யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/10/15

துண்டிக்கப்படும் இணைப்புக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் : டிராய் அதிரடி உத்தரவு

வாடிக்கையாளர்கள் செல்போனில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு (கால் டிராப்) விடுகிறது. இப்படி துண்டிக்கப்படும் இணைப்புக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக டிராய்க்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இந்நிலையில் டிராய், நேற்று வெளியிட் ட உத்தரவில் கூறியிருப்பதாவது;

துண்டிக்கப்படும் இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். 


நாள் ஒன்றுக்கு 3 இணைப்புக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். இணைப்பு துண்டிக்கப்பட்ட 4 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் வாடிக்கையாளர் கணக்கில் செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதுபோல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாத பில்லில் இதுகுறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும். இதை வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக