யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/10/15

அரசு உதவிபெறும் பள்ளிகளில்கணிப்பொறி ஆசிரியர் தேவை

காரைக்குடி:அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும்,என தனியார் பள்ளி மாநில செயலாளர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேல்நிலை பள்ளிகளில் 2004-05-ம் ஆண்டு முதல் பாடத்தொகுதிகள் மாற்றியைமக்கப்பட்டன. பாடத்தொகுதி ஒன்றில் கணிதம்,இயற்பியல்,வேதியியல் பாடங்களோடு, கணிப்பொறி அறிவியல் பாடமும்,பாடத்தொகுதி மூன்றில் கணக்கு பதிவியல்,வணிகவியல்,பொருளியல் பாடங்களோடு கணிப்பொறி அறிவியல் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

கணிதம், இயற்பியல்,வேதியியல்,வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பிரிவின் கீழ் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் கணிப்பொறி ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி நிர்வாகத்தால் தொகுப்பூதியத்தால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.வளர்ந்து வரும் கால கட்டங்களில் கணிப்பொறி தேவை இன்றியமையாததாக உள்ளது. தமிழக முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட உதவி பெறும் பள்ளிகளில், 35 ஆயிரம் மாணவர்களுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். கணிப்பொறி அறிவியல் பாடத்தொகுதியை அங்கீகரித்த அரசு, ஆசிரியரை அங்கீகரிக்கவில்லை. எனவே, அவர்களை அரசு உதவி பெறும் பிரிவின் கீழ் வரையறை செய்து, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும், என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக