யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/15

கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை? - அரசுதலையிட முடியாது என அறிவிப்பு

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் பணிக்கு வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த மழைவெள்ளத்தில் எப்படி பணிக்கு சென்றுவர முடியும் ? இதர அரசு மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் விடுமுறைஅறிவிக்கவேண்டும் அவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு உத்தரவிடுமா என கேட்டபோது, தமிழக அரசின் பொதுத்துறை செயலர் யதீந்திரநாத் ஸ்வைன் கூறியதாவது:


''அரசு ஊழியர்களில் அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுவோர் தவிர மற்றவர்கள்சூழல் கருதி விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான விடுப்பும் அனுமதிக்கப்படுகிறது.தனியார் துறையினர், வங்கி ஊழியர்களுக்கு சூழல் கருதி அந்த நிறுவனங்கள் விடுமுறை அளிக்கலாம். அதில் அரசு தலையிட முடியாது'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக