யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/11/15

கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் உ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நிகழாண்டிலேயே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கணினி பாடப் பிரிவு இல்லாத 800க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், அந்த பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர். மாவட்டத் தலைவர் தேனரசு, செயலர் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக