யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/8/16

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மே, ஜுன் மாதங்களில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவன இளங்கலை, முதுகலை படிப்புகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் படிப்புகள் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்பு களுக்கான தேர்வுகளின் முடிவுகள் 29-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் படும். 
தேர்வெழுதிய மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். www.ideunom.ac.in, www.unom.ac.inமறு மதிப்பீட்டுக்கு, உரிய தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 8-ம் தேதி ஆகும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிப்பு: வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

தமிழக வாக்காளர் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலர்களைக் கொண்டு வீடுவீடாக சரிபார்க்கும் பணியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் முடிந்துள்ளது.
அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில், 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவுகள் அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்தன.

தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடமும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததால், புதிய வாக்காளர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்காக வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதனால், 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்த மாதத்தில் இருந்து வழக்கமாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. சட்டப்பேரவை தேர்தல் போல், வாக்காளர் பட்டியல் தொடர்பான குழப்பம் இதிலும் வந்துவிடக் கூடாது என்பதால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரி தகவல்

இது தொடர்பாக, தேர்தல் துறை அதிகாரி ஒருவர் ‘ தி இந்து’விடம் கூறியதாவது:தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 3.75லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்டியல், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அலுவலர்கள், இந்த பட்டியலில் உள்ள பெயர்களை மீண்டும் வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் எந்தஇடத்தில் தற்போது இருக்கிறார் என்பதை உறுதி செய்து, மற்றொரு இடத்தில் இருக்கும் பெயர் அவரது அனுமதியுடன் நீக்கப்படும். தொடர்ந்து இந்த பணிகள் நடக்கும். புதிய வாக்காளர்கள் வழக்கம் போல், இணையதளத்தில் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். அதுபோல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்

அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட உள்ளனர். தமிழக அரசின் பல பள்ளிகளில்,மாணவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை விட, 2,500க்கும் மேலான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.
இவர்களை, பணி நிரவல் என்ற பெயரில், வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யும் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

l பள்ளியில், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, முறையே தலா, ஒரு ஆசிரியர் என, ஐந்து பேர் இருக்க வேண்டும். வகுப்புகளில், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒருவர் என, கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

l ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 35 மாணவர்கள் வீதம், 105 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் பணியில் இருப்பர். மாணவர்கள் அதிகம் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்படுவார்.

கூடுதல் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் இரு ஆசிரியர்கள் இருந்தால், அவர்களில் கடைசியாக பணியில் சேர்ந்தவர் மாற்றப்படுவார். பின், தமிழ் ஆசிரியர், அடுத்து ஆங்கில ஆசிரியர்களும், அடுத்தடுத்து மாற்றப்பட உள்ளதால், மொழி புலமை பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

TRB:ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு: 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இப்பணி களுக்கு விண்ணப்பித்தவர்களில் 194 பேரின் விண்ணப்பங்கள் உரிய கல்வித் தகுதியின்மை, அதிக வயது, விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாமை உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள் ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நிராக ரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியலை பெயர் மற்றும் நிரா கரிப்புக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கெடு.

பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.பரமேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழங்குடியின நலத்துறை சார்பில் பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் 40 நாள்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி நடைபெறும் 40 நாள்கள் உணவு வழங்கப்படுவதுடன், பயிற்சிக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, ஜாதி, பட்டப்படிப்புக்கான சான்று, ஆதார் அடையாள அட்டை எண் உள்ளிட்ட சான்றுகளுடன் பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி மின் அஞ்சல் மூலம் tntribalwelfare@yahoo.com என்ற முகவரிக்கு வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஒருவரது வாட்ஸ்அப்அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும். பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்று தேர்வு செய்தவர்களுக்கு இப்போது பிரச்சனை இல்லை.

 எபோதும் போல எதையும் படிக்காமல் “I Agree” என்று தேர்வு செய்தவர்களுக்கு 30 நாள் கேடு கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.இதற்குள் தங்களது தேர்வை மாற்றிக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்களது தெரிவை மாற்ற வேண்டுமென்றால்:

Whatsapp > Settings > Account > சென்று “Share My Account Info” தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.

இருந்தாலும் ஃபேஸ்புக்கின் இந்த நிலை பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. பலர் வாட்ஸ்அப் இல் இருந்து விலகி டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

27/8/16

சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா?

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வுகால பணிக்கொடை- மத்திய அரசு முடிவு



கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு திட்டம்

டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வுநடத்தி தேசிய வேலையுறுதி திட்டகம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய வேலையுறுதி திட்டம் துவங்கிய போது, ஊரக
வளர்ச்சித்துறையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஒன்றிய மேற்பார்வையாளர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது அவர்கள் தொகுப்பூதியமாகமாதம் ரூ.11 ஆயிரம் பெற்றுவருகின்றனர்.

மாநில முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் உள்ளனர். பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்துஅவர்கள் போராடி வருகின்றனர்.


மேலும்ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால் ஆப்பரேட்டர்களுக்கு பணிப்பளுவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம்தேர்வு நடத்தி பணிநிரந்தரம் செய்யஅரசு திட்டமிட்டுள்ளது

DIRECT RECRUITMENT OF SENIOR LECTURER / LECTURER / JUNIOR LECTURER IN SCERT 2016 - REJECTION LIST

உபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்ய தர்மபுரி CEO உத்தரவு - பணிநிரவல் - இல் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்க கூடாது செயல்முறைகள் - செயல்முறைகள்

ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை-எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள்

கடந்த சனவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் ஆதார் எண்ணை சேர்க்கும்பணியில் ஈடுபட்ட  ஆசிரியர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில்இப்பணிக்கான மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை. சட்டமன்ற  தேர்தலுக்கு 
பின் வழங்கப்படும் என்றுஅதிகாரிகள் தரப்பில் கூறிவந்தனர்.. ஆனாலும் வழங்கப்படவில்லை. தற்போதுஉள்ளாட்சித் தேர்தலும் வர இருப்பதால் அதற்குள்தக்க நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.

நன்றி-பாலமுருகன்-திருச்சி  

விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் - உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி மாணவிகள் கண்ணீர் விட்டு கதறல்

விபத்தில்மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன்அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளியில் ஆசிரிய–ஆசிரியைகள் மற்றும்மாணவ–மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போதுமாணவிகள் கண்ணீர் விட்டு கதறிஅழுதனர்.
  
விபத்தில்மூளைச்சாவு
நாகர்கோவில்கோட்டார் வாகையடி தெற்கு தெருவைசேர்ந்தவர் சுவாமிநாதன். இவருடைய மனைவி லதா. இவர்களது மகன் அவினாஷ்
(வயது12).



நாகர்கோவில்கோட்டார் ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்அவினாஷ் 7–ம் வகுப்பு படித்துவந்தான். கடந்த சில தினங்களுக்குமுன்பு கடைக்கு சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம்ஒன்று மோதியது. இந்த விபத்தில் சுயநினைவிழந்தஅவினாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார்ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். ஆனால் மாணவன் மூளைச்சாவுஅடைந்ததால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால்மாணவனை உயிர் பிழைக்க வைக்கமுடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களால் கைவிரிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக அவரது பெற்றோர் நெல்லையில்உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். அங்கும் உடல் நிலையில்முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவினாஷ்இதயம், சிறுநீரகங்கள் போன்றவை தொடர்ந்து இயங்கிவந்ததால், மகனை இழந்தாலும் அவனதுஉடல் உறுப்புகளாவது வேறு சிலர் மூலம்உயிர் வாழட்டும் என்று எண்ணிய அவரதுபெற்றோர் உடல் உறுப்புகளை தானம்செய்ய முன்வந்தனர்.

தகனம்
இதனைத்தொடர்ந்துசிறப்பு மருத்துவர் குழு அமைக்கப்பட்டு அதேமருத்துவமனையில் மாணவனின் இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், 2 கண்கள் ஆகிய உறுப்புகள்அவினாஷ் உடலில் இருந்து அகற்றப்பட்டன. இதில் இதயம் சிறப்பு ஆம்புலன்சுமூலம் போலீஸ் பாதுகாப்போடு நெல்லையில்இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம்சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு மற்றொருவருக்குபொருத்தப்பட்டது.

இதேபோல்சிறுநீரகம் ஒன்று மதுரைக்கும், கல்லீரல்திருச்சிக்கும் கொண்டு செல்லப்பட்டன.

மற்றொருசிறுநீரகம், உறுப்புகள் தானம் பெறப்பட்ட ஆஸ்பத்திரியில்உள்ள ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டது. 2 கண்கள் நெல்லையில் உள்ள ஒரு கண்மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவன் அவினாஷின் உடல்ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் நெல்லையில்இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட அவினாஷின்உடலுக்கு அந்த பகுதி மக்கள்திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.



அஞ்சலி
இந்தநிலையில்அவினாஷ் படித்த அரசு பள்ளியில்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதையொட்டி பள்ளி மைதானத்தில் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியைகலாதேவி, ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் ஆகியோர் மலர்தூவி அஞ்சலிசெலுத்தினர்.

அவினாஷின்ஆத்மா சாந்தி அடைய ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அஞ்சலி செலுத்திய ஒருமாணவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆசிரியர்கள் அவரது முகத்தில் தண்ணீர்தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். சில மாணவ–மாணவிகள் கண்ணீர்விட்டு கதறி அழுதபடியே அஞ்சலிசெலுத்தினர்.

அதைத்தொடர்ந்துபள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ. ஆறுதல்
இந்தநிலையில்நேற்று காலை மாணவன் அவினாஷ்வீட்டுக்கு நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் சென்றார். அங்கு அவினாஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போதுவக்கீல் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டுமற்றும் பலர் உடன் சென்றனர்.

2 பேரிடம்விசாரணை
இதற்கிடையேமாணவன் அவினாஷ் விபத்திற்கு காரணமானவாகனத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் நாகர்கோவில் கோட்டார்போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டவிசாரணையில் ஒரு மோட்டார் சைக்கிள்தான் மாணவன் மீது மோதியதுதெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான 2 பேரை போலீசார்பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திறமையானமாணவனை இழந்து விட்டோம்‘ பள்ளிதலைமை ஆசிரியை உருக்கம்

மாணவன்அவினாஷ் குறித்து பள்ளி தலைமை ஆசிரியைகலாதேவி உருக்கமாக கூறியதாவது:–

எங்களதுபள்ளியில் படித்து விபத்தினால் இறந்தஅவினாஷ் திறமையான மாணவன். பல்வேறு திறமைகள்அவனிடம் இருந்தது. கடந்த பள்ளி ஆண்டுவிழாவில் கூட அவினாஷ் நடனபோட்டியில் பங்கேற்று பரிசு பெற்றான். அவனுக்குமரக்கன்றுகள் நடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

ஓவியம்வரைவதிலும் கைதேர்ந்த மாணவன். பாரதிதாசன், பாரதியார்போன்றோரின் ஓவியங்களை சிறப்பாக வரைவான். ஒரு புகைப்படத்தை பார்த்தஒரு சில மணித்துளிகளில் அதுபோலவே வரையும் வல்லமை உடையவன். நல்ல திறமையான மாணவனை எங்களது பள்ளிஇழந்து விட்டது. பள்ளி மாணவ–மாணவிகள்சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரும் தங்களது குழந்தைகளை சாலைகளில்அழைத்து செல்லும்போது கவனமாக அழைத்துச்செல்ல வேண்டும்.


இவ்வாறுஅவர் கூறினார்.

SPD PROCEEDINGS-நாள்:26/8/16-ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் அளித்தல் சார்பு

DEE PROCEEDINGS- Date:24/8/16- RBSK Medical Scheme-Nodal officer for Students-Teacher details Called



DEE:பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:24/8/16-ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்



ஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும் பெண் பொறியியல் பட்டதாரிகள்

ஐ.டி. துறையில் பணி நெருக்கடியால் ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாத பரிதாப நிலை ஆகிய வற்றின் காரணமாக, பெண் பொறியியல் பட்டதாரிகளின் கவனம் தற்போது ஆசிரியர் பணியின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்களில் தாங்கள் பார்க்கும் வேலையை உதறிவிட்டு அவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். 
பொறியியல் பட்டதாரிகள் பி.எட். படிப்பில் சேரும் புதிய முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆண்டு பி.எட் படிப்பில் அறிவியல், கணித பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங் களுக்கு 154 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்தது. தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐ.டி.) பணி நெருக்கடியின் காரணமாக ஏற்படும் மனஉளைச்சல், குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியாத நிலை போன்ற காரணங்களால் ஆசிரியர் பணியை விரும்புவதாகவும் அதற்காக பி.எட் படிப்பில் சேருவதாகவும் கலந்தாய் வுக்கு வந்திருந்த பெரும்பாலான பெண் பொறியியல் பட்டதாரிகள் தெரிவித்தனர். பி.எட் படிப்புக்காக நிறைய பேர் முன்னணி ஐடி நிறுவனங்களில் பார்க்கும் வேலையை உதறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள ஆசிரியர் பணிதான் பெண்களுக்கு ஏற்ற பணி என்று அவர்கள் கருதுகின்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரி மொழியரசி கூறும்போது, “ஐடி வேலையில் இரவுப் பணி இருக்கும். திருமணம் ஆவதற்கு முன்பு ஷிப்டு முறையில் வேலை செய்வதில் சிரமம் இருக்காது. ஆனால், திருமணம், குடும்பம் என்று ஆன பிறகு இத்தகைய பணிச்சூழல் சரிப்பட்டு வராது. ஆசிரியர் வேலை, நிம்மதியான பணி” என்றார். முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பி.எட் படிப்பதற்காக வந்துள்ள சென்னை யைச்சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர் கூறும்போது, “ஐடி துறையில் மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். வேலையும் பார்க்க வேண்டும். குடும் பத்தையும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டு்ம என்று நினைக்கும் பெண் களுக்கு அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். சென்னை குரோம் பேட்டையைச் சேர்ந்த பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியான சிவகாமி சுந்தரியும் இதே கருத்தை சொன்னார். நாகப்பட்டினம் மயிலாடுதுறையைச் சேர்ந்த பி.டெக் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) பட்டதாரியான சுருதியின் தந்தை எஸ்.நாராயண பிரசாத் கூறும்போது, “முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய எனது மகள் பணியில் திருப்தி இல்லாத காரணத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஐடி பணியுடன் ஒப்பிடும்போது ஆசிரியர் பணி பாதுகாப்பானது, எந்தவிதமான நெருக்கடியும் இன்றி பணியாற்றலாம்” என்றார். திருநின்றவூரைச் சேர்ந்த வி.யாமினி என்ற பிடெக் பட்டதாரி கூறும்போது, “நான் பிளஸ்2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேரப்போகிறேன் என்றபோது ஆசிரியர் பயிற்சியில் சேருமாறு பெற்றோர் அறிவுரை சொன்னார்கள். ஆனால், நான் அதையெல்லாம் கேட்காமல் பொறியியல் படிப்பை தேர்வுசெய்தேன். எனக்கு குழந்தை பிறந்த பின்னர்தான் பெற்றோர் சொன்ன அறிவுரை புரிகிறது. எனவே, ஆசிரியர் வேலைக்காக பி.எட் படிப்பில் சேரப்போகிறேன்” என்றார். அம்பத்தூரைச் சேர்ந்த அனுப்பிரியா, பி.எட் படிப்புக்காக ஐடி வேலையை உதறிவிட்டார்.

டெல்லி கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த அவர், “திருமணம் முடிந்த பிறகு குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அருமையான பணி ஆசிரியர் பணிதான்” என்றார். பூந்தமல்லி அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பிஇ பட்டதாரி ரேவதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிடெக் பட்டதாரி திவ்யா பிரேம்குமார் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

ஜெ.கு.லிஸ்பன் குமார் சென்னை

NHIS-Nhis subscription deducted in your spouse salary should submit this form to drawing officer . No need to submit form with photos.

3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது

தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.  அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கின்றன.இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.   தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரிபள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர் வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.