யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/12/16

பாரதிதாசன் பற்றிய செய்திகள் !!


பாரதியார் மீதான பற்று :

➦ தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை :

➦ பாரதியாரிடம் நட்பு கொண்டது முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார்.

➦ அச்சமயத்தில், சுதந்திரப் போராட்டத்தாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.

➦ அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.

➦ பெருந்தலைவர்களான மு. கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் அண்ணாதுரை, போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

➦ ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

பாரதிதாசனின் மிகச்சிறந்த படைப்புகளில் முக்கியமானவை :

1. பாண்டியன் பரிசு
2. எதிர்பாராத முத்தம்
3. குறிஞ்சித்திட்டு
4. குடும்ப விளக்கு
5. இருண்ட வீடு
6. அழகின் சிரிப்பு
7. தமிழ் இயக்கம்
8. இசையமுது
9. குயில்
10. தமிழச்சியின் கத்தி
11. பாண்டியன் பரிசு
12. பாரதிதாசன் ஆத்திசூடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக