யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/15

பொதுமக்கள் கவனத்துக்கு.. தட்டம்மை தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடிமற்றும் கடலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் தட்டம்மை தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1,41,470 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாமினை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாகம்கள் 11.12.2015 அன்று தொடங்கப்பட்டது. 

இதனையடுத்து நேற்று (14.12.2015) முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் மழை வெள்ளம் பாதித்த கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் செயல்படத் தொடங்கியது. இம்முகாம்கள் மூலம் சுமார் 7.65 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இம்முகாம்கள் மூலம் நேற்று 14.12.2015 வரை 1,41,470 நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையும் வரை தொடர்ந்து செயல்படும். பொதுமக்கள் அருகில் உள்ள இம்முகாம்களுக்குச் சென்று 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசியை பெற்று தட்டம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை பொதுமக்களை அன்புடன் அறிவுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக