யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/11/16

மறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு

வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது.

விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி (நவ.12), ஞாயிறு (நவ.13) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் என்று ஊடகங்களில் சனிக்கிழமை மாலை செய்தி வெளியானது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகப் பொறுப்பாளர் வி.ஜி.வெங்கடாசலபதி வெளியிட்ட செய்தியில், விடுமுறை நாள்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

எனவே, டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்ற செய்தியை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் செயல்பாடு என்பது தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக