யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/8/16

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாட்டின், 70வது சுதந்திர தினம் வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 23ம் தேதி வரை, இரண்டு வார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பள்ளி, கல்லுாரிகளில், நேற்று முன்தினம் முதல், சுதந்திர தின நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு, வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்புதல்; மரக்கன்றுகள் நடுதல்; விடுதலை போராட்டத்தை நினைவுகூரும் சொற்பொழிவுகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இரண்டு வார நிகழ்ச்சிகளின் நிறைவாக, ஆக., 23ல், நாடு முழுவதும் காலை, 11:00 மணிக்கு, அனைத்து மாணவ, மாணவியரும் தேசிய கீதத்தை வாய் பாட்டாக பாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக