யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/11/15

வெள்ளத்திலும் வேலை தனியார் பள்ளி ஆசிரியைகள் அதிருப்தி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன. 


இதுகுறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசின் உத்தரவால், தனியார் பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல், ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொன்ன பள்ளி நிர்வாகங்கள், பராமரிப்பு பணிகளில் ஈடுபட செய்தனர். கண்டிப்பாக பள்ளிக்கு வருமாறும், மற்ற பணியாளர்களை போல் பராமரிப்புப் பணியில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டதால், ஆசிரியைகள் அவதிக்கு ஆளாகினர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக