யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/18

ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா?



தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல்,  அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்க்கும் வேலை தேவையில்லை. 

ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும். செல்போன் நிறுவனங்களின் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசியில், அந்த செல்போன் நிறுவனத்தின் செயலியை Open செய்து, கையடக்க விரல் ரேகை Scanner ஐ பொருத்தி, நமது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, மிகச் சிறிய விரல் ரேகை Scanner ல், நமது விரலை வைக்கச் சொல்கிறார்கள்.

 அடுத்த நொடியே நம் புகைப்படத்துடன் கூடிய நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும், சம்மந்தப் பட்ட செல்போன் நிறுவனத்தின் கைபேசியில் வருகிறது.

இதன் பின், சிம் கார்டு எண், அந்த சிம் கார்டுக்கான பத்து இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்து, செல்போன் நிறுவனத்தின் Terms and Conditions ல் டிக் செய்து, இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்ற விதத்தில் மீண்டும் மிகச் சிறிய விரல் ரேகை ஸ்கேனரில் விரலை வைக்கச் சொல்கிறார்கள்.

நாம் அந்த செல்போன் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு விட்டோம், என்பதை உணர்த்த அந்த நிறுவனத்தின் செயலி உள்ள கைபேசியில் பச்சைக் கலரில் டிக் வந்து விடுகிறது. 

அந்த நொடியே, புதிய சிம் கார்டு செயலாக்கம் செய்தாகி விட்டது. உடனே நீங்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். அதுபோலவே உடனே சிம் கார்டு செயல்படுகிறது.

இதற்கு தேவை, தொடு திரை கைபேசி, விரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவி, இவை செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலி மற்றும் இணைய தள இணைப்பு. அவ்வளவு தான். 

இப்போது ஆசிரியர்களின் ஆன்லைன் வருகைப் பதிவுக்கு இதை நடைமுறை படுத்த முடியுமா? எனப் பார்ப்போம்.

ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு, தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகைப் பதிவுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியரிடம் கைவிரல் ரேகையை ஸ்கேன் செய்யும் கருவியை வழங்கி, அதனை தலைமை ஆசிரியரின் கைபேசியில் இணைத்து விட்டால், ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வருகைப் பதிவு தயார்.

இதற்கு அதிகபட்சம் ரூ,1000 தான் செலவாகும் என கூறப்படுகிறது.

பள்ளிக்கு வந்ததும் தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகை பதிவுக்கான செயலியை Open செய்து, நமது ஆதார் எண்ணை பதிவு செய்து, மொபைலுடன் இணைக்கப்பட்ட ஸ்கேனரில் விரல் ரேகை வைத்தால், நாம் பள்ளிக்கு வந்து விட்டோம் என பதிவாகும்.

எந்த நேரம் வருகையை பதிவு செய்தோம், எந்த இடத்திலிருந்து பதிவு செய்தோம் என்பது உள்ளிட்ட விவரங்கள் எமிஸ் இணையதள சர்வரில் பதிவாகி விடும்.

இம்முறை பதிவை, காலை 9.00 மணி, மதியம் 12.40 மணி, மதியம் 1.30 மணி மற்றும் மாலை 4.00 மணி என நான்கு வேளை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை கட்டளையிட்டால், OP அடிக்கும் ஆசிரியர் களின் நிலை படு திண்டாட்டமாகி விடும்.

இது போன்ற முறை விரைவில் நடைமுறை படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

எது வந்தாலும் சந்திக்க தயாராகவே இருப்போம்!

இனி வெள்ளி தோறும் CEO, DIET, BEO தலைமையில் "Team Visit" - Proceedings :

TN Schools App - ஆன்லைன் வருகைப் பதிவு பற்றிய சில ஆலோசனைகள்:

TN schools செயலியில், ஒவ்வொரு ஆசிரியரும் எந்த வகுப்பிற்கு கற்பிக்கிறார் என்பது பல பள்ளிகளில் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், அவர் வகுப்பிற்கு மட்டும் ஆன்லைன் வருகையை பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுமானவரை, ஒரே கைபேசியிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வருகை பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது.

ஆசிரியர்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கற்பிக்கும் வகுப்பு போன்ற அனைத்து விவரங்களும் EMIS இணைய தளத்தில் பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் அவர் வகுப்பிற்கு மட்டும், அவரின் சொந்த கைபேசி மூலம் மாணவரின் ஆன்லைன் வருகை பதிவு செய்வதால், அன்றைய தினம் அவர் பள்ளிக்கு வருகை தந்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து வகுப்பாசிரியர்களும் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆன்லைன் வருகை பதிவு செய்துள்ளனரா?

பச்சை கலர் டிக் அனைத்து வகுப்புகளுக்கும் காண்பிக்கிறதா? என்பதை தலைமை ஆசிரியர் தினமும் இரண்டு வேளைகளிலும் (மு.ப. / பி.ப)  சரி பார்ப்பது நல்லது.

ஆன்லைன் பதிவு நேரம்  முற்பகல் 9.30 மணி மற்றும் பிற்பகல் 1.30 மணி.

 ஏதேனும் ஆசிரியர் சரியாக பதிவிடா விட்டால், தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்க நேரிடும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விரைவில் ஆசிரியர்களுக்கு ஆதார் எண் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

காலை 9.30 க்கு மேல் மதியம் 11.55 வரை தாமதமாக வரும் மாணவர்களையும் பதிவு செய்ய இயலும். ஆனால் ஆசிரியர் மறதியாக 10 மணிக்கு பதிவு செய்தால், அனைத்து மாணவர்களும் தாமதமாக வந்ததாக கணக்கிடப்படும். மேலும் ஆசிரியர் தாமதமாக வருகை புரிந்தாரா? என்ற சந்தேகமும் எழ வாய்ப்புள்ளதால் மிகச் சரியாக காலை 9.30 மணிக்கு பதிவு செய்வது நல்லது.

ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் ஆன்லைன் வருகைப் பதிவு செய்வதால் சர்வர் மெதுவாக வேலை செய்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சர்வரின் திறன் மேம்படுத்தப்பட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலும்.

பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்

பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த வகையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ. ஆர்.டி., சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி பாடத் திட்டம் அமலில் உள்ளது.இதன் அடிப்படையில், மாநிலங்கள், தங்கள் பாடத் திட்டங்களை உருவாக்குகின்றன. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., பாட புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில், மாணவர்களுக்கு அதிக சுமை தரும் பாடங்கள் உள்ளதாக, பல்வேறு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, என்.சி.இ. ஆர்.டி.,யின் பாடத் திட்டத்தை பாதியாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மாணவ - மாணவியர், வெறும் பாட புத்தக படிப்பு மட்டுமின்றி, திறன் வளர்க்கும் முயற்சிகளி லும் ஈடுபடுவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

100 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி :

நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் தாலுகாக்களை உள்ளடக்கி, 200க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளிகளில், ஆரம்பம் முதல் தமிழ் வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.சில ஆண்டுகளாக, ஆங்கில வழி கல்விக்காக, பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடியதால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன. சில அரசு பள்ளிகளில், சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே இருந்ததால், அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கி, தரமான கல்வி அளிக்கும் வகையில், பள்ளி தலைமையாசிரியர், பி.டி.ஏ., உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கைக்காக, வீடு, வீடாகச் சென்று ஆங்கில வழி கல்வி துவக்குவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும், இரண்டு ஆண்டுகளில், 100 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியின் பிரதிபலிப்பாக, இனி வரும் ஆண்டுகளில், மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

BT TEACHERS - Staff Fixcation Details reg Proceedings!

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது: தேர்ச்சி பெற வரும் மார்ச் 31 வரை கால அவகாசம்

த்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 302 சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்ய கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு போட்டி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் பணியாற்றி வந்த 243 சத்துணவு பணியாளர்கள், 59 அங்கன்வாடி பணியாளர்கள உட்பட மொத்தம் 302 பி.எட். பட்டதாரிகளை சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க சிறப்பு போட்டி எழுத்துதேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-12ம் ஆண்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அதில் தெர்வு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக தெளிவுரை கோரப்பட்டது. இதனை தொடர்ந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில் 2011-12ல் நடைபெற்ற சிறப்பு தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் கருத்துரு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பான அரசின் கடிதத்தில் விலக்கு அளிக்ககோரும் கோரிக்கையை நிராகரித்தும் அவர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதி வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு:

தொடக்க கல்வித்துறையில் நீண்டநாள் பள்ளிக்கு வராமல் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 1,200க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக வகுப்பு எடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்குகளுக்கு தீர்வு காணுதல், உள்ளிட்ட திறன்களில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
சில ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு, வராததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்காக, மாவட்ட வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ''நீண்டநாள் விடுப்பில், மூன்று ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயர் பட்டியலை, இயக்குனரகத்துக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்,'' என்றார்

2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்


தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9,  பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர்.  க்யூ.ஆர். குறியீடு,  பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள்,  பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி  2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

இதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது:  தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இவற்றில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

இதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம்,  ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.

176 பாடங்கள் வடிவமைப்பு:   இந்த நான்கு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும்.  ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும்.  தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.  இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

வரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

கல்விச்சிறகுகளின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் WhatsApp குழுவில் பெற  7010284757 என்ற எண்ணை இணைக்கவும்.

ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று கூறிய அவர், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.

2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த கவுன்சலிங் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் : கல்வித்துறை செயலருக்கு உத்தரவு:


மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பலர் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இடமாறுதல் பெற்றுள்ளனர். எனவே, 2018-19ல் கவுன்சலிங்கில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.ஆதிகேசவலு ஆகியோர், ‘‘கல்வித்துறையின் மே 29ல் வெளியான அரசாணைப்படி 2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த கவுன்சலிங் தொடர்பான அதிகாரபூர்வ ஆவணங்களை கல்வித்துறை முதன்மை செயலர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதில், பணி மாறுதல் பெற்றவர்களின் விபரம் இருக்க வேண்டும். மேலும், கடந்த ஜூன் 18க்கு பிறகு பொதுமாறுதல் மூலம் எத்தனை மாறுதல் வழங்கப்பட்டது. முந்தைய கவுன்சலிங்கில் எத்தனை காலியிடம் ஏற்பட்டது. அந்த காலியிடம் பிறகு காட்டப்பட்டதா, எப்படி நிரப்பப்பட்டது, மாறுதல் பெற்றவர்கள் குறிப்பிட்ட கட்ஆப் காலத்தை பூர்த்தி செய்திருந்தனரா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  ஒட்டுமொத்தமாக 2018-19ல் கவுன்சலிங் மூலம் மாறுதல் பெற்றவர்கள் விபரம், அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 3க்கு தள்ளி வைத்தனர்

பள்ளி நேரத்தின்போது ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் - CEO :

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு !

2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இளங்கோவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது

DSE - தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) - மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில் புதுப்பித்தல் - காலக்கெடு 15.12.2018 அன்று முடிவடைகிறது.



14/12/18

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் நடவடிக்கை உறுதி: செங்கோட்டையன்

ஈரோடு: ''அரசாணையை எரித்தது தவறு என்ற ரீதியில், '17 பி' சார்ஜ் வழங்கப்பட்டுள்ள, 1,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், எங்கெங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்த பகுதி, எம்.எல்.ஏ., - அமைச்சர்கள் உதவியுடன், 7,500 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளோம். 'டெட்' தேர்வு எழுதி பாஸ் செய்த, அந்தந்த பகுதியில் உள்ளவர்களும், பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில், கூடுதலாக, 6,500 பேருக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கும், பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.அவர் ஆசிரியரும் அல்ல; பெற்றோரும் அல்ல. அவர் கூறி உள்ள குற்றச்சாட்டுக்கு, அரசு உரிய பதில் தெரிவித்துஉள்ளது.புதிய திட்டத்தில், 15 குழந்தைகளுக்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதி தராது என தெரிவித்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை.அரசாணையை எரித்ததால், 1,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, '17 பி' சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்களே அரசாணையை எரிப்பது எப்படி ஏற்புடையது. சட்ட ஆணையை கிழித்ததற்கே, சட்டசபையில், அன்பழகன் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் பதவி இழந்தனர். அரசாணை, அரசியலமைப்பு சட்டம் என எதுவாக இருந்தாலும், அதை எரித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்காக, அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 1, 'அட்மிஷன்' முன்பதிவு துவக்கம்

புதிய கல்வி ஆண்டுக்கு, இன்னும், ஆறு மாதங்கள் உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் தற்போதே, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏப்ரலில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு மதிப்பெண் வந்த பின், ஜூனில் தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.ஆனால், தனியார் பள்ளிகள் தற்போதே, பிளஸ் 1க்கு, 'அட்வான்ஸ் புக்கிங் அட்மிஷன்' துவங்கியுள்ளன. 10ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியரிடம், பிளஸ் 1க்கு எந்த பிரிவு வேண்டும் என, பதிவு செய்யப்படுகிறது.முன்பதிவு விண்ணப்பத்தில், பொது தேர்வில் எவ்வளவு பெற வாய்ப்புஉள்ளது என, உத்தேச மதிப்பெண் பெற்று, பிளஸ் 1ல் விரும்பும் பிரிவில் இடம் ஒதுக்கப்படுகிறது.சில பள்ளிகள், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான பயிற்சியை சேர்த்து வழங்குவதாக கூறி, கட்டணம் வசூலிக்கின்றன.அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்ட இடங்களை காட்டி, மீதமுள்ள இடங்களை, கல்வி ஆண்டு துவங்கும் போது, அதிக விலைக்கு விற்கவும் இடைதரகர்கள் தயாராகியுள்ளதாகவும், புகார் எழுந்துள்ளது.சென்னை, கோபாலபுரத்தில் உள்ள பிரபல பள்ளியின் முகப்பேர், சூளைமேடு கிளைகளில், பிளஸ், 1 அட்மிஷனுக்கு, ஜன., 12க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, அறிவிக்கப்பட்டுஉள்ளது.எனவே, பள்ளி கல்வி துறை உடனடியாக தலையிட்டு, பிளஸ் 1 அட்வான்ஸ் புக்கிங் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வரும் 15, 16ல் கனமழை

சென்னை: 'வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.இது, படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.இது குறித்து, சென்னை மண்டல வானிலை மைய துணை பொது இயக்குனர், பாலசந்திரன் அளித்த பேட்டி:தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், தமிழக, வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் இடையே கரையை கடக்கும்.இதனால், 15, 16ம் தேதிகளில், தமிழக, வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நாளை இரவு முதல், வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். மணிக்கு, 75 கி.மீ., வேகம் வரை, சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளது.எனவே, வங்க கடலின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதிகளுக்குள், 16ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு…!!

                                                
கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற இருந்த புள்ளியியல் ஆய்வாளருக்கான தேர்வு கஜா புயலின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தத் தேர்வினை வரும் 23 ஆம் தேதி நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான புதிய நுழைவுச் சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றையை தினம் நடைபெற இருந்த உதவி நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Flash News : அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்கள் சரண் செய்தல் இயக்குனர் செயல்முறைகள் - SURPLUS POST DETAILS -REG

2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் ஊழல் லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி வழக்கு: நாளை இடைக்கால உத்தரவு!

2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கை, இடைக்கால உத்தரவிற்காக  நாளைக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஆசிரியர்கள் பொது இடமாறுதல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெற வேண்டும். இடமாறுதலுக்கான காரணம் அந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடைபெறாமல், ஊழல் அடிப்படையில் நடந்துள்ளது.

மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில்  இடமாறுதல் நடைபெறும். தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள்,  வடமாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட மாட்டார்கள். ஆனால், இவ்வாண்டு நடைபெற்ற ஆசிரியர் பொது இடமாறுதலில், விதிகளை மீறி பல இடமாறுதல்கள் நடைபெற்றுள்ளன. இதற்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல கோடிகளை எட்டும். இதனால் பிற மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற இயலாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வெறும் 5 மாதங்கள் பிற மாவட்டங்களில்  பணியாற்றியவர்கள், லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

பதவிஉயர்வையும் லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர். வெளிப்படையின்றி, லஞ்ச அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்த ஆசிரியர் பொது இடமாறுதல், பிற ஆசிரியர்களின் நலன்களை பாதிக்கும் வகையில்உள்ளது. எனவே, லஞ்ச அடிப்படையில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் குறித்து புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அரசாணை எண் 403 அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்.  ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 11,990 பேர் இந்த கலந்தாய்வில் பங்கெடுத்ததாகவும், விதிப்படி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்காக நாளைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.