யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/9/16

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு

மத்தியஅரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ்விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட்கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றைவிண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட்கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வுசெய்யப்படும் என்ற திட்டத்தை மத்தியவெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம்செய்துள்ளது. தட்கல் என்னும் துரிதபாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும்மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்குபோலீசார் விரைவாக சான்றாய்வு பெறவசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில்3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம்செய்ய மாநில அரசு ஒப்புதல்வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர்ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனைஅடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில்உள்ள 280 இ-சேவா மையங்களில்இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில்வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட்பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறவிரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம்பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட்வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின்சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில்இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள்சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரிபாலமுருகன் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக