யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/11/16

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குநவம்பர் முதல் ஜனவரி மாதம்வரையில் மாத ஊதியத்தை வங்கிகணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாகவழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்துதமிழ்நாடு தலைமை செயலக சங்கதலைவர் ஜெ.கணேசன்
நேற்றுமுதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
மத்தியஅரசு கடந்த வாரத்தில் அறிவித்ததிட்டத்தால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வசமுள்ள 500, 1000 ரூபாய்நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் தவம் கிடக்க வேண்டியகட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால்வெகுவாக அலுவலக பணியும் பாதித்துள்ளது.
சென்னைபோன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்குடியிருப்பதற்கு போதிய அரசு வாடகைகுடியிருப்புகள் இல்லாததால், பெரும்பான்மையோர் தனியார் வீடுகளில்தான் குடியிருந்துவருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கான வாடகையானது ஒவ்வொருஅரசு ஊழியரின் ஊதியத்திலும் ஏறத்தாழ 25 சதவீதம் அளவிற்கு உள்ளது.
இதைத்தவிர, மாதந்தோறும் தங்களது குழந்தைகளுக்கான கல்விகட்டணம், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கான மருத்துவ செலவு, வீட்டு மளிகைபொருட்களை வாங்குவதற்கான செலவு உள்ளிட்ட செலவுகளைசெய்ய இயலாமல் உள்ளனர். தற்போது, சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணப்பட்டுவாடாக்களும் ஊழியர்களின் வங்கிகணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன.

தற்போதுள்ளவங்கி கட்டுப்பாடுகளால், மத்திய அரசின் வருமானவரித்துறைக்கு கணக்குக்களை முறையாக சமர்ப்பித்து, ஊதியத்தைபெற்றுவரும் ஊழியர்கள் தங்களது பண இருப்பைபெற இயலாமல் போகும் நிலைஉருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் முதல்ஜனவரி மாதம் வரையில் மாதஊதியத்தை வங்கி கணக்கில் வரவுவைக்காமல், ரொக்கமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக