யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/10/15

கணினி தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வுக்கு, நவ., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசுத் துறையில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர, கணினி இயக்கவும் தகுதி பெற வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வில், உரிய விதிப்படி தேர்ச்சி பெற்றாலும், கணினி தகுதி சான்றிதழ் படிப்பிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

'கம்ப்யூட்டர் ஆன் ஆட்டோமேஷன்' என, அழைக்கப்படும் இந்த தேர்வு, தமிழக தொழில்நுட்ப இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, இயக்குனரக இணையதளமான, http:/www.tndte.com/ota.htmlல், நவ., 16ம் தேதிக்குள், 'ஆன்லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, நவ., 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக