யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/7/16

EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:

👉 2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்.... 👉 2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்... 👉 2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்று தற்போது 2016-17 கல்வியாண்டில் வேறு பள்ளியில் படிப்பவர்களின் தரவுகளை Common Student Pool-க்கு அனுப்பி நீக்கி விட வேண்டும்.
👉 2015-16 ஆம் கல்வியாண்டில் 5,8 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் தற்போது COMMON STUDENT POOL- ல் இருக்கும்.வேறு பள்ளியில் இருந்து தற்போது உங்கள் பள்ளியில் 2016-17 கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களின் தரவுகளை Common pool லிருந்து எடுக்கவேண்டும்...
👉 புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.COMMON STUDENT POOL-லிருந்து எடுக்கப்படும் தரவுகளில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அதை சரி செய்யவும்....
👉 தங்கள் பள்ளியில் தற்போது உள்ள அனைத்து மாணவர்களின் தரவுகளில் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ அதை சரிசெய்து UPDATE செய்யவும்
👉 இவை அனைத்து ஆகஸ்ட் 7-க்குள்(07/08/16) முடிக்க வேண்டும்...

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் உள்ளிட்ட, பல பரிந்துரைகளை அளித்துள்ளது.
இதன் முக்கிய அம்சங்களை, ஒரு மாதத்திற்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை, ஜூலை, 31 வரை மத்திய அரசுக்கு அனுப்பலாம் என, உத்தரவிடப்பட்டது. இப்போது, ஆசிரியர் கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை, மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கருத்துக்களை, nep.edu@gov.in என்ற மத்திய அரசின், 'இ - மெயில்' முகவரிக்கு தெரிவிக்கலாம்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்றும், யோகா கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்த புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட கல்வி பணிக்குழு மற்றும் துறவியர் அமைப்பு சார்பில் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் சாதிக், லயோலா கல்லூரி முதல்வர் சேவியர் ஆரோக்கிய சாமி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வர் ஆக்னஸ் ரொசாரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறியதாவது:
கல்வி கொள்கையை ஆய்வு செய்யவும், கொள்கை எல்லோருக்குமானது என்பதை புரிந்து கொள்ளவும் கால அவகாசம் தேவை. ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. மதவாத அரசு முன்வைக்கும் கல்வி திட்டம் எல்லோருக்கும் உரியதாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதை தீர ஆய்வு செய்த பிறகே ஏற்போம்.
எனவே, இந்த புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம். வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழக கவர்னரை சந்தித்து புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய கோருமாறு மனு அளிக்க உள்ளோம். தேவைப்பட்டால் முதல்வரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இன்ஜி., கல்லூரிகள் நாளை திறப்பு : 'பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட்டிங்'குக்கு தடை

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும் விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் அரை டிரவுசர் அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாத
விடுமுறை நாட்களில் கல்லுாரி வளாகத்தில் தேவையின்றி கூடி கும்மாளம் போடக்கூடாது
வகுப்பறையில் எந்த காரணத்தை கொண்டும், மொபைல்போன், டேப்லேட் போன்றவற்றில்
கேம்ஸ் விளையாடுதல், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் சாட்டிங்
செய்வது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை
மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப் அல்லது சைலன்ட் மோடில்' வைத்து கொள்ள வேண்டும்
ஈவ்டீசிங், ராகிங் போன்ற ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அண்ணா பல்கலையின் எந்த இணைப்பு கல்லுாரியிலும் சேர முடியாது
கல்லுாரி வளாகங்களில், இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களை கொண்டு வருதல் அறவே தடை செய்யப்படுகிறது. கல்லுாரி நுழைவு வாயில் அருகில் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்
அன்றாட பாடங்களை முடிப்பதுடன், வகுப்புகளை கட் அடிப்பது, கல்லுாரி நேரங்களில் சினிமா தியேட்டர் மற்றும் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வது கூடாது
தேர்வுகளில் ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பெற்றோருக்கு தகவல் அளித்து, விளக்கம் கேட்கப்படும். மேலும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கப்படும்.
இவ்வாறு விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் : ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு

மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது. கல்வி திட்டங்கள் குறித்த உதவித் தொகைகளும், நேரடி மானிய திட்டத்தில் வங்கி மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, 'ஆராய்ச்சி படிப்பான பி.எச்டி., உட்பட அனைத்து படிப்புகளுக்கும் உதவித்தொகை பெறும் மாணவர்கள், ஆக., 8ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்' என, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி
அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி., கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது. இதில், பொது கவுன்சிலிங்கில், 84,352 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 358 இடங்களும், விளையாட்டு பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.
இந்நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதன் முடிவில் மொத்தம், 89,760 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங்கில் அதிகபட்சமாக மெக்கானிக்கல் படிப்பு, 21,137 பேர்; இ.சி.இ., எனப்படும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு, 16,413; கம்ப்யூட்டர் சயின்ஸ், 15,387; எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், 10,136; சிவில், 10,088 பேர் சேர்ந்துள்ளனர். இது தவிர, ஆட்டோமொபைல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மெக்கானிக்கல் தமிழ் வழி வகுப்பில், 200 பேரும், சிவில் தமிழ் வழியில், 195 பேரும் சேர்ந்துள்ளனர். 
கோவை மாவட்டத்தில் 90% க்கு குறைவாக ( பாடவாரியாக) தேர்ச்சி விகிதம் எடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு ஆசிரியருகும் தலைமை ஆசிரியர் வழியாக சோக்காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியப் பெருமக்கள் பெரிதும் மன உலைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதேபோல் மற்ற பிற மாவட்டங்களிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதா என தெரியப் படுத்தவும்.
[5:20 AM, 7/31/2016] +91 95439 91150: 🅱news ➖➖➖➖➖➖➖➖பார்கவுன்சில்  முன்  அஞ்சலிக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
பார்கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து, வழக்கறிஞர்களின்  தொழில் உரிமைகளையும் சுதந்திரத்தையும்  மறுதலித்து, நீதித்துறையை பலவீனப்படுத்தும் உயர்நீதிமன்றத்தின் அநியாய விதிகளுக்கெதிரான போராட்டத்தில்  முன்னின்றதற்காக, அகில இந்திய பார் கவுன்சிலால் அக்கிரமமாக  சஸ்பென்ட் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரும், பல்லாண்டுகாலமாக அனைத்து  வழக்கறிஞர் உரிமைப்போராட்டங்களின்  முன்னணி வீரரும்,  திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்தின்  தலைவருமான மறைந்த  மூத்த வழக்கறிஞர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கான  அஞ்சலி நிகழ்ச்சியை தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னால் வருகிற திங்கட்கிழமை (01-08-2016) அன்று காலை 10  மணிக்கு நடத்த, சென்னை வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
🅱News📌பணம் படைத்தவர்களே உயர் பதவிக்கு வரக் கூடிய சூழ்நிலை: கனிமொழி கண்டன பேச்சு  
➖➖➖➖➖➖➖➖➖➖➖
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2016ஐ கண்டித்து மாவட்டத்தில் உள்ள கிருத்தவ, இஸ்லாமிய, இந்துக்கள் என  அனைத்து மதத்தினரையும் கொண்ட ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி
"சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது.

கல்வியில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது. சமூக நீதியை காக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இனி அதை கீழ் இறங்க அனுமதிக்க மாட்டோம். கல்வியில் உலக தரம் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் உலக தரம் வாய்ந்த கல்வி எத்தகையது என்பது முக்கியம். எந்த மொழியில் பயின்றாலும் அந்த மொழியில் உலக தரம் உள்ள கல்வி இருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியில் உலக தரமான கல்விக்கு வாய்ப்பு உள்ளதா? புதிய கல்வி கொள்கையின் படி 10-ம் வகுப்பில் பெயிலாகும் மாணவன் உயர் கல்வி படிக்க முடியாது. இது பழைய குல கல்வி திட்டம் போல் உள்ளது. குல கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜியை நீக்கி விட்டு அனைவருக்கும் சமமான கல்வி திட்டத்தை கொண்டு வந்த காமராஜரை ஆட்சியில் கொண்டு வந்தோம்.

இன்று மத்திய அரசு அதே குலகல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. தற்போது மத்திய அரசின் கல்வி குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் உள்ளனர். எனவே அந்த கல்வி குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த போராட்டம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. முழுமையாக ஈடுபடும். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை திணித்தால் போராட்டத்தால் தமிழகம் தீப்பற்றி எரியும் என்றார்"
[5:20 AM, 7/31/2016] +91 95439 91150: 🅱news ➖➖➖➖➖➖➖➖பார்கவுன்சில்  முன்  அஞ்சலிக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
பார்கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து, வழக்கறிஞர்களின்  தொழில் உரிமைகளையும் சுதந்திரத்தையும்  மறுதலித்து, நீதித்துறையை பலவீனப்படுத்தும் உயர்நீதிமன்றத்தின் அநியாய விதிகளுக்கெதிரான போராட்டத்தில்  முன்னின்றதற்காக, அகில இந்திய பார் கவுன்சிலால் அக்கிரமமாக  சஸ்பென்ட் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரும், பல்லாண்டுகாலமாக அனைத்து  வழக்கறிஞர் உரிமைப்போராட்டங்களின்  முன்னணி வீரரும்,  திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்தின்  தலைவருமான மறைந்த  மூத்த வழக்கறிஞர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கான  அஞ்சலி நிகழ்ச்சியை தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னால் வருகிற திங்கட்கிழமை (01-08-2016) அன்று காலை 10  மணிக்கு நடத்த, சென்னை வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
🅱News📌பணம் படைத்தவர்களே உயர் பதவிக்கு வரக் கூடிய சூழ்நிலை: கனிமொழி கண்டன பேச்சு  
➖➖➖➖➖➖➖➖➖➖➖
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2016ஐ கண்டித்து மாவட்டத்தில் உள்ள கிருத்தவ, இஸ்லாமிய, இந்துக்கள் என  அனைத்து மதத்தினரையும் கொண்ட ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி
"சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது.

கல்வியில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது. சமூக நீதியை காக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இனி அதை கீழ் இறங்க அனுமதிக்க மாட்டோம். கல்வியில் உலக தரம் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் உலக தரம் வாய்ந்த கல்வி எத்தகையது என்பது முக்கியம். எந்த மொழியில் பயின்றாலும் அந்த மொழியில் உலக தரம் உள்ள கல்வி இருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியில் உலக தரமான கல்விக்கு வாய்ப்பு உள்ளதா? புதிய கல்வி கொள்கையின் படி 10-ம் வகுப்பில் பெயிலாகும் மாணவன் உயர் கல்வி படிக்க முடியாது. இது பழைய குல கல்வி திட்டம் போல் உள்ளது. குல கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜியை நீக்கி விட்டு அனைவருக்கும் சமமான கல்வி திட்டத்தை கொண்டு வந்த காமராஜரை ஆட்சியில் கொண்டு வந்தோம்.

இன்று மத்திய அரசு அதே குலகல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. தற்போது மத்திய அரசின் கல்வி குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் உள்ளனர். எனவே அந்த கல்வி குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த போராட்டம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. முழுமையாக ஈடுபடும். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை திணித்தால் போராட்டத்தால் தமிழகம் தீப்பற்றி எரியும் என்றார்"
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் [Some tips about Memory Card]:
மெமரிகார்ட் என்றால் Data க்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4GB, 8GB ,16GB, 32GB, 64GB என்ற அளவுகளில் கிடைக்கிறது. இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்!மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிக நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory card னுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speed ஐ குறிக்கும் code ஆகும். 4 என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் file ஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
Class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second
என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது, இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது!
நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்!!
திருத்திய உண்மைத்தன்மை வரைவோலை !
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு)
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/-
2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/-
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/-
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/-
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/-
6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/-
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/-
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு RS 250
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/-
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/-
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-ரூ.500/-
12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/-
13. Tamilnau Teacher Education University ரூ.350/-
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.275/
பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத
இறுதியில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.


நடப்பு கல்வி ஆண்டு முதல், 2018 - 19 வரை, பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்., ஆகிய படிப்புகளுக்கான, புதிய கல்விக் கட்டணம் அமலில் இருக்கும்.இதற்காக கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களை, ஆகஸ்ட், 8ம் தேதிக்குள் அனுப்ப, சுயநிதி கல்லுாரி கல்விக் கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. ஆவணங்கள் வந்ததும், கல்லுாரிகளில் ஆய்வு செய்து, புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.