யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/17

TNPSC: VAO& GROUP IV Notification and Exam Date & Apply Last Date Deatils Announced

டெட்’ முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி !

பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியராக பணிபுரிவோர் குறித்த தகவல்களை திரட்டுமாறு, இயக்குனர் கார்மேகம், தொடக்க கல்வி
அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஆசிரியர் கல்விக்குழும ஆணைப்படி, ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர், மேல்நிலை வகுப்பில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆசிரியர் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதேபோல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க, இளங்கலை கல்வியியல் படிப்புடன், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு, ஆசிரியர் தகுதித்தேர்விலும்(டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2010 ஆகஸ்டில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011 ன் படி, மத்திய அரசு உத்தரவு ஏற்கப்பட்டது. எனவே, பள்ளிகளில் பணிபுரிய, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது.

ஆனால், அரசு வேலை பெற மட்டுமே, டெட் தேர்வு எழுத வேண்டுமென்ற, தவறான புரிதல் உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை போல, சுயநிதி பள்ளிகளிலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே, பணியில் அமர்த்த வேண்டுமென, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்யுமாறு, தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’டெட் தேர்வில் தேர்ச்சி பெற, 2019 வரை கால அவகாசம் உள்ளது. இதற்குள், ஆசிரியர் பணிக்கான அனைத்து குறைந்தபட்ச தகுதிகளையும், பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சுயநிதி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.


புதிதாக பணியில் சேர்ந்தோர், கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். எனவே, அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும், ஆசிரியர்களின் கல்வித்தகுதி விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என்றனர்.

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்!!!

பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால்
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். 'தொடக்க கல்வி துறையில் உள்ளது போல், உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும்,' என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நிர்ணயம், சம்பளம் உயர்வு, அரசு நிதி செலவிடல், ஆசிரியர் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன் ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட அனைத்து வகை வரவு செலவினங்களுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து பள்ளி தணிக்கை துறை சார்பில் தணிக்கை செய்யப்படுகின்றன.

இதற்காக சென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 32 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆடிட் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மண்டல கணக்கு அலுவலராக உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கீழ் கல்வித்துறையின் கண்காணிப்பாளர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தணிக்கையின் போது பள்ளிகளில் வரவு செலவிற்கான உரிய ரசீது இல்லாதது, விதி மீறி ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கல், நிதி முறைகேடு இருந்தால் ஆட்சேபனை (அப்ஜெக்ஷன்) தெரிவிக்கப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அவை சரிசெய்யப்பட்டால் தான் எந்த பணப் பலனையும் ஆசிரியர், அலுவலர்கள் பெற முடியும்.

தற்போது வரை தமிழக பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் நிலுவையில் உள்ளன. இவற்றை குறைக்க அவ்வப்போது கூட்டு அமர்வு கூட்டங்கள், சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் மாதத்தில் குறிப்பிட்ட பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். இங்கு தான் பல அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' கோலோச்சுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் 'ஆடிட்' என்றால் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். ஆடிட் வருவோருக்கு லாட்ஜில் தங்குவது, சாப்பாடு, தணிக்கை முடிந்து செல்லும்போது 'கவர்' என சகலமும் பள்ளி சார்பில் 'கவனித்து' அனுப்பினால் தான் ஆட்சேபனைகளுக்கு விமோசனம் கிடைக்கும்.

ஆனால் 'கவனிப்பு' இல்லாவிட்டால் 'அது சரியில்லை... இது சரியில்லை...,' என ஏராளமான ஆட்சேபனைகள் தெரிவித்து எழுதிவிடுவர். இதனால் முடிந்தவரை 'கவனித்து' அனுப்பி விடுவோம். இதில் உதவி பெறும் பள்ளிகளில் இஷ்டத்திற்கும் வசூலிப்பு நடக்கும். இதுதவிர ஓய்வு பெறும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதி பலன் கிடைக்க இத்துறையின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) அவசியம்.

அப்போதும் முடிந்த அளவு 'பணம் கறப்பு' நடக்கும்.பல்வேறு புகார்கள் தெரிவித்தும், இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால் இத்துறைக்கு 'டிரான்ஸ்பர்' ஆவதில் கடும் போட்டி ஏற்படுகிறது. முறைகேடு புகாரில் சிக்கி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் சிபாரிசால் இத்துறைக்கே பணிக்கு திரும்பும் சம்பவங்களும் நடக்கிறது. இத்துறையை சீரமைத்து மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.


தொடக்க கல்விமுறை பின்பற்றப்படுமா


தொடக்கக் கல்வித்துறையில் பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு அந்தந்த மாவட்டங்களில் தொடக்க கல்வி அலுவலர் கண்காணிப்பின் கீழ் உதவி தொடக்க கல்வி அலுவலர் பொறுப்பிலேயே தணிக்கை பணிகள் மேற்கொள்கின்றன. அதுபோல் உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் கண்காணிப்பாளர்களே தணிக்கை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கலாம். உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளை அத்துறைக்கே திருப்பி அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

டாக்டர்களின் சம்பள முரண்பாடு : அரசுடன் நாளை பேச்சுவார்த்தை

சேலம்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக
அரசு டாக்டர் சங்கங்களுடன் நாளை பேச்சு நடத்துகிறார்.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: மருத்துவ படிப்பை முடித்து, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களாக பணியில் இணைபவர்கள், முதல் நான்கு ஆண்டுகள் வரை, 56 ஆயிரத்து, 100 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் பணி செய்கின்றனர்.
அதன்பின்னரே, மத்திய, மாநில அரசு டாக்டர்களின் சம்பளத்தில், முரண்பாடு துவங்குகிறது.

ஐந்து முதல், 10வது ஆண்டு வரை, மாநில அரசு டாக்டர்களை விட, மத்திய அரசு டாக்டர்களின் சம்பளத்தில், மாதத்துக்கு, 5,000 ரூபாய் கூடுதல் என்ற வகையில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். அதே பணியில், 13 முதல், 20 ஆண்டுகள் முடிக்கும் நிலையில், மாநில டாக்டர்களை விட மத்திய அரசு டாக்டர்கள், மாதத்துக்கு, 39 முதல், 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு ஐந்து முதல், ஏழு லட்சம் ரூபாய் வரை, கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., முடித்து, பணியில் உள்ள டாக்டர்களின் சம்பள முரண்பாடு இதுவென்றால், எம்.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்பு டாக்டர்களின் சம்பள விகித முரண்பாடுகள் இதைவிட அதிகமாக உள்ளன. தமிழக அரசு டாக்டர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக, பிறப்பித்த அரசாணை எண், 354ல் உள்ள சில கருத்துக்களை முன் வைத்து, நாளை சென்னையில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், டாக்டர்கள் சங்கங்களை பேச்சுக்கு அழைத்துள்ளார். இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் குறித்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான
அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.


இனிவரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.

ஏழை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன் திட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு 
மனுவில் கூறியிருந்ததாவது:&
 பெருமாநல்லூரை சேர்ந்த ஏ.ரவி என்பவர் தன் மகனுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது மகன், பிளஸ்&2&வில் 59 சதவீத மதிப்பெண்தான் எடுத்துள்ளார். ஆனால், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். இதனால் அவரது மகனின் விண்ணப்பத்தை நிராகரித்தோம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்  ரவியின் மகனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று 2013&ம் ஆண்டு ஜூன் 20&ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:&
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் விதமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடனை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த கல்விக்கடன் என்பது இலவசமாக வழங்கப்படுவதில்லை. குறைந்த வட்டியில் திருப்பிச் செலுத்தும் விதமாக கடன் வழங்கப்படுகிறது. இது, சமுதாயத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் விதமாக செயல்படும் சமூக பொறுப்புள்ள திட்டமாகும். 

இந்த திட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக, நியாயமான கல்விக்கட்டணத் தொகையை கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது.
கல்விக்கடன் எந்தெந்த மாணவர்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து 2012&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27&ந் தேதி மத்திய நிதி மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்து, அந்த  தகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளில், கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, இவற்றின் அடிப்படையில், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு குறையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இந்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
எதிர்மனுதாரர் ஏ.ரவியின் மகனுக்கு 2 வாரத்துக்குள் கல்விக்கடன் வழங்கும்படி வங்கியின் மேலாளருக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.
தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், 'பல்கலை' என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இதுகுறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:யு.ஜி.சி., விதிகளின் படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக்கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இதுகுறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில உயர்கல்வித்துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பியுள்ள 
சுற்றறிக்கை:

உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் யு.ஜி.சி., விதிகளின்படி, எந்ததனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக்குறிக்குள் 'பல்கலைக்கு இணையாக கருதப்படும்' என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.
அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். தற்போது, பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற்கான ஆதாரத்துடன், வரும், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைக்க திட்டம்

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அந்த இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.அரசு பள்ளிகளில் 1,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் சங்கம் அமைத்து பள்ளிகளுக்கு பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிப்பதாக, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 662 இடங்களை நிரப்ப செப்டம்பரில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் 482 இடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாமா என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

ஓவியம், இசை, தையல் போன்ற சிறப்பு பாடங்களுக்கு உயர்கல்வியில் போதிய முக்கியத்துவம் இல்லை. எனவே அந்த பாடங்களை நடத்த பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து விட்டு, தற்போது காலியாக உள்ள இடங்களை பட்டதாரி பணியிடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.இதன்படி அரசு பள்ளிகளின் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இன்றி கூடுதலாக 500 பணியிடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

55 மாணவரை கைவிட்ட அரசு பள்ளி நடத்தும் கிராம மக்கள்

சிவகங்கை அருகே 55 மாணவர்களை அரசு கைவிட்டதால் கிராம மக்களே தங்களது சொந்த நிதியில் பள்ளி நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சி அலங்கம்பட்டியில் 1986ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் அலங்கம்பட்டி, பாப்பாகுடி, சாலுார் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தன்னார்வ நிறுவனம், பள்ளியை நடத்த முடியாமல் 2012 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்தனர். அங்கு பணிபுரிந்த ஆசிரியர் சங்கரபாஸ்கர், சொந்த முயற்சியால் ஆறு மாதங்கள் சம்பளம் வாங்காமலேயே பள்ளியை நடத்தினார்.
'பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என கல்வி அமைச்சர், கலெக்டருக்கு கிராமத்தினர் மனு கொடுத்தனர். ஆனால் பள்ளியை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து கிராமமக்களே தங்களது சொந்த செலவில் பள்ளியை நடத்தி வருகின்றனர். அவர்கள் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள்ளனர்.

அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி துவங்கலாம். விதிமுறை இருந்தும் பள்ளியை ஏற்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
கிராமமக்கள் கூறியதாவது:


2012-13 முதல் 5 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் 55 குழந்தைகள் உள்ளனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பாப்பாகுடி, மேட்டுப்பட்டி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர். வசதியில்லாதோரின் குழந்தைகள் தொடர்ந்து இங்கு பயின்று வருகின்றனர். தற்போது 25 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.

நாங்கள் தொடர்ந்து மனு கொடுத்ததின் விளைவாக 65 சென்ட் இடம், பள்ளி கட்டடம், தளவாட சாமான்களை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுக்க சொன்னார். 2015 ல் பதிவு செய்து கொடுத்தும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர், என்றனர்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பரமதயாளன் கூறுகையில், ''நான் அக்டோபரில் இருந்து தான் பொறுப்பு அலுவலராக உள்ளேன். அலங்கம்பட்டியில் பள்ளி துவங்குவது குறித்து 
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

TNPSC Group 4 & VAO Exam 2017 - Notification Announced:

நாளை வெளியாகிறது குரூப் - IV (CCSE -IV) தேர்வு அறிவிக்கை.
நாளிதழ்களில் சுருக்கமான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படும் என அரசாணை வந்திருப்பதால் விரிவான அறிவிக்கையை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு அறிவிக்கை நாள்: 14.11.2017
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017.
தேர்வு நாள்: 11.02.2018.
காலிப்பணியிடங்கள்: 9351.
இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவையர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகள் அடங்கும்.
2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏறத்தாழ 10000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இப்போது வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை போட்டித் தேர்வர்கள் தவற விடக்கூடாது. கடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பணி கிடைத்திட வாழ்த்துகள்.

13/11/17

" TET " முடிக்காத பட்டதாரிகளுக்கு, 'ஜாக்பாட்'

பள்ளிக்கல்வித்துறையில், 2010க்கு முந்தைய விளம்பரத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு தேவையில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2011, நவ.,15ல், தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.இந்த அறிவிப்பு வந்த பின், 2011, டிசம்பரில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால், பட்டதாரி ஆசிரியர்கள்
நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு தரப்பினருக்கு, டெட் அறிவிப்புக்கு முன்பே, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததால், டெட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், அதே பணி நியமனத்தில், டெட் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு டெட் கட்டாயம் ஆனது. பணியில் நியமிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.அதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, தகுதி காண் பருவம் முடித்த பின்னும், பணிவரன்முறை உத்தரவு வழங்கப்படவில்லை.
இது குறித்து, ஆசிரியர்கள் தரப்பில் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்ககம் புதிய
உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் விபரம்:
தேசிய கல்வி கவுன்சிலின் உத்தரவு, 2010ல், வெளியாவதற்கு முன், பணி நியமனத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, அதில் நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கு, டெட் தேர்ச்சி கட்டாயம் இல்லை. இந்த விளம்பரத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தாமதமாக நடந்தாலும், அவர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை.அவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பணிவரன்முறை உத்தரவு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு சலுகை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தகுதி காண் பருவம் முடிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கட்டாய கல்வி சட்டம், 2010 அக்., 23ல் அமல்படுத்தப்பட்டது.
இதில், ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதித் தேர்வு கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதால், 2011 நவ., 15ல், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதே மாதம், பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனால், அத்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களுக்கு, பணி வரன்முறை ஆணை வழங்கப்பட்டிருப்பினும், தகுதி காண் பருவம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் முன், பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, முழுமையாக தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.


இதனால், பணி நியமனம் பெற்றவர்களில், 2010 ஆக., 23க்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோர், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.
புதிய சலுகையாக, 'பணி நியமனம் பெற்றவர்களில், அதற்கான விளம்பரம், 2010 ஆக., 23க்கு முன் வெளியாகிஇருந்தால், அவர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவில் வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவத்தை முடித்து, ஆணை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்வதில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

B.Ed முடித்த தமிழ் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை :

B.Ed முடித்த தமிழ் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் 858 தமிழ் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், பி.எட்., முடித்ததால், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
'இவர்களுக்கு, பி.எட்., படிப்பு கட்டாயம் ஆக்கப்படவில்லை. பி.எட்., முடித்த தமிழ் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க வழிவகை இல்லை' என, கல்வி துறை செயலர்.

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில், 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி விபரம் மட்டும், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கு எதிரானது; பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நவ., 23 - 25 வரை நடக்க உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது, தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியலை, உடனடியாக வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, அவர்களையும் அழைத்து, பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு
உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவியில், 1,065 இடங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 23 முதல், 25 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.


இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, நிர்மலா மேல்நிலை பள்ளி மற்றும் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், வரும், 24, 25ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இன்ஜினியரிங் பாடங்களுக்கு, சென்னை தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில், வரும், 23 முதல், 25 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். கூடுதல் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு பொது தேர்வு இணையதளத்தில் விண்ணப்பம்

தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.அவரது அறிவிப்பு:
தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், நவ., 15ல் இருந்து, 25 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, சேவை மையங்களுக்கு சென்று, பதிவு செய்யலாம்.
விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 125 ரூபாய் மற்றும் இணையதள பதிவு கட்டணம், 50 ரூபாய் என, மொத்தம், 175 ரூபாயை பணமாக, மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம்

தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால், பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே பத்திரங்களை பெறலாம்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை, ஆன் லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை, 154 சார் பதிவாளர் அலுவலங்களில், செயல்பாட்டில் உள்ளது. இதை, மற்ற அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான கணினி உள்ளிட்ட நவீன கருவிகள், தகவல் பதிவு பணியாளர் ஆகிய வசதிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் வழங்கி உள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஆன் லைன் முறையில் உண்மை தன்மை சரி பார்க்கப்பட்டு, தவறுகள் இருந்தால், அவற்றை திருத்தும் வகையில், இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.

அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், நவ., 15 முதல், புதிய நடைமுறை துவக்கப்பட உள்ளது. இதற்காக, முதல்வர், துணை முதல்வரின் நேரத்தை பெற்று, முறைப்படி அறிவிகக, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையால், பதிவு முடிந்த சில நிமிடங்களில், பத்திரத்தை மக்கள் பெற முடியும்.

CM CELL - கணினி ஆசிரியர்களின் பணிக்காண கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையா அ பதிவு மூப்பு என்பது குறித்து அரசின் பரிசீலணையில் உள்ளது..

மூன்றே மாதத்தில் மக்கும் மக்காச்சோள கழிவு 'கேரி பேக்'

கோவை:மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட 'கேரி பேக்' பயன்படுத்த, கோவை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. இதில், குறைந்தது, 100 டன் வரை, பிளாஸ்டிக் கழிவுகளாக இருக்கின்றன. டீக்கடை, பழக்கடை, பூக்கடை, சந்தை, உணவகங்கள் மற்றும் ஜவுளி கடைகள் என, பல வகைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, மாநகராட்சி பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
பல வகைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, பயன்பாடு இன்னும் தொடர்கிறது. வணிக நிறுவனத்தினருடன் ஆலோசித்தபோது, 'நுகர்வோருக்கு ஏதேனும் ஒரு வகையில் பொருளை பார்சல் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. மாற்றுப்பொருள் அறிமுகப்படுத்தினால், மாறிக்கொள்ள தயாராக இருக்கிறோம்' என, தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து, பெங்களூருவில், மக்காச்சோள கழிவுகளில் 'கேரி பேக்' தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதன் மக்கும் தன்மை, சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா, விலங்கினங்கள் உட்கொண்டால், உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என, விஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டது.
மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை கொண்டது; பொடிப்பொடியாகி, மண்ணோடு கலந்து விடும். சுடுநீரில் கரைந்து விடும். தீ வைத்து எரித்தாலும், துர்நாற்றம் வீசாது என்பது தெரியவந்தது. அதன்பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் ஒரு பகுதியாக, 'லோகோ' அச்சிட்டு, கோவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வர்த்தக துறையை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் அழைத்து, கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி - லோகோ' அச்சிட்ட, மக்கும் தன்மையுள்ள 'கேரி பேக்' மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படும். படிப்படியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிக்கப்படும்.மக்காச்சோள கழிவில் இருந்து, மக்கும் தன்மையுள்ள கேரி பேக் தயாரிப்பது எப்படி என, கோவையில் உள்ள தொழில்முனைவோருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. தேவையான மூலப்பொருட்கள் தருவித்துக் கொடுக்கப்படும். தற்போது விலை அதிகமாக இருந்தாலும், அதிகப்படியானோர் பயன்படுத்த துவங்கினால், சற்று குறையும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.