது; டெட் தேர்விலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு செல்லும்.இந்த ஆண்டு, அக்டோபரில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றம், அரசு பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது எழுந்த முறைகேடு புகார்கள் போன்றவற்றால், தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது.ஆனால், அரசு பணிக்கு ஆள் எடுக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் சேர்வோருக்காக, டெட் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதன்படி, இன்னும் மூன்று மாதங்களுக்குள், டெட் தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வுக்கு, பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.பாடத்திட்டம் மாற்ற வேண்டும் என்றால், பாடத்திட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை புத்தகமாக தயாரிக்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், அறிவொளியிடம், டி.ஆர்.பி., சார்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவரது கருத்து கிடைத்த பின், அடுத்த நடவடிக்கை துவங்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

மொட்டை கடிதத்தின் மேல் நடவடிக்கை தேவையில்லை : அரசு உத்தரவு

மத்திய அரசு துறைகளின் கீழ் பணிபுரியும் உயரதிகாரிகளுக்கு எதிராக புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்கள் இல்லாமல் வரும் மனுக்கள் மற்றும் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவு குறித்து மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம், அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அல்லது வேறு முக்கிய துறைகளில் நியமனம் செய்ய ஆலோசனை நடக்கும் போது, பெயர் குறிப்பிடாத நபர்களின் புகார்கள் அல்லது முழுமை பெறாத குற்றச்சாட்டுகளுடன் கடிதங்கள் அதிகளவு வருவது வழக்கம்.


உண்மை தன்மை குறித்து ஆராயும் அளவிற்கு கூட பல சமயங்களில் புகார்கள் இருப்பதில்லை. எனவே புகார் அளிப்பவரின் விவரங்கள் இல்லாமல் மொட்டை கடிதம் வமீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அதனை பதிவு செய்தால் போதும் என மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறினர். இதே உத்தரவை, சிவிசி எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையமும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது

750 PP - ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தில் எந்த ஆணை சரியானது? - முதல்வர் தனிப்பிரிவில் மனு!

மாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் புதிய வசதி கல்வித்துறையில் அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு மகளிர் பள்ளிகளில் மாணவிகள் பள்ளிக்கு வந்துசெல்வதை பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப் பேட்டை பி.என்.தவான் ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நேற்று நடைபெற் றது. இதில், பள்ளிக்கல்வி அமைச் சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 257 பள்ளிகளின் நிர்வாகி களுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார். அவர் நிகழ்ச்சிநடைபெற்ற மேடையை விட்டு இறங்கி நிர்வாகிகள்அமர்ந் திருந்த இடத்துக்கே சென்று ஆணையை வழங்கியதை அனை வரும் பாராட்டினர்.அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ‘‘அங்கீகாரம் இல் லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் நலனை கருத்தில்கொண்டு கட்டிட வரன்முறை பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் அளித்து வருகிறோம்.

இதுவரையில் 1,183 பள்ளிகளுக்கும், தற்போது 257 பள்ளிகளுக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் 412 பள்ளிகளுக் கும் ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றார்.நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மெட்ரிக்குலேஷன் பள்ளி கள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குநர் உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் எஸ்.திருவளர்செல்வி (சென்னை), ஆஞ்சலோ (காஞ்சிபு ரம்), தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச் சர் செங்கோட்டையன் நிருபர்களி டம் கூறியதாவது: மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்கள் பள்ளிக்கு வந்து செல் வதை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் திட்டத்தை அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் செயல் படுத்த உள்ளோம்.

‘ஆர்எப்ஐடி’ தொழில்நுட்பம் :

தற்போது சோதனை அடிப் படையில் சென்னை போரூர்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதி மூலம் தங்கள் குழந்தைகள் எப்போது பள்ளி சென்றனர். எப்போது அங்கிருந்து புறப்பட்டனர் என்பதை பெற்றோர் செல்போன் எஸ்எம்எஸ் தகவல் உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இதில் ‘ஆர்எப்ஐடி’ என்ற தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம் முழுவ தும் சுமார் ஆயிரம் அரசு மகளிர் பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து ஆசிரியர்களும் வகுப்பறைக்கு கற்பித்தல் துணைக்கருவியுடன் செல்ல வேண்டும் - CEO Proc (10.10.2018)

அரசு ஊழியர்கள் ஓய்வூதியமா...?? எங்களுக்கு தெரியாது... கைவிரித்த ஆணையம்...!!

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக அறிமுகம் படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்புகளை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் என்னென்ன?

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!


மோமோ சேலஞ்ச்' விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை:

இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இணையதள, 'புளூவேல்' விளையாட்டு, பல இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டியதால், அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோமோ சேலஞ்ச் என்ற மற்றொரு விபரீத விளையாட்டுக்கு, சிறார் ஆட்படுவது தெரியவந்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்திஉள்ளார்.'மோமோ சேலஞ்ச், வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படுவதால், விளையாட்டாக மொபைல் போன்களில் பதிவிறக்கி, மாணவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருமுறை இந்த விளையாட்டில் உறுப்பினராக சேர்ந்தால், அடுத்தடுத்த நிலைகளில் விளையாட, துாண்டப்படுவதாக கூறப்படுகிறது. 'இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைப்பதால், இது சார்ந்து, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்' என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அடிப்படை வசதி இல்லாத பள்ளிக்கு, 'சீல்' :

திருவண்ணாமலை அருகே, மாவட்ட நீதிபதி உத்தரவுப்படி,
அடிப்படை வசதி இல்லாத பள்ளிக்கு, 'சீல்' வைக்கப்பட்டது
*திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில், காந்தி இண்டர்நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில், மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லை என, மாவட்ட நீதிபதிக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி, கடந்த, 6ல், பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார
*அப்போது, அடுக்குமாடி கட்டடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. வகுப்பறையில் கதவுகள், ஜன்னல்கள் பொருத்தப்படவில்லை
*மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், அடிப்படை வசதியின்றி முட்புதர் மண்டி இருந்தது. பள்ளி வளாகத்தில் மூடப்படாத நிலையில், கிணறு இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.இவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தலாக இருந்தது
*அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட, அதிக சேர்க்கை இருந்ததும் தெரியவந்தது
*இதையடுத்து, பள்ளிக்கு சீல் வைக்க மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், நேற்று பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பள்ளிகளில் உறுதிமொழி: ஆட்சியர் உத்தரவு :

குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு
எதிராக வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தின் முதல் நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்
*நாட்டில் பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21ஆகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்களை குழந்தைத் திருமணமாகும்


*தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்ததை அடுத்து, அதைத் தடுக்க 2006-ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது


*இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்


*எனினும், இதுவரை குழந்தைத் திருமணங்கள் முழுமையாக தடுக்க முடியாமல் உள்ளது.வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 63 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


*இதன்படி, இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

*இதன்தொடர்ச்சியாக, குழந்தைத் திருமணங்கள், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் வாரத்தின் முதல்நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்


*இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது


*வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடையே குழந்தைத் திருமணத் தடைச்சட்டம், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகிறது


*குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் பொது நிகழ்ச்சியாகவே கருதப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது


*எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் வாரந்தோறும் முதல் வேளை நாளின் காலை கூட்டத்தில் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், உறுதிமொழி ஏற்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றம் :

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில்
413 வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன


*இங்கு மாதம் ரூ.7,700 சம்பளத்தில் 11,191 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6, 7, 8 வகுப்புகளில் 100 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்



*இந்த வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஓவிய ஆசிரியர் மற்றும் தையல், இசை,கணிதம், கட்டடக்கலை, ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு ஒரு ஆசிரியர் வீதம் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 6,7,8 வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த வகுப்புகளில் மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கலாம், என கூறப்பட்டுள்ளது


*இந்த சட்டத்தை பின்பற்றி தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


*இதையடுத்து, வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அடுத்த வாரம் முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது