யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/7/17

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.          தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு மாணவர் சேர்க்கை மத்திய அரசின் நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா  பல்கலைகழக தரப்பில் அறிவிக்கப்பட்டது. 
பி.ஆர்க் கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு  தரப்பில் அறிவிக்கப்பட்டது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க்  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ள  இடங்கள் நீங்கலாக மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி பி.ஆர்க் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இதற்காக  எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்கள் 1,000 பிற பிரிவு மாணவர்கள் 2,000 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 

இதுதொடர்பாக  அறிவிக்கை ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். ஜூலை 31ம் தேதி, ஆன்லைன் பதிவு செய்ய கடைசி  நாளாகும். ஆகஸ்ட் 7ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 12ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும். ஆகஸ்ட் 18ம் தேதி  நுழைவுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

வாட்ஆப் முலமாக தவறான தகவல் பரப்பியதற்காக ஆசிரியருக்கு விசாரணைக் கடிதம் - நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றத் திட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாக உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவர் அளித்த பேட்டி:
அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பிறகு, அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள், அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மாற்றப்படுபவர்கள், 3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி அடிப்படையிலேயே மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதனால், கடும் நிதி நெருக்கடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது. எனவே, அந்த மருத்துவக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ்வாறு அந்தக் கல்லூரி நேரடி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டாலும், பிற அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோன்ற கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படமாட்டாது. இப்போது அந்தக் கல்லூரியில் என்னவிதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றார்.
ரூ. 80 கோடி நஷ்டத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரி: இதற்கிடையே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியானது கடந்த 2016-17 கல்வியாண்டில் ரூ. 63 கோடி நஷ்டத்திலும், நிகழாண்டில் ரூ. 80 கோடி நஷ்டத்திலும் இயங்கி வருகிறது என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

இதில் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்மும், பிடிஎஸ் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பிற செலவுகளுக்கென ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை மருத்துவக் கல்லூரிக்குச் செலவாகிறது. இதனால், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, அரசுக் கல்லூரியாக மாற்றி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுசெல்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம் என பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
TNTET : புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
புதிதாக துவங்கப்படவுள்ள 250 அரசுப் பள்ளிகளுக்கு,ரூ7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாகபகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஊழியர்கள் தவிர அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தினக்கூலி, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளிகளை வைத்தே பணிகளை நிறைவேற்ற அரசு முயன்று வருகின்றது.இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்16549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு மாதம் ரூ.5000/- தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.பிறகு இரண்டு ஆண்டுகள் முடிந்து தொகுப்பூதியம் ரூ.2000/- உயர்த்தி 2014ம் ஆண்டு முதல் ரூ.7000/-ஆக சம்பளம் தரப்படுகிறது. ஆண்டு வாரியாக ஊதிய உயர்வை அரசிடம் இருந்து கேட்டு வாங்க முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நடந்து முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15000/- தொகுப்பூதியம், அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலை தரவேண்டி கேட்டதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.700/- உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7700/-வழங்கிவருவதாக பதிலளித்துள்ளார். ஆனால் ஊதிய உயர்வுக்கான அரசாணை எதுவும் இதுவரை அரசு வெளியிடவில்லை. சமவேலை, சமஊதியம் என்ற சமநீதியை அரசு அமுல் செய்தால் ஒழிய, ஒப்பந்தப் பணி செய்பவர்களின் வாழ்வு ஒருபோதும் முன்னேறாது.அது போல ஒப்பந்த பணி செய்பவர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச சம்பளம், மருத்துவ வசதி, குடும்பநலநிதி, இன்சூரன்ஸ் வழங்க அரசு முன்வரவேண்டும்.

ஒப்பந்த பணிசெய்பவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் விதமாக வருங்கால வைப்புநிதி பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்து அதற்கான தொகையை அளித்து பணி ஓய்வுபெறும் போது பென்சன் வழங்கவேண்டும். 58வயது முடிந்து பணிஓய்வில் சென்றவர்களுக்கும், பணியில் சேர்ந்து இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கும், அரசு மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்சமாக ரூ.3 இலட்சம் உடினடியாக வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IGNOU B.ED ENTRANCE EXAM 2017 FULL DETAILS:

2,200 ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!

Inauguration Ceremony of New Academic Curriculum by SCERT:

புதிய பாடத்திட்டம் உருவாக்குதல் சம்மந்தமாக சென்னையில்மூன்று நாள் கருத்தரங்கு நடைபெற்றது . தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை புதியதாக மெருகூட்டவும், ஆறாம் வகுப்பு முதல் ICT மூலம் கற்றுக்கொடுக்க புதிய பாடத்திட்டம் அமைக்கவும் இந்த கருந்தரங்கை அமைத்திருந்தனர்.
முதல் நாள் கருத்தரங்கு கல்வித்துறை செயலர் வரவேற்புரையோடு ஆரம்பித்தது. தமிழ்நாடு புதிய பாடத்திட்ட குழுவின் தலைவர் புதிய பாடத்திட்ட தேவையினை விளக்கினார். NCERT இயக்குநர் தேசிய கலைத்திட்டத்தை சார்ந்து தமிழக பாடத்திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்று தன் கருத்தை பகிர்ந்து கொண்டார். 
மெரூசியஸ் முன்னாள் கல்வி அமைச்சர் Armogum Parasurament மெரூசியஸ் நாட்டில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் தன்னுடைய வாழ்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை கூறி அதன்மூலம் பாடத்திட்டம் எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதை விளக்கினார். Consule Genral of Germany அவர்கள் புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்கு சில கருத்துக்களை கூறினார். கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் புதிய பாடத்திட்டம் சிறந்த பாடதிட்டமாக உருவாக வாழ்த்துக் கூறினார். SCERT இயக்குநர் விழாவுக்கு நன்றி சொன்னார்.
முதல் நாள் மதியம் கல்வித்துறை செயலரின் மென்மையான உணர்வுமிக்க பேச்சோடு ஆரம்பித்தது. எனக்கு மிகவும் பிடித்த இறையன்பு அவர்களின் நேர்மறையான சிந்தனைச் சிதறல்கள் அந்த அரங்கை அலங்கரித்தது. தொடர்ந்து பேராசிரியர் ராமானுஜம், டாக்டர்.பாலகுருசுவாமி, தியோடர் பாஸ்கரன், ஆஸ்திரேலிய ஆராய்ச்சிக் கல்வி கவுன்சிலில் இருக்கும் சாரா , பேராசிரியர் காமகோட்டி ஆகியோர் புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டிய முக்கியமான கூறுகளை தங்களுடைய அனுபவங்களுடம் பகிர்ந்து கொண்டனர்.
கலைவாணர் அரங்கில் முதல் நாள் நிகழ்வு நடைபெற்றது. அடுத்த இரண்டு நாள் நிகழ்வுகள் பாடவாரியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. தமிழ் பாடத்திற்கு அண்ணா நூலகத்திலும் மற்ற பாடப்பிரிவினருக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடை பெற்றது.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அந்த பாடப்பிரிவில் மிகச்சிறந்த ஒரு வல்லுநர், இரண்டு முதன்மை கருத்தாளர்கள் அமர்த்தப்பட்டனர். மேலும் நிஜமான கழத்தில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பாடமும் பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஐந்து பிரிவுகள் முதல் நாளும் ஐந்து பிரிவுகள் இரண்டாம் நாளும் நடத்தப்பட்டன. ஒவ்வெரு பிரிவிலும் இரண்டரை மணிநேரம் விவாதிக்கப்பட்டு கருத்துக்கள் தொகுக்கப்பட்டன.
நான் ICT மூலம் கற்றுக்கொடுக்க புதிய பாடத்திட்டம் அமைக்கும் குழுவில் அங்கு விவாதிக்கும் கருத்துக்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். இரண்டாம் நாள் முதல் அமர்வில் அறிவியல் பாடத்திட்டக் குழுவில் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். நான் அங்கு பகிர்ந்துகொண்ட கருத்துக்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
1. தற்போதய அறிவியல் பாடப்புத்தகம் கற்றுக்கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கிறது. கற்றுக்கொள்ள உகந்ததாக இல்லை. பாடப்புத்தகம் ஆசிரியர் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கிறது. மாணவர்கள் பயன்படுத்த இடம் குறைவாக இருக்கிறது.
2. புத்தகம் ஆசிரியருக்கு தனியாகவும் மாணவர்களுக்கு தனியாகவும் இருந்தால் நல்லது. மாணவர் பாடப்புத்தகத்தில் மாணவர் செயல்பாடு அதிகமாகவும், ஆசிரியர் பாடப்புத்தகத்தில் பாடத்திற்கான விளக்கம் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
3. அறிவியல் செயல்பாடுகளும் அறிவியல் சோதனைகளும் ஏராளமாக புத்தகத்தில் கொட்டிக்கிடக்குது. ஆனால் அதை செய்து பார்த்து எழுதுவதற்கு புத்தகத்தில் இடம் எதுவும் ஒதுக்கவில்லை. தனி நோட்டுப்புத்தகத்தில் எழுதலாம். ஆனால் புத்தகத்திலேயே அதற்கான இடத்தை ஒதுக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
4. ”வரையறை” களை குறைத்து செயல்பாடுகளை அதிகரிக்கவேண்டும். உதாரணமாக திசைவேகத்தை இடப்பெயற்சி / காலம் என வரையறுப்பதை விட மாணவன் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடக்க வைத்து அந்த தூரம் எவ்வளவு மணிநேரத்தில் கடக்கப்பட்டது என்பதையும் கண்டு பிடித்து திசைவேகத்தை கண்டுபிடித்து அதை புத்தகத்தில் ஒவ்வொரு மாணவர்களும் எழுதவேண்டும். அப்போது அவர்களுடைய திசைவேகம் தெரிந்து கொள்வதோடு திசைவேகத்தை அவர்களாகவே வரையறுப்பார்கள்.
5. தமிழ் கதைகள் படிக்கும் போது ஒவ்வொரு வரியாக படிக்கும் போதும் அந்த வரி காட்சியாக மனதில் ஓடும். குதிரை ஒன்றின் மேல் அரசர் ஒருவர் விரைந்து செல்கிறார் என்று வரிகளை படிக்கும் போது மனத்திரையில் அந்த காட்சி ஓடும். ஆனால் அறிவியல் பாடத்தை படிக்கும் போது அந்த காட்சியமைப்பு மனதில் வருவதில்லை. அந்த காட்சிப்படுத்தல் மனதில் தோன்றும் விதமாக சில விளக்கப்படங்கள் கொடுக்கப்படவேண்டும்.
6. அறிவியல் சோதனைகள் வகுப்பறையில் செய்யும் போது குழுவாகவே மாணவர்கள் செய்கிறார்கள். தனித் தனியாக அறிவியல் செய்முறைகளை செய்யும் போது தான் உண்மையான அறிவியல் கற்றல் நடக்கும். தினம் வீட்டில் ஒரு அறிவியல் சோதனை என்ற பகுதியை புத்தகத்தில் சேர்க்கலாம். வீட்டில் அன்றாடம் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி சோதனை செய்யும் வகையில் அவை அமைந்திருக்க வேண்டும்.
7. அறிவியல் பயிற்சிப் புத்தகம் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும். மாணவர்களுக்கென்றே தனியாக பாடப்புத்தகம் வழங்கினால் பயிற்சி புத்தகம் தேவையில்லை. அதிலுள்ள செயல்பாடுகளை மாணவர்களே செய்யவேண்டும். பதில்கள் திறந்த பதில்களாக இருக்க வேண்டும்.
8. புத்தகங்களில் பெறும் மாற்றத்தை விட கேள்வித்தாள்களில் மாற்றம் வேண்டும். மனப்பாடம் செய்து எழுதும் கேள்விகளை குறைந்து புரிந்து திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான கோள்விகளை குறைக்கவேண்டும்.
9. புத்தகத்திற்கு பின்னால் கேட்கப்படும் கேல்விகளை தவிர்க்கலாம்.
10. அறிவியல் பாடங்களில் வரும் நிகழ்வுகளை நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தக்கூடிய சம்பவங்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.
இந்த புதிய முயற்சி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் ஐயம் இல்லை வாழ்த்துக்களுடன் கல்விக்குரல் ..
Thanks to Bergin G Kadayal FB friend:

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை: மத்திய அரசு!

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை
என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதில் தொடர்ந்து பலருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டுவருகின்றன. அதில், பிறப்புச் சான்றிதழும் ஒன்று. இதுகுறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்வகையில், இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.ஏ.சிங், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை என அறிவித்துள்ளார். மேலும், பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக, ஆதார் கார்டு அல்லது பான் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக இருப்பின், அவர்களைப் பராமரித்த காப்பகத்திடமிருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை அளிக்கலாம். மேலும், புதிய பாஸ்போர்ட்டில் தனிநபர் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். எட்டு வயதுக்குக் கீழ் மற்றும் 60 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தில் பத்து சதவிகிதம் சலுகை அளிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது, தாய் அல்லது தந்தையில் யாராவது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டால் போதும். திருமணம் ஆனோர் திருமணச் சான்றிதழ்களைச் சமர்பிக்கத் தேவையில்லை'' எனவும் அமைச்சர் வி.ஏ.சிங் தெரிவித்திருக்கிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக CM CELLக்கு அனுப்பட்ட மனுவின் விவரம்!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


G.O.No.220, Dated , Dated , Dated 20thJuly2017 -Tamil Nadu Pension Rules, 1978 – Proviso to Rule 9 (1) (b) – Omitted - Orders – Issued.

21/7/17

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு?

வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்


அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன. மேலும், செயல்திறன் அடிப்படையில் கட்டாய பணிவிடுப்பையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தான் அதிகளவில் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் 4,29,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 6.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 3,28,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 4.7 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,800,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 7.4 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. அதேபோல உத்திரகாண்ட் மாநிலத்தில் 2,00,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 7.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது.



இந்தியாவில் மாதந்தோறும் மில்லியன் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. குறைந்த அளவில் தான் தொழில்கள் தொடங்கப்படுகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசுகள் சில வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 50 ஆகக் குறைக்கவும் திட்டமிட்டு வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து குறைக்க திட்டமிட்டுள்ளன. உத்திரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராமசாமி அரசின் எல்லாத் துறைகளிலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கூடுதாலாக பணி வழங்க முடியும் என்று மாநில அரசுகள் கருதுகின்றன.




இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில அரசைப் போல மத்திய அரசும் வேலையின்மையைப் போக்குவதில் சரிவையே கண்டு வருகிறது. பாரதிய ஜனதா பொறுப்பேற்பதற்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

7 PAY COMMISSION : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்
குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு கடந்த ஜூன் 30-ம் தேதி அறிக்கைஅளித்திருக்க வேண்டும். ஆனால், குழுவுக்கு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அளிக்காத நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புதிய ஊதியம் அமலாகுமா என்ற சந்தேகம் உள்ளது.

லோக்பால் சட்டப்படி தமிழகத் தில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. நாடாளு மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அங்கு சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தாவை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ''லோக்பால் சட்டத்தை அமல்படுத்த எந்தப்பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு அதில் திருத்தம் கொண்டுவர உள்ளது.


 திருத்தம் கொண்டுவரப்பட்ட பின், தமிழகத்தில் லோக்பால் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதிய வரையறையை நிர்ணயித்த மத்திய அரசு, படிகள் தொடர்பான தெளிவான வரையறையை அளிக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்'' என்றார்

FLASH NEWS : 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!

ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது:
அமைச்சர் செங்கோட்டையன்

*9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை:
அமைச்சர் செங்கோட்டையன்.

புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.சிறப் பாசிரியர்கள் முன்பு வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் தேர்வு
செய்யப்பட்டு வந்தனர்.
கடந்த 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பள்ளி ஆசிரியர்களைப் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை பின் பற்றத் தொடங்கியது. அந்த அடிப் படையில், சிறப்பாசிரியர்களையும்ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வுசெய்ய முடிவு செய்தது.

இதுதொடர்பாக கடந்த 17.11.2014 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம் நேர்முகத்தேர்வு போன்ற வற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 100மதிப்பெண் களில் எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப் பெண்கள் ஒதுக்கப்பட்டன.

எஞ்சிய 5 மதிப்பெண்ணில் உயர் கல்வித் தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளி அனுபவம் இருந்தால் 1 மதிப்பெண், தனியார் பள்ளி அனுபவம் எனில் அரைமதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (ஃபைன் ஆர்ட்ஸ்) சாதனை உள்ளிட்ட கல்வி அல்லாத இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு ஒன்றரை மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1,188 காலியிடங்கள்

எழுத்துத் தேர்வு நீங்கலாக மற்ற பிரிவுகளுக்கான 5 மதிப்பெண்களில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியிருந்தால் பல் வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகலாம். எனவே, அரை மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைப் போன்று வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு, பதிவுசெய்து காத்திருக்கும் ஆண்டுக்கு தகுந் தாற்போல் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கலாம் என்றும் அரசுக்கு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தசூழ்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அண் மையில் வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் நியமனம் தொடர் பான அறிவிப்பும் இடம்பெற்றது. 1,188 சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய ஜூலை 3-வது வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு 19-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

நேர்முகத் தேர்வு நீக்கம்

இந்தநிலையில், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிட்டது. ஏற்கெனவே வெளி யிடப்பட்ட அரசாணையில் குறிப் பிடப்பட்டுள்ளவாறு, சிறப்பாசிரியர் நியமன முறை அமைந்திருக்குமா அல்லது புதிய முறை கொண்டு வரப்படுமா என்று தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் தொழிலாசிரியர் பயிற்சியை முடித்த சுமார் 2 லட்சம் பேர் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.

உயர்அதிகாரி விளக்கம்


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “எழுத்துத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட அரை மதிப் பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றவும், ஓவியம், இசை, உடற்கல்வி, தையல் பாட ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அவசியமில்லை என்பதால்நேர்முகத் தேர்வை நீக்கிவிடவும் முடிவுசெய்துள்ளோம். சிறப்பாசி ரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

CPS-ஐ ரத்து செய்ய Mail நிரப்பும் போராட்டம்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

*குழு அமைக்கப்பட்டு 16 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை. எனவே, வல்லுநர் குழுவின் அறிக்கையை அரசிடம் அளிக்கும் வரை தினமும் mail அனுப்பி நமது உரிமையை மீட்டெடுப்போம்*
ஆகவே, CPS திட்டத்தில் உள்ள (& ஓய்வு பெற்ற) அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு தினசரி mail அனுப்பி, CPS-ல் உள்ள நமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வருவோம்!

*மின்னஞ்சல் முகவரிகள்:*
1. brijesh@mse.ac.in
2. finsec@tn.gov.in
3. plansec@tn.gov.in
4. cmcell@tn.gov.in
*CPS ஒழிய ஒன்றுபடுவோம்*
பின்வரும் கோரிக்கை அடங்கிய பதிவினை மேலே உள்ள 4 e-mail முகவரிகளுக்கும் mail அனுப்புவோம்!

- - - + - - - + - - - + - - - + - - + - - -

Subject :
PLEASE SUBMIT THE EXPERT COMMITTEE REPORT TO GOVT.

To

1. The Finance Secretary,
     Secretariat,
     St.George Fort,
     Chennai - 9
     finsec@tn.gov.in

2. The Chairman of Expert Committee,
    Plot No. E164, Door No.9,
    Chettinad House,
    Tiger Varadhachari Road,
    Besant Nagar first Cross,
    Chennai - 90

3. The Principle Secretory,
     Planning, Development & Special Execution Deportment,
     Secretariat,
     St.George Fort,
     Chennai - 9
     plansec@tn.gov.in

4. Dr.Brijesh C Purohit
    Professor,
    Madras School of Economics,
    Chennai - 25
    brijesh@mse.ac.in

Respected Sir / Madam,
According to the assembly announcement of former Honourable Chief Minister of Tamilnadu Miss.J.Jeyalalitha for the implementation of Old Pension Scheme on cancellation of Contributory  Pension Scheme an Expert Committee was constituted vide G.O.Ms.No:65, Finance (PGC) Department dated 26.2.2016.

After that thrice it was extended enabling the expert committee to finalize the report and yet the committee has not submit the report even after 16 months of time. So the government has not taken any action thereafter in deciding the issue.

It's most respectfully prayed that may be pleased to submit the report to the government as soon as possible, to take further action on the demand of implementation of Old Pension Scheme on cancellation of Contributory  Pension Scheme.

Thanking You!
Yours faithfully,
.................

DON SCHEME


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தயவு கூர்ந்து அனுப்புங்கள் -உங்களில்  நான் -PLS 

பி.எட். படிப்புகளில் சேரும் பொறியியல் (பி.இ.) மாணவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) தங்களால் எழுத முடியாத நிலை

பி.எட். படிப்புகளில் சேரும் பொறியியல் (பி.இ.) மாணவர்களுக்கு இன்னமும் ஆசிரியர் தகுதியே வழங்கப்படாததால் அவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் 
ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) தங்களால் எழுத முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இந்த மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்களும் 2015 -16 கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
இயற்பியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளின்கீழ், பி.எட். படிப்புகளில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்தப் புதிய திட்டம்
தொடங்கிய 2015 -16 கல்வியாண்டில் 60 பி.இ. மாணவர்கள் பி.எட். படிப்புகளில் சேர்ந்தனர். இவர்கள், இரண்டு ஆண்டு பி.எட். படிப்பை முடித்து இந்த ஆண்டு வெளிவருகின்றனர். இந்த நிலையில், பி.எட். முடிக்கும் பி.இ. மாணவர்கள், பள்ளிக் கல்வியில் எந்தப் பாடத்துக்கு இணையானவர்கள் என்பது இதுவரை வரையறுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கான பட்டியலிலேயே இவர்கள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர் பணி இவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது என்பதுடன், தனியார் பள்ளிகளும் இவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்தநிலையில், நிகழாண்டைப் பொருத்தவரை , சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2017 -18 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 81 பி.இ. மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 45 பேர் மட்டுமே பி.எட். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோதே, பி.எட். முடிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எந்தவிதமான பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவ்வாறு வரையறுக்கப்படவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அண்மையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எனக்கு புகார் வந்தது. பி.எட். முடிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதியை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைதான் முடிவெடுக்க வேண்டும். எனவே, இந்தப் புகாரை உடனடியாக அந்தத் துறைக்கு மாற்றி அனுப்பிவிட்டேன்' என்றார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் கூறும்போது, ' இந்தப் புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள விரைவில் புதிய பாடத் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்

அகிலஇந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் விரைவில்
அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த 3 நாள் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த பாடத்திட்டம் நிச்சயம் தரம் வாய்ந்ததாக இருக்கும். அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஒரு புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதையொட்டி 54,000 கேள்வி-பதில்கள், வரை படங்கள் அடங்கிய தொகுப்பு 15 நாள்களில் வெளியாகும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கணினி, வைஃபை வசதி ஆகியவற்றை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. பொதுத் தேர்வு நேரங்களில் சில ஊர்களில் மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வெழுத வேண்டியுள்ளது என்ற கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நிகழ் கல்வியாண்டில் அருகில் உள்ள மையங்களில் தேர்வெழுத வசதியாக கூடுதலாக 200 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம்.
இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை: புதிதாக வடிவமைக்கப்படும் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கமும் மாணவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்வித் தகுதியை மதிப்பிடும் தேர்வு முறையானது, அறிவியல் விளையாட்டு போன்ற எந்தக் குறிப்பிட்ட துறையில் அந்த மாணவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் மதிப்பிடும் வகையில் மாற்றப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இடம் பெறாத தகவல்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ருஷிகேஷ் சேனாபதி: புதிய பாடத் திட்டத்தில் மனப்பாட முறையைக் காட்டிலும், மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாதிரியான பாடங்கள், வடிவமைப்பை விரும்புகிறார்கள் என்பது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். புரிதலுக்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்படுவதன் மூலம் தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சாதிக்க முடியும்.

2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்: மு.ஆனந்தகிருஷ்ணன்

வரும் 2030-ஆம்ஆண்டு வரையிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என கலைத்திட்ட
வடிவமைப்புக்குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அவர் பேசியது:
தமிழகத்தில் 58,000 பள்ளிகளில் 5.7 லட்சம் ஆசிரியர்களும் 1.30 கோடி மாணவர்களும் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் வரும் 2030-இல் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்வார்கள். அந்த நேரத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அந்தச் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும். இனி வரும் காலங்களில் தேவைப்படும் போதெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். படங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஒவ்வொரு பாடமும் மாணவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கேற்ப ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவது அவசியம்.
பாடப்புத்தகங்கள், நூல்நிலைய புத்தகங்களை மட்டும் படிக்காமல் இதர தொழில்நுட்பக் கருவிகள், சேவைகளையும் பயன்படுத்த மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அடுத்து வரப்போகும் தேர்வு முறை மாணவர்களை அச்சுறுத்துவதாக இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் இருக்க வேண்டும். இந்தப் பாடத்திட்டம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்படவுள்ளது.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு: தற்போதுள்ள தலைமுறை இரண்டு விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்று கவனச் சிதறல். மற்றொன்று எந்த விஷயமும் எளிதாகக் கிடைக்கப் பெறுதல். இதனால் மாணவர்களின் சிந்தனைத் திறனும், போராட்டக் குணமும் குறைந்து விடுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். மனப்பாடத்தை மாபெரும் அறிவு என நாம் கொண்டாடும் வரை கல்விக்கு உய்வு இல்லை. அவர்களை ஒரே முறையில் சிந்திக்க நாம் பழக்கி விட்டோம். இதுதான் இப்போது சிறந்த வளர்ப்பு முறையாகக் கருதப்படுகிறது. மாணவர்களைப் பல வகைகளில் சிந்திப்பதற்கான சாளத்தை கல்வி உருவாக்கிக் கொடுக்குமேயானால் அந்தக் குழந்தை தனது உண்மையான ஆற்றலை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் நேசிக்கும்படி செய்து விட்டால் 50 சதவீதம் தானாக கல்வி நிறைவு பெறும்.
ஒவ்வொரு பாடத்தையும் வடிவமைக்கும்போது அதை வாழ்க்கையோடு எப்படி தொடர்புபடுத்தி அந்தக் குழந்தை புரிந்துகொள்கிறது என்பது முக்கியம். எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளவும் நாம் மனரீதியாக தயாராக இருந்தால்தான் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்கக்கூடிய பாடத்திட்டம் அமையும்பட்சத்தில் கல்வி கற்கண்டாக மாறும். கற்பது அனுபவமாக மாறும். இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கல்வியில் இடை நின்றவர் எனக் குறிப்பிட்டால் அவர் பி.ஹெச்டி முடிக்கவில்லை என்று அர்த்தம். அந்த அளவுக்கு அங்கு படித்தவர்கள் உள்ளனர். நமது கல்வி முறையில் மிகச் சரியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிவின் சிகரமாக தேசத்தை மாற்ற முடியும் என்றார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்: வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்.

பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,
அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்.சி.டி.இ.,யின் ncte-india.orgஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு, கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின் திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசை செய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில், கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம் பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வு செய்யப்படும்
பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்.சி.டி.இ.,யின் ncte-india.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு, கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின் திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசை செய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில், கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம் பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வு செய்யப்படும்