யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/2/16

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுத 7 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை

தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால், ராமநாதபுரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7 மாணவ, மாணவியருக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அப்பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள்வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.


ராமநாதபுரம் அரண்மனை அருகில் உள்ளது தனியார் மேல்நிலைப் பள்ளி. இங்கு, பத்தாம் வகுப்பு பயின்று வரும் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த இனியராஜ், முதலூர்கர்ணன், கலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களான ராஜசிங்கம், ஜோதிகா, மூவிதா, முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மற்றும் ராணி ஆகிய 7 மாணவ, மாணவியர், இந்தாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால், இவர்கள் 7 பேரும் பொதுத் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டுக்கு நிர்வாகம் விண்ணப்பிக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட 7 பேரும் பள்ளி நிர்வாகத்தின் செயல் குறித்து வெளியே தெரிவித்தனர்.இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெங்குளம்ராஜூ கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த 7 பேரும் பொதுத் தேர்வு எழுதுவதற்குரிய அனுமதிச் சீட்டை பெற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, அதற்கான காலமும் முடிந்துவிட்டது. எனவே, பள்ளி நிர்வாகத்தின் இச்செயல்குறித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம் என்றார்.

இது சம்பந்தமாக, பள்ளியில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு தெரிவிக்கையில், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்காதது, பள்ளி நிர்வாகத்தின் தவறாகும். தகவல் அறிந்தவுடன் பள்ளிக்கு வந்து விசாரணைநடத்தி உடனடியாக தேர்வுத் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கும்படியும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக