யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/18

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30 வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது. 

63 இன்ஜி., கல்லூரிகள் நடப்பாண்டில் மூடல்?

மாணவர்கள் சேர்க்கை குறைந்ததன் காரண மாக, தமிழகத்தில், 63 இன்ஜினியரிங் கல்லுாரி கள் மூடும் நிலையில் உள்ளதாக, அண்ணா பல்கலை தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.
63, இன௠ஜி., கல௠லூரிகள௠ , நடப௠பாண௠டில௠, மூடல௠?

63, இன்ஜி., கல்லூரிகள் , நடப்பாண்டில், மூடல்?


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, அண்ணா பல்கலை வழியாக, பொது கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, மாணவர்களை, சென்னைக்கு வரவழைக்காமல், 'ஆன்லைன்' முறையில், அவர்கள் விரும்பிய கல்லுாரியில், இடங்களை தேர்வு செய்ய, வசதி செய்யப் 

பட்டது.இதற்காக, மாநிலம் முழுவதும், 42 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. 


கவுன்சிலிங்கை, 'ஆன்லைன்' வழியாக நடத்து வதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், பெரிய சர்ச்சையின்றி, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உட்பட, தொழிற்கல்வி, விளையாட்டு மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளையும் சேர்த்து, 74 ஆயிரத்து, 601 இடங்களே நிரம்பியுள்ளன. 97 ஆயிரத்து, 980 இடங்கள், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன.


மொத்தம், 136 கல்லுாரி கள் மட்டுமே, 50 சதவீத இடங்களை, கவுன்சிலிங் வழியாக நிரப்பியுள்ளன. மற்ற கல்லுாரிகளில், சேர்க்கை அளவு சரிந்து உள்ளது. எனவே இனி, கல்லுாரிகளை தொடர்ந்து நடத்த முடியுமா என, தனியார் கல்லுாரி நிர்வாகங் கள், ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் போது, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள் இருப்பதாக,அண்ணா

பல்கலை கூறியிருந்தது. -தற்போது, 487 கல்லுாரிகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து, 63 கல்லுாரிகள் மூடப் படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


மேலும்,இந்த ஆண்டு,47 கல்லுாரிகளில், வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எனவே, இந்த கல்லுாரிகளும், இந்த ஆண்டு மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பல்கலையில் தேங்கும் பைல்கள் மாணவர்கள் தவிப்பு

மதுரை, மதுரை காமராஜ் பல்கலையில் கன்வீனர் கமிட்டி கூடுவதில் இழுபறி நீடிப்பதால் நுாற்றுக்கணக்கான பைல்கள் தேங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டபின், பல்கலை நிர்வாகத்தை நடத்த சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் தலைமையில் உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், ராமகிருஷ்ணன் கொண்ட கமிட்டியை உயர்கல்வித்துறை நியமித்தது.துணைவேந்தர் இல்லாத நிலையில் இக்கமிட்டியின் 3 பேருமே பைலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் பூவலிங்கம், சந்தோஷ்குமார் சென்னையில் பெரும்பாலும் இருப்பதால் மூவரின் கையெழுத்தும் ஒருசேர கிடைப்பதில்லை. இதனால் ஏராளமான பைல்கள் தேங்கிக் கிடக்கின்றன. துறைகள், புலங்கள் வாரியாக மாணவர் சார்ந்த திட்டங்கள், முடிவுகள் மேற்கொள்ள முடியாமல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.பேராசிரியர்கள் கூறியதாவது:கன்வீனர் குழு அமைக்கப்பட்டாலும் அது இல்லாதது போன்ற நிலை தான் உள்ளது. கமிட்டி கூடாததால் மூவரின் கையெழுத்துக்களும் பைலில் பெறுவது அரிதாக உள்ளது. குறிப்பாக, எம்.பில்., பி.எச்.டி., படிப்பிற்கான நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் பலர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழிகாட்டிகள் (கைடு) இல்லை. துணைவேந்தர் இருந்திருந்தால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் கமிட்டி இதுகுறித்து அக்கறை காட்டவில்லை. இதுபோல் ஒவ்வொரு துறைகளிலும் ஏராளமான பைல்கள் தேங்கிக்கிடக்கின்றன, என்றனர்.

தனி ஊதியம் 750ஐ பதவிஉயர்விற்கு பிறகும் அடிப்படை ஊதியத்தோடு இணைந்து பெற்ற கூடுதல் தொகையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட SHOWCASE NOTICE


How to Delete Whatsapp Backup from Google Drive?

ஸ்மார்ட்போன் லொகேஷனை ஆஃப் செய்திருந்தாலும்,
பயனர்கள் செல்லும் இடங்களை டிராக் செய்வதாக கூகுள் சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு பயனர்களின் டேட்டா பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உலகம் முழுக்க சுமார் 200 கோடி பேரும், ஐபோன்களில் கூகுள் மேப்ஸ் மற்றும் சர்ச் அம்சம் பயன்படுத்தும் சில லட்சம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவை அனைத்திறஅகும் மத்தியில் கூகுள் உங்களது வாட்ஸ்அப் டேட்டாவையும் சேமித்துக் கொள்கிறது. அந்த வகையில் உங்களது சாட்கள் -- மல்டிமீடியா ஃபைல்கள் உள்ளிட்டவை சேமிக்கப்படுகின்றன.

எனினும் இவை கூகுள் டிரைவில் இடத்தை அடைத்துக் கொள்ளாது. அந்த வகையில் உங்களின் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் க்கள் நீங்கள் சின்க் செய்திருக்கும் கூகுள் டிரைவ் அக்கவுண்ட்டில் கூகுள் உங்களுக்கு வழங்கிய 15 ஜிபி டேட்டாவில் சேமிக்காது.


கிளவுட் போன்ற தளங்களில் டேட்டா இருக்கும் போதும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய மடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கூகுள் டிரைவில் இருக்கும் உங்களது வாட்ஸ்அப் டேட்டாவை அழிக்கலாம்:


1. கூகுள் டிரைவ் வலைத்தளத்திற்கு (https://drive.google.com) உங்களது டெஸ்க்டாப் மூலம் சென்று கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக் இன் செய்யவும்


2. ஸ்மார்ட்போனில் இந்த இணைய முகவரியை பயன்படுத்தினால், இடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் டெஸ்க்டாப் வெர்ஷன் "Desktop Version" எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


3. இனி வலதுபுறம் மேல்பக்கம் இருக்கும் கியர் ஐகானை க்ளிக் செய்யவும்





4. செட்டிங்ஸ் சென்று மேனேஜ் ஆப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

5. கீழே ஸ்கிரால் செய்து வாட்ஸ்அப் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

6. வாட்ஸ்அப் மெசன்ஜர் ஆப்ஷனின் கீழ் "Hidden app data" ஆப்ஷன் தெரியும் வரை காத்திருக்கவும்


7. ஆப்ஷன்களை க்ளிக் செய்து Delete hidden app data ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


8. டிரைவ் உங்களை ஒருமுறை மட்டும் எச்சரிக்கும், இதில் உங்களின் __ஜிபி வாட்ஸ்அப் மெசன்ஜர் டேட்டா டிரைவில் இருந்து அழிக்கப்பட்டு விடும். மீண்டும் டெலீட் ஆப்ஷனை க்ளிக் செய்து உறுதிப்படுத்தவும் என்ற தகவல் தெரியும். இப்போது இறுதியாக ஒருமுறை Delete ஆப்ஷனை க்ளிக் செய்து உறுதிப்படுத்தவும்.

அறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?

மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இரவில் மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன.

அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சனிக்கிழமை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கு வேலைநாள்

23/8/18

அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு:

மதுரை, திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட்  டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை (ஹைடெக் லேப்) ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 3,090 உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப்பள்ளிகளிலும் செயல்படுத்த முடிவாகியுள்ளது.  இதேபோல் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் வகுப்பறை என்ற அடிப்படையில் அறிவுத்திறன் (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் துவங்கப்பட உள்ளன.
இந்த இரு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களை செயல்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. பெரியளவிலான டெண்டர் பணிகளை பாடநூல் கழகம் இதுவரை கையாண்டதில்லை. இதுபோன்ற டெண்டர் பணிகளை அரசின் எல்காட் மூலமே மேற்கொள்ள வேண்டும். 
குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல தகுதியான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெண்டர் அறிவிப்பு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்ய வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், அரசுத் தரப்புக்கு அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா ?

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் தலைமையாசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் காலிப்பணியிடம் இல்லை எனக் கூறி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை.

ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளிலும் இதுவரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, காலிப்பணியிடத்தை நிரப்ப பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறுகையில்,' தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்' என்றார்.

நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு


பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’  தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த தேர்வுடன் என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக, நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019  மே மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும், JEE நுழைவுத்தேர்வு 2019 ஜனவரி 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும்!

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு
மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்ததை, மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “அடுத்த வருடம் முதல் (2019) நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். மேலும் அனைத்துத் தேர்வு முறையும் கணினி மயமாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், பிரகாஷ் ஜவடேகரின் கருத்தில் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள். மேலும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர் கொள்வார்கள்.
அதனால் அவர்களால் நீட் தேர்வை முழுக்கவனத்துடன் எழுத இயலாது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தக் கூடாது. 2019ஆம் ஆண்டில் நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும். அத்தேர்வு ஆன்லைன் முறைக்குப் பதிலாக, தேர்வு மையங்களில் வழக்கமான பேப்பர்-பேனா முறையிலேயே நடத்தப்பட வேண்டும்" என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து, மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் முறையில் இல்லாமல் வழக்கமான முறையிலே நீட் தேர்வு நடத்தப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான பதிவுகளைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும். 
நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.
10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.
நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director of Government Examination,
DPI campus,
College Road,
Nungampakkam,
Chennai - 600 034.
Ph: 044-2827 8286, 044-2822 1734.
email: dgedirector@gmail.com
Web: www.tn.gov.in/dge

Diksha Mobile App - New Version Updated ( 20.08.2018 ) :

22/8/18

சிபிஎஸ்சி தரம் எங்கே?- நீதிபதி கிருபாகரன் வேதனை!!!

'2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள்  பற்றிய கேள்வி என வழக்கறிஞர் புகார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா
?- நீதிபதி.
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்- சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தக சுமையை குறைக்கவும் 
, அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்களை படிக்க உத்தரவிட கோரி மனுவில் நீதிமன்றம் உத்தரவு.

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் திராட்சை!

திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. 
திராட்சை பழத்திலும், அதன் விதையிலும் உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு. சரியாக பசி இல்லாமல், வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தினால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதம். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு நல்லது. <திராட்சையை அரை டம்ளர் சாறில், சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். >சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
மார்பகப் புற்று நோய் தாக்கப்பட்ட பெண்களுக்கு, அருமருந்தாக உள்ளது திராட்சைப் பழம்! பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.

கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?

அனைத்து வங்கிகளும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். பயன்படுத்த முடியாத ரூபாய் வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். மாற்ற முடியாத ரூபாய் நோட்டுகள்: மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது

குப்பைகளின் மூலம் 3 மாதத்தில் 5 கோடி லாபம் பார்த்தவர்…

குழந்தைகளின் கைகளில் குப்பைகளைப் போல சிக்கியிருக்கும்….
வகையற்றுப் போன அந்த பொருட்களில் இருந்து புறப்பட்ட ஒரு பொறி தான், அந்த இளைஞனை கோடீஸ்வரனாக மாற்றியிருக்கிறது. பெயர் அக்ஷய் ஜெயின், வயது 29. பரீதாபாத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்களில், அவன் மட்டும்தான் மின்னணு கழிவுகளால் ஆன குப்பைகளை மூலதனக் கண்களோடு பார்த்தான். சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும் அதனை சுத்திகரிக்க முடிவு செய்தான். எல்லோருக்கும் மூளை மூலையிலேயே இருந்தபோது, அவன் மட்டும்தான் மூளையை முதலீடாக மாற்றினார். இன்று மாதத்துக்கு பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக வளர்ந்து கொண்டிருக்கிறான்.
உதயமானது ஆலை 2015 ஆம் ஆண்டில் நமோ ஈவேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஆலையைத் தொடங்கி, மின்கழிவுகளை சுத்திகரிக்கத் தொடங்குகிறான். அடுத்த 3 மாதத்தில் 5.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான். அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கிறான். அதற்கு ஏதுவாக 2017-18 ஆம் நிதி ஆண்டுகளில் 8 கோடி ரூபாயை சம்பாதித்து விட்டான்.
சுத்திகரிக்க திட்டம் பழைய மின்னணு பொருட்கள் எக்சேஞ்சாகவோ, வேர்க்கடலைகாரனிடமோ மாற்றுவது வழக்கம். இல்லையென்றால் தூக்கி எறிவது பழக்கமாக இருக்கிறது. இப்படி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தூக்கி எறியப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் அக்ஷய் .
மின்னணு கழிவுகள் மின்பொருட்களில் செயல்படாதவை அகற்றப்படுகிறது. லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பழுதுபார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒயர்கள் மற்றும் மெட்டல் போன்றவை சுத்திகரிக்கப்படுகிறது. இதில் தேவையயில்லாத கழிவுகள் அரசு அங்கீகரித்த குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 டன் மின்கழிவுகள் வீதம் ஆண்டுக்கு 5500 டன் கழிவுகள் சுத்திகரிக்கலாம் என்று அக்ஷய் தெளிவுபடுத்தினார்.
கல்வித் தகுதி டெல்லியில் பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பையும், கோஸ்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மெண்டில் பி டெக் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார் அக்சய். லண்டன் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தை முடித்து 2012 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.
மதிப்பெண் உதவாது நான் சாதாரணமான மாணவன் தான். படிப்பாளியும் இல்லை முட்டாளும் இல்லை. பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் ஆர்வம் இருந்தது. சும்மா இருக்கும்போது புத்தகம் படிப்பேன். மற்ற நேரங்களில் மனிதர்களின் அனுபவங்களில் இருந்து வாழ்க்கையை கற்றுக் கொண்டேன். மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஏனென்றால் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் ஆர்வம்தான் இருந்திருக்கிறது என்றார் அக் ஷய்
கடனில் தொடங்கிய ஆலை லண்டனில் படிப்பை முடித்து பரீதாபாத் திரும்பியதும் மாருதியில் 38000 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைகிறார். லண்டனில் மின்கழிவு மறு சுழற்சி முறையில் பின்பற்றிய நேர்த்தியை பார்த்த அக்ஷய், அப்பாவிடம் 1 கோடி ரூபாய் கடனை வாங்குகிறார். பரீதாபாத்தில் மறுசுழற்சி தொழிற்சாலையைத் தொடங்குகிறார்.
வணிக மந்திரம் முதலீட்டை விட 15 சதவீதத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற அப்பாவின் வணிக மந்திரம் கைகொடுப்பதாக கூறும் அக் ஷய், 30 விழுக்காடு கடனை வட்டியுடன் அப்பாவுக்கு செலுத்தி விட்டதாக தெரிவிக்கிறார்.
மின்னணு கழிவு சேகரிப்பு மின்கழிவுகளை வீடுகளில் மட்டும் சேகரிக்காமல் பல்வேறு இடங்களில் அதற்கான தொட்டிகளை வைத்து சேகரித்து வருகிறார்கள். இப்போது 23 மாநிலங்கள் மற்றும் 7 முகமைகள் மூலமாக மின்கழிவுகளை பெறப்பட்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. சாம்சங், கோத்ரெஜ், ஏசர் வோல்டாஸ் மற்றும் புளூ ஸ்டார் ஆகிய நிறுவனங்களிலும் சேதமடைந்த மின்பொருட்களை மொத்தமாக வாங்கி வருவதாக அக்சய் கூறுகிறார்

புதிய பாடங்கள் நடத்தியாச்சு : இன்னும் பயிற்சி இல்லை!!!

காலாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில், பிளஸ் 1 வணிக கணிதம் உட்பட சில புதிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை' என,ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையை மேம்படுத்தும் வகையில், பொதுத் தேர்வுகள், முடிவுகள் தேதியை முன்கூட்டியே அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புதிய பாடத் திட்டம், 12 ஆண்டுக்கு பின் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு, ஜூனில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில், 'கியூ.ஆர்., கோடு' உட்பட சிறப்பு அம்சங்கள் பாடங்களில் புகுத்தப்பட்டன. இதுபோன்ற நவீன முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
ஆனால், பிளஸ் 1 வணிக கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மே மாதம் பயிற்சி துவங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். காலாண்டு தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் மாதிரி வினா விடை கூட வழங்கப்படவில்லை.
ஆசிரியர்கள் கூறுகையில், 'ஜூனில் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. அன்று முதல் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒருமாதம் சென்ற பின், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியை துவங்கினர். 'பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல் திட்டம் இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது' என்கின்றனர்.

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம்

சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான
பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் அறிவானந்தம். இவரது அலுவலகத்தில் கடந்த 17.10.2017ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 50 பறிமுதல் செய்தனர். உடனடியாக அவரை கள்ளிக்குடிக்கு மாற்றினர். பின்னர் கடந்த ஜூலை 31ல் ஓய்வு பெறுவதற்கு முன்தினம் அவரை சஸ்பெண்ட் செய்தனர். அந்த உத்தரவை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதித்து தனக்குரிய பணப்பலன்களை வழங்கக் கோரி அறிவானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ''குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற காரணத்திற்காக ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையில் பங்ேகற்காமல் இருக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை தினசரி அடிப்படையில் விரைவாக விசாரிக்க வேண்டும். 7 வேலை நாளுக்கு மேல் விசாரணையை ஒத்திவைக்காமல் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் 1981ம் ஆண்டு சட்டத்தில் சில திருத்தம் செய்யலாம். இதன்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியருக்கு முதல் 6 மாதத்திற்கு 75 சதவீத பிழைப்பூதியம் வழங்க வேண்டும். 
6 மாதத்திற்குள் விசாரணை முடியாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர் ஏதேனும் நீதிமன்ற உத்தரவு பெறாத நிலையில் 75 சதவீத பிழைப்பூதியத்தை 50 சதவீதமாக குறைக்கலாம். ஓராண்டுக்கும் மேல் விசாரணை இழுத்தடிக்கப்பட்டால் அதிலிருந்து 25 சதவீதத்தை குறைக்கலாம். சஸ்பெண்ட் ஆகி ஓராண்டுக்கும் மேலான நிலையில் அவர் மரணமடைந்தால், விசாரணை தாமதத்திற்கு அவர்தான் காரணம் எனத் தெரிய வந்தால், அவரது வாரிசுதாரர்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டியதில்லை," என்று உத்தரவிட்டார்.