யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/10/15

ஜெ., வாக்குறுதியை நம்பி ஏமாந்தோம் ஆசிரியர் சங்கம் ஆதங்கம்

சிவகங்கை:“கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெ.,வின் வாக்குறுதியை நம்பி, ஆசிரியர் சமுதாயம் ஏமாற்றத்தை சந்தித்தோம்,” என சிவகங்கையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

2009ல் 6வது சம்பள குழுவில் மத்திய அரசுக்கு இணையாக சம்பள குழுவை தமிழக அரசு அறிவித்தது. குறிப்பாக இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியருக்கும் குறைவான சம்பளத்தை தமிழக அரசு அறிவித்தது. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெ., “ஆசிரியர் சம்பள பாதிப்பை தீர்த்து வைப்பதாகவும், பங்களிப்பு பென்ஷன் திட்டம்
முற்றிலும் கைவிடப்படும்”, என்றார். இதை ஆசிரியர்கள் முழுமையாக நம்பினர்.

எங்கள் கோரிக்கையை முதல்வர் ஜெ., கண்டுகொள்ளவில்லை. ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேசவும் இல்லை. இவை உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்.,8ம் தேதி தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான சங்கங்களை சேர்ந்த 3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி வேலை நிறுத்தம் நடத்தப்படும். அன்று காலை 11 மணிக்கு அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக