யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/10/16

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து

முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை. அரசு ஊழியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி, ஆண்டுதோறும் ஆயுத பூஜையை கொண்டாடுவது வழக்கம். தற்போது, மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆயுத பூஜை ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: வரும், 10ல், ஆயுத பூஜை வருகிறது; அன்று அரசு விடுமுறை. இதனால், அரசு அலுவலகங்களில், 7ம் தேதி, ஆயுத பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆயுத பூஜை கொண்டாடு வதை தவிர்த்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக