யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/11/15

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

புதுச்சேரியில், இரண்டு நாள் தேசிய அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது.புதுச்சேரி அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித் துறை மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து, 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தட்பவெப்பநிலையும், கால நிலையும் புரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நேற்று துவங்கியது. 


அறிவியல் இயக்கத் தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். செயலாளர் சுதர்சனன் வரவேற்றார்.மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். புதுச்சேரி அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் ஹேமாவதி பேசும்போது, இந்தாண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு தலைப்பாக தட்பவெப்ப நிலையும், காலநிலையை புரிந்து கொள்வோம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரி, காரைக்கால், மாகி பகுதிகளை சேர்ந்த வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டன.இதில் சமர்ப்பிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆய்வு திட்டங்களில் தேர்ந்தெடுத்த 27 ஆய்வு திட்டங்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த 6 ஆய்வு குழுக்கள், டிசம்பர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை பஞ்சாபில் நடக்கும் தேசிய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.காலநிலை தொடர்பாக 27 குழுக்கள் ஆய்வு திட்டங்களை சமர்ப்பித்து, பார்வையாளர்கள் எழுப்பிய சங்தேகங்களுக்கு விடையளித்தனர். அறிவியல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள் ருக்மணி, சுமதி, புதுச்சேரி அறிவியல் இயக்கதுணை தலைவர் சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக