யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/18

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூடுதல் மதிப்பெண்கள்: குறைகிறதா கல்வியின் தரம்?

பொதுத் தேர்வு முடிவுகளில் மாநிலத்தின் முதல் 10 இடங்களைப் பிடிப்பதற்காக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு சில பள்ளிகளில் சராசரி தேர்ச்சியை அதிகரித்துக்காட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண்களை கூடுதலாக அளித்து மதிப்பெண் பட்டியலை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதால் கல்வியின் தரம் குறைக்கப்படுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாநில கல்வித் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வி இயக்குநரகம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் தேர்ச்சி சதவிகிதம் குறைந்த மாவட்டங்களான வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ளுதல், ஆசிரியர்களின் கூட்டத்தைக் கூட்டி மாத அளவிலான தரமேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் முதல் முதலாக பொதுத் தேர்வு மாணவர்களுக்காக காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 10-ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், 10-ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும் அவர்களது பள்ளி மாணவ, மாணவிகளின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களுடன் கூட்டத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தனியே மூத்த தலைமை ஆசிரியர்கள் மூவரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் ஏதாவது ஒரு விடைத்தாளை எடுத்து திருத்தியது சரியான முறையில் உள்ளதா?, விடைக்கேற்ற மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதே முறை வேலூர் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் வேலூர் கல்வி மாவட்டத்துக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கூட்டம் வேலூரில் நடந்தபோது ஒரு பள்ளி ஆசிரியர், மாணவர் எடுத்த மதிப்பெண்களைவிட கூடுதலாக மதிப்பெண்கள் போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட ஆசிரியர் கண்டிக்கப்பட்டார். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இக்கூட்டம் அரக்கோணம் கல்வி மாவட்ட அளவில் அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருமால்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தமிழ் விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் அவை மாணவர்களாலேயே 2 விதமான பேனாக்களால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட ஆசிரியர், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், இது கல்வி அலுவலர்களுக்கு தெரியவந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பயத்தில் தேர்வு தினத்துக்குப் பிறகு ஒரு நாளில் தன் வகுப்பில் இருந்த 20 மாணவர்களிடம் வெள்ளைத் தாளை அளித்து சரியான பதிலை எழுதித் தருமாறு வாங்கி அதை காலாண்டுத் தேர்வு விடைத்தாளோடு சேர்த்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் இந்த தவறு தெரியவந்ததை அடுத்து குறிப்பிட்ட ஆசிரியரைக் கண்டித்த முதன்மைக் கல்வி அலுவலர், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்ற தவறு ஏதும் வேலூர் மாவட்டத்தில் நடக்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.

மேலும் அரக்கோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பேசும்போது கற்பித்தலின் திறனை ஆசிரியர்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் வந்துவிட்டது என பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார்.

தற்போது இதுபோன்று தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க மதிப்பெண்களை கூடுதலாக ஆசிரியர்கள் அளிக்கும்போது தேர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வேண்டுமானால் நிறைவேறலாம், ஆனால் மாணவர்களின் கல்வித் தரம் குறையும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும்போது அம்மையத்துக்கு வரும் கல்வி அலுவலர்கள், மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ள மாணவர்களுக்கு சற்று கூடுதலாகப் போட்டு அவர்களை தேர்ச்சி அடைய செய்யுங்கள். மாவட்டத்தின், மாநிலத்தின் தேர்ச்சியை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம் நமக்குள்ளது என தெரிவித்தார். அப்போது நாங்கள் அவர்கள் கூறியபடி அதைச் செய்தோம். இப்போது ஆசிரியர்கள் அவர்களாகவே அதைச் செய்துள்ளனர். இதில் தவறு எங்கே இருக்கிறது என்றார்.

ஆசிரியர்களும் அலுவலர்களும் தவறு எங்கே இருக்கிறது எனப்  பார்க்காமல் மாவட்டத்தின் பெயரை, மாநிலத்தின் பெயரை உயர்த்திக்காட்டுவதாக கருதி மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது.

எனவே கல்வித் துறை அலுவலர்களும், ஆசிரியர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மாணவ, மாணவிகளுக்கு நன்முறையில் கற்பித்து அவர்களின் கற்றல் திறனை மேன்மையடைய செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் சிறப்பாசிரியர்களின் சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்

சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தோம். 4 வாரம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு நான்கு வாரத்தில் தாசில்தார், ஆர்டிஓவிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழங்கவில்லை என்றால் பொதுப்பிரிவில் வைத்து நியமனங்கள்  வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

அறிவியல்-அறிவோம்: ஆபத்தான அழகுசாதன பொருட்கள்

ஆபத்தான அழகுசாதன பொருட்கள்.

#அறிவியல்-அறிவோம்
(சீ.ஹரிநாராயணன் GHSS தச்சம்பட்டு)

இந்தியாவில் ஆண்டுக்கு 220 கோடிகள் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்கள் ஆண்டுக்கு 15% விற்பனை வளர்ச்சி பெற்று, பெண்களை 'நடமாடும் அழகு சாதனப் பெட்டகமாக' மாற்றி வருகின்றன.

இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே ஆபத்தாக விளைகின்றது.


கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே:

 இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றது.
அதில் சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், பாரோபிளின், கிளைசால் போன்றவை ஆபத்தானவை என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயனங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயனங்கள் மிகவும் ஆபத்தானவை.

அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹோர்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்:

கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.
இது புற்றுநோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

கன்னக் கதுப்பு:

 கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எத்தில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்:

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

வாசனை திரவியங்கள்:

வாசனை திரவியங்களில்  15 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.
இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது, தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.

உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹோர்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள்:

 நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம் :

மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை  பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க   அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 280 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். இதற்காக பல மாதங்கள் ஆகலாம். எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச் சத்து குறைப்பாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். ஆசிரியர்கள் இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.  இதனைத் ெதாடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். மாணவர்களின் அளிக்கும் தகவல்களை பொறுத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை எண்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு   அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

கணக்கெடுப்பு பணி நிறைவு அரசு பள்ளிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு :

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இனி பராமரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.


இன்று(15ம் தேதி) வீடியோ கான்பரன்ஸ் மூலம் பள்ளிகல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடுகின்றனர். தற்போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், தினமும் காலை 9.15க்கு துவங்கி மாலை 4.15க்கு முடிவடைகிறது. பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி துவங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக, தலைமை ஆசிரியர் அறையில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறையாக இருந்து வருகிறது.

இது போல மதியமும் பள்ளி துவங்குவதற்கு முன், ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும். குறித்த நேரத்தில் வரமுடியாத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை சரி கட்டி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர். பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்தால், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையில் சிக்கல் ஏற்படும்.

நீதிக்கதை



ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

 ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

 நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.

 நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

 “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

 அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து

உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
 *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது

 பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

 நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்

இனி யாரும் தப்பமுடியாது.! வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாகவே வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் வதந்திகளால், சில அப்பாவிகள் பலியாகினர். இதையடுத்து, மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில், தவறான தகவல் அதிகப்படியாக பரவாமல் இருக்க, ஒருவர் ஒரே நேரத்தில் வாட்சப்பில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்று வாட்சப் நிறுவனம் அறிவித்தது.

மேலும், வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை தெரிவிக்கையில், ''வாட்சப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக அவர் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த அணைத்து தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளதாக'' தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் பரவும் பொய் செய்திகளை களையெடுக்க, உலகம் முழுவதும் 20 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ''வாட் அப்பில் பொய் செய்திகள் எவ்வாறு பரவுகிறது என்றும், அதனை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்தியய உட்பட உலகம் முழுவதும் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்திய நாட்டை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள்'' என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது

15/11/18

நீதிக்கதை



தந்திர நரி


ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது.

சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.

இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது.

தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.



தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.

நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.


விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.

பள்ளி திறந்ததுமே, 'லேப்டாப்' : செங்கோட்டையன் உறுதி

கோபிசெட்டிபாளையம்: ''பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், சிறுவலுாரில் நேற்று நடந்த ஒரு விழாவில், அவர் பேசியதாவது:தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகள் வரை, உள்ளாட்சி துறை மூலம், பராமரிப்பு பணி மேற்கொள்ள, ஓரிரு நாளில் முதல்வர் உத்தரவிட உள்ளார். டிசம்பர் இறுதிக்குள், கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.'நீட்' தேர்வுக்காக, கடந்தாண்டு, இரண்டரை மாதம் மட்டுமே இடைவெளி கிடைத்தது. நடப்பாண்டில், 412 மையங்களில், 26 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களில், 1,000 பேர் மருத்துவராக வருவர். இனி எதிர்காலத்தில், பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:மாணவர்கள், முறையாக பள்ளிக்கு வருவதை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும், 'பயோ மெட்ரிக் திட்டம்' தற்போது, 50 பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. 1,000 பள்ளிகளில், டிசம்பர் இறுதிக்குள் கொண்டு வரப்படும். தனியார் பங்களிப்புடன் இப்பணி நிறைவேற்றப்படும். 82 லட்சம் மாணவர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அமேசான், பிளிப்கார்ட்’டுக்கு போட்டி ‘ரிலையன்ஸ் ஜியோ’ திட்டம்

புவனேஸ்வர்: முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் ஜியோ’ மூன்று கோடி வர்த்தகர்களின் வியாபாரம் செழிக்க, தொழில்நுட்ப உதவியுடன் கூடிய புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது.


இது குறித்து, முகேஷ் அம்பானி கூறியதாவது:வலைதளம் வாயிலான விற்பனையை, கடைகளில் மேற்கொள்ளும் விற்பனையுடன் இணைக்கும் புதிய மின்னணு வர்த்தக நடைமுறையை, நிறுவனம் உருவாக்கி வருகிறது.வேலைவாய்ப்புஇது, உலகிலேயே மிகப் பெரிய வர்த்தக வடிவமாக விளங்கும்.


இத்திட்டம், மூன்று கோடி வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அவர்கள், புதிய தொழில்நுட்ப உதவியுடன், பெரிய நிறுவனங்கள் மற்றும் ‘மெகா’ மின்னணு வர்த்தக நிறுவனங்கள் செய்யும் அனைத்து விதமான வர்த்தக நடைமுறைகளை சுலபமாக மேற்கொள்ள முடியும்.ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் சுலபமாக்க வேண்டும். சிறு, நடுத்தர நிறுவனங்கள் சுலபமாக தொழில் புரிய வேண்டும்.


இந்த கொள்கைகளை, ரிலையன்ஸ் மற்றும் ஆர்ஜியோ நிறைவேற்றும் என, உறுதி கூறுகிறேன்.ஆர்ஜியோவின் புதிய திட்டம், ஒடிசாவைச் சேர்ந்த, லட்சக்கணக்கான திறமையான இளைஞர்களுக்கு, சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்புகளை வழங்கும்.ரிலையன்ஸ் ஜியோ மூலம், 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.


ஆர்ஜியோ சேவை துவங்கிய பின், உலகளவில், மொபைல் போன் வாயிலான இணைய பயன்பாட்டில், இந்தியா, 150வது இடத்தில் இருந்து, முதலிடத்திற்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அடுத்த இலக்குதொலை தொடர்பு துறையில், ‘ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ்.என்.எல்.,’ ஆகிய நிறுவனங்களை ஓரங்கட்டி, ஆர்ஜியோ, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த சில மாதங்களில், ஏர்டெல்லை விஞ்சி, இரண்டாவது இடத்தை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், மின்னணு வணிகத்தில், முதலிரண்டு இடங்களில் உள்ள, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய தொழில்நுட்பத்தில் மின்னணு வணிகத்தில் களமிறங்க, ஆர்ஜியோ தயாராகி வருகிறது

டிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு

சென்னை: ''தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.
டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறை விடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 - தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 - தமிழ் அல்லது மொழி பாடம் இரண்டாம் தாள்; 13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள்; 17ல் கணிதம்; 18ல் விருப்ப பாடம்; 19ல், அறிவியல்; டிச., 22ல், சமூக அறிவியல்பிளஸ் 1 வகுப்புடிச., 10 - மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்வி; 17ல், இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக பணி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 22 - வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்பிளஸ், 2 வகுப்புடிச., 10 - மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டசத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்விடிச., 17 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்ட் அப்ளைன்சஸ், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கருத்தியல்; டிச., 22 - வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்.இவ்வாறு தேர்வு அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.இந்த தேர்வுகள் முடிந்ததும், அனைத்து பள்ளிகளுக்கும், டிச., 23 முதல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படும். ஜன., 2ல், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கும்.

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

                                              
தஞ்சை, மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர்,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நாகை,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
காரைக்கால்,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூர்,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுச்சேரி,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
விழுப்புரம்  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.

கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 

தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடல் அலையின் உயரம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு:

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறை விடப்படுகிறது.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.

Best Science Teacher Award 2018 - Instructions And Application Form

ஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்*


*வாரம் ஒரு நாள் முன்னறிவிப்பின்றி பத்து அதிகாரிகள் குழு ஒரே நேரத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்யும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் துவக்கினார்*



*இத்திட்டம் ஆசிரியர் மற்றும் பள்ளி நற்செயல்பாடுகளை விட குறைபாட்டை அதிகம் சுட்டிக்காட்டுவதாகவும், ஆசிரியரை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்*


*மாநகராட்சி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ''ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் 'கழுகு பார்வை' கொண்டு ஆசிரியரை பார்க்கின்றனர்*


*எந்த மாவட்டத்திலும் இத்திட்டம் இல்லை. மாநகராட்சி பள்ளிகள் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளன. இத்திட்டம் தேவையில்லை,'' என்றார்*


*முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சந்திரன் கூறுகையில், 'பள்ளிகள் கல்வி கற்பிக்கும் இடம். அங்கு 'ஆபரேஷன்-இ' என ஏதோ தீவிரவாதியை பிடிப்பதாக பெயர் வைக்கப்பட்டுள்ளது*


 *இதை ரத்து செய்ய வேண்டும். அல்லது கல்வி ஆலோசனை குழு என பெயர் மாற்றம் வேண்டும்,' என்றனர்

கற்றல் விளைவுகள்' பயிற்சி

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', பயிற்சி நடத்தப்பட உள்ளது

மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்வியாண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது

நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை இணைத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது
இதனால், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன்களை அளவீடு செய்வதற்கு, மாநில மற்றும் தேசிய அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது
இந்தத்தேர்வுகளில், மாணவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது
நடப்பாண்டில், இத்தகைய தேர்வுகளை கையாள்வதற்கும், அடைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', புதிய பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

கொதிக்கும் சூரியனை ஆராய புறப்பட்ட தி பார்கர் சோலார் ப்ரோப்: தாங்குமா?

                                   
தொடர்ந்து பல்வேறு நாடுகள் பல விண்கலன்களை விண்ணில் அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது, இந்நிலையில் நாசா தனது புதிய யோசனையை செயல்படுத்தி உள்ளது, அது என்னவென்றால் நாசா உருவாக்கியுள்ள பார்கர் சோலார் விண்கலம், சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது.

நாசா அமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பார்க்கர் சோலார் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது, அதன்படி ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான், இந்த பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 612கிலோ எடை
இந்த விண்கலம் சுமார் 612கிலோ எடை, 9அடி 10-இன்ச் நீளமும் கொண்டுள்ளது, பின்பு சூரியனின் மேற்பரப்பு வரை சென்று சூரியனை ஆய்வு செய்து இதுவரை தெரியாத பல தகவல்கள் வழங்கியுள்ளது.


 1400 டிகிரி செல்சியஸ்
இதற்குவேண்டி 1400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் கார்பனால் உருவாக்கப்பட்ட வெளித்தகடு இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல் வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பார்கர் விண்கலம் தயார் செய்து பாதுகாப்பாக சென்றுள்ளது.


ஜெர்மனி-அமெரிக்கா
இதேபோன்று கடந்த 1976-ம் ஆண்டு ஜெர்மனி-அமெரிக்கா கூட்டனியில் ஏவப்பட்ட ஹீலியோஸ் 2 என்ற விண்கலம் 42.73 மில்லியன் கிலோ மீட்டர் சூரியனை நெருங்கி சென்றது. இப்போது அனுப்பபட்ட பார்க்கர் சோலார் விண்கலம் 42.73 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சென்று ஹீலியோஸ் 2 விண்கலத்தின் சாதனை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 3.8மில்லியன்
விரைவில் (2024) இந்த பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனை நெருங்கிவிடும் என்றும், பின்பு 3.8மில்லியன் தொலைவில் சூரியனின்
மேற்பரப்புக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டு, 24மணி நேரமும் கண்காணித்து தகவல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பள்ளி வளாகத்தில் கொசு அதிக அளவில் இருப்பதால்
ஒரு வார காலம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளிக்கு ஒரு வாரம் காலம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில், கழிவு நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உருவானதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்துறை அடுத்த சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளி வளாகத்தில், கழிவு நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உருவானதால், மாணவர்களின் நலன் கருதி ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படுகிறது

பணிக்கொடைக்கான காலவரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை

பணிக்கொடை பெறுவதற்கான காலவரம்பை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 1972ஆம் ஆண்டின் பணிக்கொடைச் சட்டப்படி ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியிருந்தால்அவருக்குப் பணிக்கொடை வழங்க வேண்டும்



இந்தப் பணிக்கொடைக்கான காலவரம்பைக் குறைப்பது பற்றித் தொழில்துறையினரிடமிருந்து தொழிலாளர் நல அமைச்சகம் கருத்துக்களைக் கேட்டிருந்தது. அதன்படி பணிக்கொடைக்கான காலவரம்பை 5ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கச் சட்டத்திருத்தம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இதனால் அமைப்புச்சார்ந்த பிரிவில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைவர்.3ஆண்டுக் காலத்துக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளவர்களும் இதன்மூலம் பயனடைவர். இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணிக்கொடை கிடையாது

துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி: 'மாத்தி யோசித்த' மாணவியர்!

                                         எம்.சாண்டுக்கு பதிலாக கட்டட கழிவில் இருந்து மாற்று மணல், துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், பள்ளி மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.

அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. 'கழிவில் இருந்து வளம்' (வேஸ்ட் டூ வெல்த்) என்ற தலைப்பில் மாணவ, மாணவியரின் ஆய்வு கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்டன.திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த செஞ்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு தமிழ் பிரிவு மாணவியர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீசக்தி சிநேகா ஆகியோர் தங்களது ஆய்வை சமர்ப்பித்தனர்.

அதில், பின்னலாடை கழிவுகளில் இருந்து கட்டிங் வேஸ்ட், அயர்னிங் வேஸ்ட், பஞ்சு வேஸ்ட்டுகளில் இருந்து காட்டன் தீக்குச்சி, சானிடரி நாப்கின், பை, கால்மிதி கார்பெட் மற்றும் ஒலித்தடுப்பு பலகைகள் செய்திருந்தனர். இந்த மறுசுழற்சி பொருட்களின் விலை, சந்தையில் அதே வகையான பொருட்களை விட, 50 சதவீதம் குறைவாகவும், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கலக்காத சுற்றுச்சூழல் காக்கும் விதமாகவும் இருக்கும் என்பதை விளக்கி, பாராட்டு பெற்றனர்.இதே பள்ளி ஆங்கிலப்பிரிவு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிஷோர் மற்றும் அஸ்வின் ஆகியோர், கட்டட கழிவுகளில் இருந்து டைல்ஸ், கான்கிரீட் கல், கிராதிகளை தயாரித்திருந்தனர். சிப்ஸ், ஜல்லிக்கு பதிலாக, 4.75 மி.மீ., அளவுள்ள மாற்று ஜல்லியை பயன்படுத்தலாம். 2.36 மி.மீ., அளவிலான மணலை, ஆற்று மணலுக்கும், எம்.சாண்டுக்கும் மாற்று மணலாக பயன்படுத்த முடியும் என்று விளக்கினர்.

அம்மாணவர்கள் கூறுகையில், 'எங்கள் பள்ளி கேண்டீனில் தரைத்தளம் அமைக்க இவற்றை பயன்படுத்தினோம். தமிழக அரசு திட்ட வடிவமைப்பு பொறியாளர் அருண் தம்புராஜ் மற்றும் பொதுப்பணித்துறை மாநில உதவி நிர்வாகப்பொறியாளர் பொதுப்பணித்திலகம் போன்றோர் இந்த ஆய்வு குறித்து விசாரித்துள்ளனர்' என்றனர்.அறிவியல் ஆசிரியர்கள் பாரத் மற்றும் கலைவாணி ஆகியோர் ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தங்கள் பள்ளி மாணவர்களை பாராட்டினர்