11.12.1882:
சின்னசுவாமிசுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும்சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மக்கள்பாரதியார் என்றும் மகாகவி என்றும்அன்புடன் அழைக்கின்றனர்.
பாரதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் - இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர்11, 1882ல் பிறந்தார். இவரின்
இயற்பெயர்சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று வீட்டில் அழைக்கப்பட்டார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுதே தனக்கு உள்ள கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். பாரதி1897 ஆம் ஆண்டு தனது 15-ஆம்வயதில் செல்லம்மாளை மணந்தார்.
எட்டப்பநாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனைமெச்சிப் பாரதி என்ற பட்டம்வழங்கினார். தமிழ் கவிதையிலும் உரைநடையிலும்சிறப்பான புலமை கொண்டு, நவீனதமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்துகவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாகமக்கள் மனதில் விடுதலை உணர்வைஊட்டியவர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளமொழி ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். அத்துடன் பிற மொழி இலக்கியங்களைமொழி பெயர்க்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும்மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
உடல் நிலை சரியில்லாத நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் செப்டம்பர் 11, 1921 அன்று இயற்கை எய்தினார்.
பாரதியாரின்நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம்ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கிய படைப்புகள் என்பதுபாரதியாருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக