யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/10/16

புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!

மத்தியஅரசின் புதிய கல்விக் கொள்கைகுறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது.


புதிய வரைவு கல்விக் கொள்கையைஉருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன்தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக்குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதியகல்விக் கொள்கை வரைவு” ஒன்றைமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்குஅனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்துவிவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்துமாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமுக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம்வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்பபெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையைகொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம்மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில்8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்குதமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டதமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும்எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம்பேசினோம்.

 " இரண்டு முக்கியமான அம்சங்கள்இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாகஇந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்துஎன்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினைதொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.

அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்கமுடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி2015 டிசம்பர் வரை மட்டுமே முறையானகல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில்அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும்2020-ம் ஆண்டு வரை அப்படியானஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருதபாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன்வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதிமுடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள்எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக