யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/16

"என்சிசி-யில் இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு'

தேசிய மாணவர் படையில் (என்சிசி) தங்கள் மாணவர்களை இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
 இதுகுறித்து என்சிசி இயக்கத்தின் தலைமை இயக்குநர் அனிருத்தா சக்ரவர்த்தி தெரிவித்ததாவது: 
என்சிசி அமைப்பை அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரிவுபடுத்த 5 கட்டங்களாக திட்டங்கள் வகுத்திருந்தோம். 

 ஒவ்வோர் ஆண்டும் 40,000 மாணவர்களை எங்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டு வருகிறோம்.
 என்சிசியில் தற்போது 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மேலும் கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களையும் இணைக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
 அதன்படி, 5 கட்ட மாணவர் சேர்ப்பின் முடிவில், அதாவது எதிர்வரும் 2018-ஆம் ஆண்டில், என்சிசி-யின் பலம் 15 லட்சமாக அதிகரிக்கும். அந்தந்தப் பள்ளி, கல்லூரி வளாகங்களில் என்சிசி அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன. என்சிசியில் 28 சதவீதமாக உள்ள மாணவிகளின் எண்ணிக்கையை 33 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டம் உள்ளது.
 குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள என்சிசி முகாமில் பங்கேற்க நாடு முழுவதும் 2,069 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கடந்த 6-ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
 நற்பண்புகள், ஒழுக்கம், தலைமைப் பண்பு, தோழமைப் பண்பு, மதச்சார்பற்ற தன்மை, மனப்பான்மை, தன்னலம் இல்லா சேவைகள், சாகச உணர்வு ஆகியவற்றை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்பதே என்சிசியின் நோக்கமாகும் என்றார் அனிருத்தா சக்ரவர்த்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக