யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/1/17

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும் -முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான “டான் செட்” பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துறைசார் பொறியியல் கல் லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான். எம்.ஆர்க். இடங்கள் “டான்செட்” பொதுநுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்சிஏ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான்.

 படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியும் நடைபெற உள்ளன.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் இணைய தளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஹால்டிக்கெட்டையும் இணையதளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்ய வேண்டும்.

TNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) விதிமுறை. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

டெட்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்துமாறு பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கைமிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும், அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம்ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான டெட் தேர்வு என்று பார்த் தால் இதுவரை 3 டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள் ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

7 ஆண்டுகள் செல்லத்தக்கது

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லை. வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம்.

HSC Feb 2017 Practical Exam Batch Allotement & Aural / Oral Mark Sheet Preparation

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  கால அவகாசம் அளித்துள்ளது.


விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதை எதிர்த்து வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதுவரை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் பத்திரப் பதிவு செய்ய தடை நீடிக்கிறது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அரசுதான் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, உடனடியாக அவசரச் சட்டம் சட்டமாக ஒப்புதல் பெறப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த சட்டத்தில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு, தமிழக மக்களின் போராட்டத்துக்கு முழு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் கையெழுத்துப் பெறப்பட்டதை அடுத்து, இந்த சட்டம், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் சாசனத்தில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவாக தீர்ப்பளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு எழுதப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டம் வெடித்ததை அடுத்து, ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தீர்ப்பளிக்கக் கூடாது என்று தடை பெற்றது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாகவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பல அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 8300 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மத்திய அரசில் காலியாக இருக்கும் 8300 பல் செயல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.30) கடைசி நாளாகும்.


மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல் செயல் உதவியாளர் பணிக்கு 8300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 25 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வழங்கப்படும்.

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் உண்டு. இப்பணிக்கு இணையதளம் மூலம் இன்று ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விபரங்களை http://ssconline.nic.in  அல்லது http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf  என்ற இணையதள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்.

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.
இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது.

Whatsappல் புதிய வசதிகள்!






வாட்ஸ்அப் நிறுவனம், அதன் செயலிக்கு தொடர்ச்சியாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சீக்கிரமே இந்த வசதியெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை தன் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் 'லொகேஷன் ஷேரிங்' வசதி வர உள்ளதாம். அதே போல, நண்பர்கள் புது ஸ்டேட்டஸ் போட்டால் தெரியப்படுத்தும் வகையிலும் ஒரு வசதி வர உள்ளதாம்.

மேலும், வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு கால் செய்யும்போது பேட்டரி தீர்ந்துபோகும் நிலை வந்தால், அதற்கு நோட்டிஃபிக்கேஷன் அனுப்பப்படுமாம். மேலும் இதைப்போன்ற பல வசதிகள் சீக்கிரமே வாட்ஸ்அப்பில் வரும் என்று கூறப்படுகிறது. புதிய வசதிகளை அனுபவிக்க, போனில் இருக்கும் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தாலே போதும்.

IT CALCULATION FORM 2016-17 [New]

TNOU B.Ed Entrance Exam Result - Published...

TNPSC: அடுத்த வாரம் முதல் பல தேர்வுகளுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர்,ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர், உதவி ஜியாலஜிஸ்ட் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி விரைவில் தேர்வு நடத்தவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் முதல் வெளியிடப்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். தேர்வுக்கு தயாராவோரின்வசதியைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும்கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

 அந்த அடிப்படையில், கடந்த 2016-17 தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்-2, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.இதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில், கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அடுத்த வாரம் முதல் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது. அவற்றின் மூலமாக உதவி ஜியாலஜிஸ்ட் பதவியில் 55 காலியிடங்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவி யில் 25 காலியிடங்களும், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவியில் 3 இடங்களும் நிரப்பப்படும்.

 முன்பு அறிவிக்கப்பட்டிருந்த காலியிடங்களைக் காட்டிலும் காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. உதவி ஜியாலஜிஸ்ட் தேர்வுக்கு எம்.எஸ்சி. (ஜியாலஜி) படித்தவர்களும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் பதவிக்கு உடற்கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களும், உதவி ஆணையர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். முதலில் உடற்கல்வி பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பும் அதைத் தொடர்ந்து, எஞ்சிய 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இதற்கிடையே நடப்பு ஆண்டுக்கான (2017-18) தேர்வு காலஅட்டவணை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருக்கும் குரூப்-2, குரூப்-2-ஏ காலிப் பணியிடங்கள் புதிய தேர்வு கால அட்டவணையுடன் சேர்க்கப்பட இருப்பதால் அந்த பணிகளுக்கான காலியிடங்கள் மேலும் அதிகரிக்கும்.

30/1/17

உயருமா? வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு

பிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. முதன்முறையாக, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டும் கலந்த ஒருங் கிணைந்த பட்ஜெட், தாக்கலாக உள்ளது; இதில், வருமான வரி விலக்கு
உச்சவரம்பு உயர்த்தப் படுமா என்ற எதிர்பார்ப்பு, மாத ஊதியதாரர் களிடையே ஏற்பட்டுள்ளது.பட்ஜெட்டில், என்னென்ன விஷயங்கள் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே துவங்கி விட்டது. வழக்கம் போல், மாத ஊதிய தாரர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள், இந்த பட்ஜெட்டில், தங்களுக்கு சாதகமான அம்சங்கள் வந்துவிடாதா என, ஆவலுடன் காத்திருக்கின் றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டு வருமான வரி உச்சவரம்பு, 2.5 லட்சம் ரூபாயை தாண்ட மறுக்கிறது. கடந்த ஆண்டும், ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இந்த ஆண்டு, அது நிச்சயம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாதவருவாயும், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வரு கிறது. அதனால், குறைந்தபட்சம், 4.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை யாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இன்சூரன்சுக்கு தனி கழிவு?


மாதஊதியதாரர்கள்,80 - சி பிரிவில், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ செலவு, வீட்டுக் கடன் மாதத் தவணை, எல்.ஐ.சி., உள்ளிட் டவை, வரிக்கழிவிற்கு உதவுகின்றன. இதில் அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் மட்டும் கழிக்க முடியும். இதை, 2.5 லட்சம் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தினால், மக்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர்.

குறிப்பாக,இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தனிக் கழிவு, 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால், சேமிக் கும் வழக்கம் மக்களிடம் அதிகரிக்கும்; சமூக பாது காப்பும் கிடைக்கும்.

இந்த பிரிவில், மருத்துவ செலவுகளுக்காக கழிக்கப்படும் தொகை, 15 ஆயிரம் ரூபாயாக, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது; அது, 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். இது போல், மற்றோர் பிரிவான, 80 டிடிஏ - வில், வங்கி சேமிப்பு மீதான வட்டிக்கான வரி விதிப்பு குறைக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படி செய்தால், 'செட்டில்மென்ட்' பணத்தின் மீதான வட்டியை நம்பியிருக்கும், 60 வயதிற்கு, மேற்பட்டோர் பயனடைவர்.

புதிய 'பென்ஷன்' திட்டம்


புதிய,'பென்ஷன்' திட்டத்தில் சேர்ந்தால்,ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, 80 சிசிடி (1பி) பிரிவின் கீழ், வருமான வரி கழியும். இந்த பட்ஜெட்டில், முதலீடு தொகை முழுவதற்கும், நிதியமைச்சர் ஜெட்லி, விலக்களிக்க முயற்சிப்பார் என, தெரிகிறது.

வீட்டுக்கடன்வட்டிக்கான உச்சவரம்ரபு, பிரிவு 24 - ன் கீழ், 2 லட்சம் ரூபாயாக உள்ளது. வீடு விலை ராக் கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது; எனவே, அதை உயர்த்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.


50 கோடி பேர் 'எஸ்கேப்'


நாட்டில், நான்கு கோடிக்கும் குறைவானவர் களே, குறிப்பாக, மாத வருமானம் பெறுவோர் தான், வரி செலுத்துகின்றனர். வருமான வரி வரம்பிற்குள்
வரக்கூடிய, மருத்துவர், வியாபாரிகள், சுய தொழில் வருவாய் மற்றும் வீட்டு வாடகை வருவாய் ஈட்டுவோர் உட்பட, 50 கோடிக்கும் அதிகமானோர், வருமான வரித்துறை வளையத்திற்குள் இன்னும் வரவில்லை.

அவர்களையும், வரிவிதிப்பு முறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கு, வரி விதிப்பு முறை எளிதாக வேண்டும். அதாவது, வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.

மேலும், ஐந்து லட்சத்திற்குள் வருமானம் இருந்தால், 10 சதவீத வரி விதிப்பு; ஐந்து லட்சத் திற்கு மேல், 20 சதவீதம்; 10 லட்சத்திற்கு மேல், 30 சதவீதம், வரி என்பதை குறைக்க வேண்டும். அப்போது தான், குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படும் நிலை உருவாகும்.

ஊக்கம் கிடைக்குமா?


பண மதிப்பிழப்பிற்கு பின், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற, அரசு ஊக்குவிப்பதால், 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்' உள்ளிட்டவை போன்ற பரிவர்த்தனைக்கு, அரசு அதிக சலுகை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

- நமது நிருபர் -

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு !!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன் லைன்
விண்ணப்பம் பெற மார்ச் 27-ம் தேதி

முதல் விநியோகம் என ஜிப்மர் கல்லூரி அறிவித்துள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கிடையாது என முதல்வர் சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

TET-கேள்விகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்று பணி
கிடைக்காமல் போன நண்பர்கள் சிலர் தற்போது அறிவிக்கப்பட உள்ள டெட் தேர்வை நாங்களும் எழுத வேண்டுமா என கேட்கின்றனர்.

பதில்:

எழுதலாம். கடந்த முறை நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை விட தற்போது அதிக மதிப்பெண் எடுக்க விரும்பினால் இம்ப்ரூவ்மெண்ட் எழுதலாம். இந்த நடைமுறை NCTE வழிகாட்டு நெறிமுறைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதைக் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல முடியும். 

TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 11-லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட ஏற்பாடு

-Today Tamil Hindu


ஏப்29,30 ல் ஆசிரியர் தகுதித்தேர்வு
#ஏப் 29ல் தாள் 1
#ஏப் 30ல் தாள் 2
#தேர்வுக்கான விண்ணப்பங்கள் பிப் 15முதல் மார்ச் 8வரை விற்பனை செய்யக்கூடும்
#கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர் 30000 என்பது குறிப்பிடத்தக்கது
#7 ஆண்டு செல்லத்தக்கது
#டெட் மதிப்பெண்-60
ப்ளஸ் 2,பட்டப்படிப்பு,பி.எட் படிப்பு 40
#இடைநிலை ஆசிரியர் எனில் ப்ளஸ் 2,இடைநிலை ஆசிரியர் படிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
#ஒருவர் தன் மதிப்பெண்ணை அதிகப்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் டெட் தேர்வு எழுதலாம்

'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னுரிமை

''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும்,

85 சதவீத, அரசு இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர் தெரிவித்தார்.
சென்னையில், 'தினமலர்' நடத்திய, 'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் பேசியதாவது: 'நீட்' தேர்வில், கடந்த ஆண்டு விதிமுறைகளில், இந்த ஆண்டு மாற்றம் வர வாய்ப்புள்ளது. 15 ஆண்டு களாக, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.
இளநிலை படிப்பு மட்டுமின்றி, முதுநிலை படிப்புக்கும், 'நீட்' தேர்வு உண்டு. கடந்த ஆண்டு முதல், இந்த நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தஆண்டு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு கட்டாயமாகும் என, தெரிகிறது. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகளில் பெரிய அளவில் மாற்றம் வராது. மத்திய அரசின், 15 சதவீத இடங்களுக்கு, 'நீட்' மதிப்பெண்ணின் படி, அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
மற்ற, 85 சதவீத மாநில இடங்களில், 'நீட்' தேர்வு மதிப்பெண் படி, அந்தந்த மாநில அரசுகளே, மாநில மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' வழங்கும். வெளிநாட்டு மாணவர் கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 'நீட்' தேர்வு கிடையாது; மாணவர் சேர்க்கையும் கிடையாது. அதேபோல், வெளிநாடுகளில், 'நீட்' தேர்வு மையமும் கிடையாது.
'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர் எனப்படும், ஜவஹர்லால் நேரு மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தில் சேர, 'நீட்' மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது. அவற்றுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. ஜிப்மர் தேர்வில், புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்ணில் சலுகை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
விதிமுறைகள் மாற வாய்ப்பு
வரும் ஆண்டில், 'நீட்' விதிமுறைகளில், மாற்றங்கள் வரலாம். பிப்., முதல் வாரத்தில், அதிகாரபூர்வமாக, 'நீட்' தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வில், தவறான விடைகளுக்கு, நான்கில் ஒரு பங்கு மதிப்பெண், மைனஸ் மதிப்பெண்ணாக கழிக்கப்படும். அதேபோல், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண், கட்டாயம் வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்தினாலும், மத்திய அரசு அங்கீகரித்த, அனைத்து மாநில பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து தான், வினாத்தாள் அமைக்கப்படும். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், ஆடைகள், ஆபரணங்கள் அணிவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால், தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடைக்காது.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை

வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவைமாநகராட்சி நேரு விளையாட்டு அரங்கம் அருகே புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் இடத்தை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விளையாட்டுத் துறையை மேம்படுத்த தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் சர்வதேசத் தரத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் ரூ. 3.85 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நகரின் மையப் பகுதியில் 5.63 ஏக்கர் பரப்பிலான மாநகராட்சி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், நீச்சல் குளம், கைப்பந்து, டென்னிஸ், தடகளத் தளங்களுடன் பல்வேறு உள்அரங்குகளும், விடுதி வசதியும் அமைக்கப்படவுள்ளன என்றார்.
பின்னர், தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும் என செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட மைய நூலகத்துக்குச் சென்று அரசு அருங்காட்சியகத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: கொங்கு நாட்டு வரலாறு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக ரூ. 2 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். தவிர ஒரே இடத்தில் எல்லோரும் காணும் விதமாக அகழாய்வு அருங்காட்சியகமும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, விளையாட்டுத் துறை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மேத்யூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 130 மி.மீ., ராமேசுவரத்தில் 110, காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 80 மி.மீ. வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய இடங்களில் 70 மி.மீ. மழையும் பெய்துள்ளது.இதுதவிர திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, திருவள்ளூர், வேலூர், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, நாகப்பட்டினம், பெரம்பலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேற்கு திசையில் நகர்ந்து தற்போது கன்னியாகுமரியில் இருந்து கொங்கன் கடற்பகுதி வரை பரவியுள்ளது.இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடதமிழகம், புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: 5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு.

ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18 கல்வியாண்டில் கல்லூரியைமுழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இவற்றில் 5 கல்லூரிகள், தங்களது இந்த முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக்குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இ.சி.இ.) போன்ற பிரிவுகளின் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைய தொடங்கியது.இதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.குறைந்த பி.இ. மாணவர் சேர்க்கை: கடந்த 2015 -ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422 -ஆக இருந்தன. இதில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டும் மொத்தமிருந்த 531 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,85,670 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 84,352 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,01,318 இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன.

இதன் எதிரொலியாக, 2016 -ஆம் ஆண்டில் 70 துறைகளை (படிப்புகள்) 30 கல்லூரிகளும், மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைக்க 20 கல்லூரிகளும் அண்ணா பல்கலைகழகத்திடம் விண்ணப்பித்தன.ஏஐசிடிஇ புள்ளி விவரம்: மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் முற்றிலும் மூடுவதற்கான விண்ணப்பத்தை பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஏஐசிடிஇ-க்கு (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) விண்ணப்பித்து வந்தன.இதை ஏற்ற ஏஐசிடிஇ 2013 -14 கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2014-15 கல்வியாண்டில்12 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2015-16 கல்வியாண்டில் 12 பொறியியல் கல்லூரிகளுக்கும் முழுவதும் இழுத்து மூட அனுமதி அளித்தது.10 கல்லூரிகள்: இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டுக்கான அனுமதி நீட்டிப்பு நடைமுறைகளை ஏஐசிடிஇ தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளிடமிருந்து கடந்த20 -ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது.

இதற்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகள் மட்டுமே 2017-18 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.இந்த நிலையில், கடந்த 20 -ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 12 கல்லூரிகள் விண்ணப்பங்களைச்சமர்ப்பிக்கவில்லை.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத 12 கல்லூரிகளில், 5 கல்லூரிகளின் நிர்வாகிகள் தங்களது கல்லூரிகளை முழுவதும் இழுத்து மூடும் முடிவில் இருப்பதாகத் திட்டவட்டமாக தெரிவிóத்துவிட்டனர். இவற்றில் 4 பொறியியல் கல்லூரிகள், ஒரு எம்பிஏ கல்லூரி ஆகும்.

மேலும் 2 கல்லூரிகளின் நிர்வாகிகள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 5 கல்லூரிகள் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, அவையும் வரும் கல்வியாண்டில் மூடப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.

அகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள்- நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா கிட்ஸ் வழங்கப்படும்.

தமிழக அரசின் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். 
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு சுமார் 800 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:

‘‘இன்னும் ஒரு சில மாதங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் அம்மா கிட்ஸ் எனப்படும் கணிதம் மற்றும் அறிவியலுக்கான உபகரணங்கள் வழங்கப்படும். காமராஜருக்கு அடுத்து ஜெயலலிதா ஆட்சியில்தான் 99 சதவிகிதம் அரசு உதவி பெறும் பள்ளிகளைஉருவாக்கி இதுபோன்ற உதவிகள் செய்யப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

TNTET -ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய முறையைக் கையாள வேண்டும்-ஜி.கே.வாசன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய முறையைக் கையாள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதமும், மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்ணை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணைச் சேர்த்தும் மதிப்பிடப்பட உள்ளது.இந்த முறையினால் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டப் படிப்புகளையும், ஆசிரியர் தகுதிக்கானப் படிப்புகளையும் முடித்துவிட்டு வேலையில்லாமல், பதிவு செய்து காத்திருப்போர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்களுக்கும், தற்போதைய கல்வி முறையில் மதிப்பெண் பெறுபவர்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும்.எனவே, ஆசிரியர் நியமனத்தில் ஏற்றத்தாழ்வற்ற நிலையை உருவாக்கும் வகையில் தற்போதுள்ள தகுதித் தேர்வு முறையில் உள்ள விதிகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாநகராட்சி பள்ளிகளில் ‘ஸ்பார்க்’ திட்டம்: பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய முயற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய ‘ஸ்பார்க்’ என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி யுள்ளது.சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
அதில் 32 மேல்நிலைப் பள்ளி களும், 38 உயர்நிலைப் பள்ளி களும் அடங்கும். மொத்தமுள்ள பள்ளிகளில் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 86.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாக இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 92.15 சதவீத மாக இருந்தது.

மொத்தமுள்ள பள்ளிகளில் 3 அல்லது அதற்கும் குறைவான பள்ளிகளே 100 சதவீத தேர்ச்சியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10, மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி இலக்கைஅடையவும், மாநில அளவிலான மதிப்பெண்களை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பெறவும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் தீப்பொறி என்ற பொருள்படும் வகையில் ‘ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் சோதனை அடிப்படையில் தற்போது செயல்படுத்தி வருகிறது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப் பில் மொத்தம் 12 ஆயிரம் பேர் தேர்வெழுத உள்ளனர். தமிழ கத்தின் முன்னணி பள்ளிகளில் ஒன்றாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை மாற்றும் விதமாக ‘ஸ்பார்க்’ திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

இத்திட்டத்தை சோதனை அடிப்படையில்தான் தொடங்கியிருக்கிறோம். அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வுசெய்து, பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என வகை பிரித்து, அவர்களை தற்போதுள்ள நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக, 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமித்திருக்கிறோம்.அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு களை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப் பட்டு வருகிறது. கூடுதல் பயிற்சி ஏடுகள் மூலமும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இதன் பலன், இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தெரியவரும் என்றார். இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப் படையில், இத்திட்டத்தை மேம் படுத்திக்கொள்வோம்” என்றார்.

TNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்கள்

>> TNTET – 2017 Tamil Nadu Teacher Eligibility Test – 2017 is going to be conducted in the last week of April.

>> Separate Application Forms are designed for TNTET Paper I and Paper II.

>> Application Forms allocated to each Revenue District will be delivered to the Chief Educational Officers on or before 10.02.2017.

>> CEO has to allot to each DEO and then to each school.

>> Chief Educational Officers should handover theApplication Forms to the District Educational Officers in their jurisdiction and coordinate with the sale of Application Forms.

>> This time also like the previous TNTET, it is decided to sell the TNTET Application forms through selected Hr. Sec. Schools.

>> Application Forms should be shared between schools as and when there is necessity.

>> A Coordinator can be appointed for 10 schools each with the officers like the District Elementary Education Officers, Personal Assistants and Deputy Inspectors with the work of sending the Application Forms to needy schools from the Chief Educational Offices.

>> TNTET Application Forms should be sold in theselected Hr. Sec. Schools from 9.00 AM to 6.00 PM from mid February'2017 to end of February'2017 tentatively 27.02.2017.

>> Selected Hr. Sec. School should sell the Application Forms from 09.00 AM to 06.00 PM onall working days (including Saturdays) with at least two staff members on duty.

>> It is strictly instructed that only ONE Application Form should be sold to each candidate.

>> Announcements may be made on the notice boards of Hr. Sec. Schools about the separate application forms for Paper I and Paper II and about the submission of filled-in Application Forms only in the District Educational Offices.

>> Chief Educational Officers should take personal care on the sale and receipt of Application Forms. II. Receipt of Filled-in Application Forms in the District Educational Offices. 1. At least 13 Teams (6+7 Teams for Paper I and Paper II) or more as per need may be formed for the receipt of Filled-in Application Forms in the District Educational Offices.

>> These Teams should check the filled-in Application Forms to ensure whether all the particulars are filled-in and the Challan for the payment of examination fee is attached.

>> The Teams should issue an acknowledgement on the xerox copy of the Application Form as prescribed by the TRB (in Annexure III) and it should be duly signed by the head of the Team without fail.

>> Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.

NEET Exam:நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.எனவே நீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23 கடைசி

அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, பிப்., 23 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு கட்டுப்பாட்டில், டில்லி உட்பட, நாடு முழுவதும் ஏழு இடங்களில், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரும் கல்வி ஆண்டிற்கு, மே, 28ல், 'ஆன்லைன்' வழியில் நுழைவு தேர்வு நடக்கும் என, எய்ம்ஸ் அறிவித்து உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜன., 24ல் துவங்கியது. பிப்., 23 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை, http://www.aiimsexams.org/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னுரிமை

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும், 85 சதவீத, அரசு இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர்தெரிவித்தார்.


சென்னையில், 'தினமலர்' நடத்திய, 'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் பேசியதாவது: 'நீட்' தேர்வில், கடந்த ஆண்டு விதிமுறைகளில், இந்த ஆண்டு மாற்றம் வர வாய்ப்புள்ளது. 15 ஆண்டு களாக, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை படிப்பு மட்டுமின்றி, முதுநிலை படிப்புக்கும், 'நீட்' தேர்வு உண்டு. கடந்த ஆண்டு முதல், இந்த நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு கட்டாயமாகும் என, தெரிகிறது. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகளில் பெரிய அளவில் மாற்றம் வராது. மத்திய அரசின், 15 சதவீத இடங்களுக்கு, 'நீட்' மதிப்பெண்ணின் படி, அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

மற்ற, 85 சதவீத மாநில இடங்களில், 'நீட்' தேர்வு மதிப்பெண் படி, அந்தந்த மாநில அரசுகளே, மாநில மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' வழங்கும். வெளிநாட்டு மாணவர் கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 'நீட்' தேர்வு கிடையாது; மாணவர் சேர்க்கையும் கிடையாது. அதேபோல், வெளிநாடுகளில், 'நீட்' தேர்வு மையமும் கிடையாது.

'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர் எனப்படும், ஜவஹர்லால் நேரு மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தில் சேர, 'நீட்' மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது. அவற்றுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. ஜிப்மர் தேர்வில், புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்ணில் சலுகை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

விதிமுறைகள் மாற வாய்ப்பு

வரும் ஆண்டில், 'நீட்' விதிமுறைகளில், மாற்றங்கள் வரலாம். பிப்., முதல் வாரத்தில், அதிகாரபூர்வமாக, 'நீட்' தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வில், தவறான விடைகளுக்கு, நான்கில் ஒரு பங்கு மதிப்பெண், மைனஸ் மதிப்பெண்ணாக கழிக்கப்படும். அதேபோல், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண், கட்டாயம் வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்தினாலும், மத்திய அரசு அங்கீகரித்த, அனைத்து மாநில பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து தான், வினாத்தாள் அமைக்கப்படும். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், ஆடைகள், ஆபரணங்கள் அணிவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால், தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடைக்காது.

NEET EXAM:விரைவில் மாதிரி நுழைவு தேர்வு

தமிழக மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில், விரைவில், 'தினமலர்' சார்பில், மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.
'தினமலர்' சார்பில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்

ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், 'நீட்' தேர்வு குறித்த மாதிரி நுழைவு தேர்வை, 'தினமலர்' நடத்த உள்ளது. இந்த தேர்வு, எங்கே, எப்போது நடத்தப்படும் என்ற விபரங்கள், 'தினமலர்' நாளிதழில், விரைவில் அறிவிக்கப்படும்.

29/1/17

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறைப்படுத்துக: வாசன் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா
தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது. மாணவர்களை நல்ல முறையில் உருவாக்குவதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியது. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் நிரப்ப வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்தவர்களின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. இருப்பினும் தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இம்முறையில் மொத்தமுள்ள 100 சதவீதத்தில் தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதமும், மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்ணை +2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணைச் சேர்த்தும் மதிப்பிட இருக்கிறார்கள். இம்முறையினால் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டப் படிப்புகளையும், ஆசிரியர் தகுதிக்கானப் படிப்புகளையும் முடித்துவிட்டு வேலையில்லாமல், பதிவு செய்து காத்திருப்போர்களே பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

தகுதித் தேர்வு முறையில் +2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணில் 40 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொண்டால், பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பை முடித்தவர்களுக்கும், தற்போதைய கல்வி முறையில் மதிப்பெண் பெறுபவர்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும்.
எனவேஆசிரியர் தகுதிக்கான படிப்புகள் முடித்தவர்கள் அனைவரின் நலனில், ஒத்தக் கருத்தின் அடிப்படையில், ஏற்றத்தாழ்வற்ற நிலையை உருவாக்கும் விதமாக தற்போதுள்ள தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


எனவேஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும், தற்போது தனியார் கல்வி நிலையங்களில் அரசுப் பணியல்லாத பகுதி நேர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பாகுபாடு ஏற்படாத வகையில் அரசு ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?

How to prepare for competitive exams while doing a job

தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை, தினமும் கூடுதல் நேர வேலை, என்னதான் உழைத்தாலும் அதேற்கேற்ற அங்கீகாரம் இல்லை, ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் கூட எப்போது வீட்டுக்கு
அனுப்புவார்களோ என்ற கவலை, பணி நிரந்தரம் இன்மையால் மன அமைதியில் குழப்பம், அலுவலக அரசியல்.
இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற கனவுடனும், அதே நேரம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விட முடியாமலும் பல்வேறு சகோதர/சகோதரிகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கானது என்னுடைய இந்தப் பதிவு.

1. முதலில் வேலைபார்த்துக் கொன்டே போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால், படிப்பதற்கு போதுமான நேரம் இல்லாமை. வீட்டில் இருந்து முழு நேரம் இத் தேர்வுகளுக்கு படிப்பவர்களுடன் போட்டி போட வேண்டிய நிலைமை. அவர்கள் ஒரு நாளில் படிக்கும் பாடத்தை படிக்க நமக்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம்.
எனவே, நீங்கள் எந்த எந்த வழிகளில் உங்கள் பொன்னான நேரம் செலவாகிறது என்பதனை கண்டறிந்து குறைக்க வேண்டும். டிவி பார்ப்பது, அடிக்கடி அவசியம் இன்றி வெளியே போவது, பொழுது போக்கில் அதிக நேரம் போன்ற அனாவசிய நேர செலவுகளை குறைத்துக் கொண்டு அந்த நேரங்களில் படிக்கலாம். குறைந்த பட்சம் உங்களால் நாள் ஒன்றிற்கு 4 மணி வரை படிக்க முடியும்.

2. சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முழுவதுமாக பயன்படுத்தி நீண்ட நேரம் படிக்கலாம்.

3. உங்களுக்கு CL, PL போன்ற விடுமுறை வாய்ப்புகள் இருந்தால் தேவை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம். தேர்வு நேரங்களில் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு படிக்கலாம்.

4. அலுவலகத்தில் வேலை ஏதும் இன்றி, சும்மா இருப்பதாக நீங்கள் கருதினால், கைக்கு அடக்கமான பேப்பர்களில் (பிட்டு பேப்பர் போன்று) பாடக் குறிப்புகளை உங்களுக்கு புரியுமாறு எழுதி வைத்துக் கொண்டு நினைவு படுத்தலாம். ஆனால் இதனை அலுவலகத்தில் வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.

5. கூடுமான வரை அடிக்கடி நீண்ட தூர பயணங்களை தவிருங்கள், அவ்வாறு தவிர்க்க இயலாது செல்ல வேண்டி இருப்பின் அந்த பயண நேரங்களை படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. உங்களது சிறு சிறு வேலைகளை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு படிக்கலாம்.

7. கல்யாணம் ஆகாமல் தனியாக அறையில் தங்கி இருப்பவர் என்றால், சமைக்க, துணி துவைக்க என்று நேரம் செலவிடாமல் மாற்று ஏற்படுகளை செய்து விட்டு அந்த நேரத்தில் படிக்கலாம்.

8. எக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அரசு வேலைக்கு முயன்று கொண்டு இருப்பதை அலுவலகத்தில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். நீங்கள் தற்செயலாக விடுப்பு எடுத்தாலும் படிப்பதற்கு லீவு போட்டு விட்டார் என்று கதையை கிளப்புவார்கள்.

9. உங்கள் மேலாளர், உங்கள் அணி தலைவர் என்று எவரிடமும் நீங்கள் படிப்பதனை சொல்லக் கூடாது. அவர்களுக்கு தெரிந்தால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உங்களை வேறு விதமாக நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேண்டும் என்றே விடுமுறை தர மறுப்பது, நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வைப்பது, நீங்கள் வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டால் நீங்கள் படிப்பதனை காரணம் காட்டி, உங்கள் கவனம் அலுவலகத்தில் இல்லை இன்று கூறுவது இப்படி உங்களை மறைமுகமாக தாக்கலாம்.

10. ஆயிரம் பொய் என்பது திருமணத்திற்க்காக மட்டும் அல்ல, அரசு வேலைக்காகவும் சொல்லலாம். தேர்வு நேரங்களில் விபத்து, டைபாய்டு காய்ச்சல் என்று எதையாவது கூறி குறைந்தது ஒரு 10 நாட்கள் விடுமுறை எடுத்து விடுங்கள். ஏனென்றால், படிப்பதற்கு - பரீட்சைக்கு என்று நீங்கள் விடுமுறை கேட்டால் எந்த அலுவலகத்திலும் தர மாட்டார்கள். சம்பளம் குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை. நிம்மதியாக இறுதிக் கட்டத்தில் படிக்கலாம்.

11. ஒரு அலுவலகத்தில் இருந்து நீங்கள் வேறு ஒரு அலுவலகத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை இருப்பின், உடனடியாக புதிய அலுவலகத்தில் சேர்ந்து விடாதீர்கள். அதிகமாக ஒரு 20 முதல் 30 நாட்கள் வரை கழித்து புதிய அலுவலக பணியில் சேருங்கள். இந்த பொன்னான நாட்களை நன்கு படிக்க பயன்படுத்தலாம்.

12. அலுவலக ரீதியாக வெளி ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பின், அல்லது அங்கு தங்க வேண்டி இருப்பின் பாடப் புத்தகங்களை படிப்பதற்கு உடன் எடுத்துச் செல்லலாம்.

13. TNPSC யைப் பொறுத்த வரை, நீங்கள் வேலைபார்த்துக் கொண்டே உங்களது மொழி பாடத்தில் 90+ வாங்க முடிகிறது என்றால், உங்கள் வருமானத்தை நம்பி உங்கள் குடும்பம் இல்லை என்றால், உங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்ய மனிதர்கள் இருப்பின் முக்கியமான தேர்வு அறிவிப்பிற்கு முன்பு குறைந்த பட்சம் ஒரு 6 மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு விட்டு தன் நம்பிக்கையுடன் படிக்கலாம். வெற்றி நிச்சயம்.

14. உங்களது சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வைத்துக் கொண்டு ராஜினாமா செய்து விட்டு படிக்கும் கால கட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

15. வேலையை எந்த தேர்விற்க்காக விட போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

TNTET 2017 & PG TRB தேர்வுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் மிக மிக விரைவில்..

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 - போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று
காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

TNTET – 2017 Tamil Nadu Teacher Eligibility Test – 2017 is going to be conducted in the last week of April.

Separate Application Forms are designed for TNTET Paper I and Paper II.

Application Forms allocated to each Revenue District will be delivered to the Chief Educational Officers on or before 
10.02.2017.

 CEO has to allot to each DEO and then to each school.

Chief Educational Officers should handover the Application Forms to the District Educational Officers in their jurisdiction and coordinate with the sale of Application Forms.

This time also like the previous TNTET, it is decided to sell the TNTET Application forms through selected Hr. Sec. Schools.

 Application Forms should be shared between schools as and when there is necessity.

 A Coordinator can be appointed for 10 schools each with the officers like the District Elementary Education Officers, Personal Assistants and Deputy Inspectors with the work of sending the Application Forms to needy schools from the Chief Educational Offices.

TNTET Application Forms should be sold in the selected Hr. Sec. Schools from 9.00 AM to 6.00 PM from mid February'2017 to end of February'2017 tentatively 27.02.2017.

 Selected Hr. Sec. School should sell the Application Forms from 09.00 AM to 06.00 PM on all working days (including Saturdays) with at least two staff members on duty.

It is strictly instructed that only ONE Application Form should be sold to each candidate.

 Announcements may be made on the notice boards of Hr. Sec. Schools about the separate application forms for Paper I and Paper II and about the submission of filled-in Application Forms only in the District Educational Offices.

 Chief Educational Officers should take personal care on the sale and receipt of Application Forms. II. Receipt of Filled-in Application Forms in the District Educational Offices. 1. At least 13 Teams (6+7 Teams for Paper I and Paper II) or more as per need may be formed for the receipt of Filled-in Application Forms in the District Educational Offices.

 These Teams should check the filled-in Application Forms to ensure whether all the particulars are filled-in and the Challan for the payment of examination fee is attached.

 The Teams should issue an acknowledgement on the xerox copy of the Application Form as prescribed by the TRB (in Annexure III) and it should be duly signed by the head of the Team without fail.

 Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.

TNTET - 2017 

 விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017

விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017

 TNTET Paper 1 தேர்வு - 29.04.2017

 TNTET Paper 2 தேர்வு - 30.04.2017

PG TRB தேர்வு - 20.04.2017

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாயத்துடன் செயல்படும் அதிகாரிகளை மாற்ற முடிவு

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது;
இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலக கட்டுப்பாட்டில், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தேர்வுத் துறை, மெட்ரிக் இயக்குனர் போன்ற, பல துறைகள் உள்ளன. இவற்றுக்கு, தனி இயக்குனர்கள் உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் அனுபவம் மிக்கவர்கள் என்றாலும், செயலகத்தில் உள்ள அதிகாரிகள், அவர்களைச் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என, புகார்கள் உள்ளன. பணி நியமனம், பணியிட மாற்றம், நிதி ஒதுக்குதல் போன்றவற்றில், செயலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், எந்த கோப்பும் நகர்வதில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இயக்குனரகத்துக்கு தெரியாமல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, செயலக அதிகாரிகளே நேரடியாக தொடர்பு கொண்டு, பரிந்துரைகள் செய்கின்றனர். இதனால், நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுவதாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் தலைமையில் உள்ள அரசு நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இயக்குனர்களுக்கு நெருக்கடி கொடுத்து, ஆதாயத்துடன் செயல்படும், உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பள்ளிக்கல்வியை, மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக கொண்டு வர, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்கேற்ப, துறையில் மாற்றம் கொண்டு வரவும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் பதவியேற்றபோது, அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.


  ஆனால், தற்போதைய உயர் அதிகாரிகள், பாடத்திட்டத்தை கூட மாற்ற, தயக்கம் காட்டுகின்றனர். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தயாரித்த பாடத்திட்டத்தை மாற்றவும், புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கவும், குழு அமைக்கவில்லை.மத்திய அரசும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும், மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்துகிறது. ஆனால், தமிழக மாணவர்கள், இந்த நுழைவு தேர்வுக்கு தகுதி பெற முடியாததால், வெளிமாநில மாணவர்களுக்கு, அதிக வாய்ப்புகள்

கிடைக்கின்றன.இதுபோன்ற பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி, கல்வித் துறையை சீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வி செயலகத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல், தலைமை செயலரின் நேரடி பரிசீலனைக்கு பின் வெளியிடப்படும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அமைச்சரின் அறிவிப்பு - தேர்வர்கள் குழப்பம்-அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுக்கு இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இதுவரை பத்து தேர்வுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால்
2012-ல் நடைபெற்ற தேர்வில் இருந்தே பல்வேறு குழப்பங்கள் அதனை தொடர்ந்து 2013 தகுதித் தேர்வில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வந்தநிலையில்,

தற்போது வழக்குகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அடுத்து எப்போது பணிநியமன அறிவிப்பு வரும்?  தேர்வு வரும் என ஆவலுடன் தேர்வர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கல்வி அமைச்சர் தினந்தோறும் அறிவித்து வரும் தகவலால் தேர்வர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.


அவர்வெளியிட்ட அறிவிப்புகள்:


Nov 10, 2016
TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.


Nov 21,2016
TET தேர்வு மூலம் விரைவில் 4500 பணியிடம் வரைநிரப்பப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி


Jan 11, 2017
புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.


Jan 26, 2017
TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்


Jan 27, 2017
TNTET: ஏப்ரல் 30க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர்


இதில் தேர்வர்களின் குழப்பம் என்னவென்றால் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற தேர்வர்களை கொண்டு தற்போதுள்ள பணியிடம் நிரப்பப்படுமா?  அல்லது புதிய தேர்வு வைத்து நிரப்பப்படுமா என்பதை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.


ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வரவுள்ளது.அதை மட்டுமே அமைச்சர் உறுதி செய்துள்ளார்.(அறிவிப்பு நிஜமாகுமா?)


அடுத்து PGTRB தேர்வு வருவதாக 6 மாதத்திற்கு மேல் பல்வேறு ஊடகங்களில் செய்திவரும் நிலையில் தாமதத்திற்கான காரணத்தையும் தேர்வு எப்போது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தி தேர்வர்களின் குழப்பத்தை நிவர்த்தி செய்யவேண்டும்.


முன்ஏற்பட்ட குழப்பங்கள் போல் இல்லாமல் சரியான திட்டமிடலுடன் இனிவரும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பு.

NMMS-2017- MAT, SAT TENTATIVE ANSWER KEY IN PDF FILE

தமிழக உள்ளாட்சித் தேர்தல் பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தானா..?

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் இத்தருணத்தில், மாநில தேர்தல் கமிஷனர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.


 உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட, ஆளும் தலைமை விரும்புகிறது. மேலும் பள்ளித் தேர்வுகள் நெருங்கி விட்டதால் தேர்தலை நடத்த முடியாத நிலை, மாநில தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டு உள்ளது. பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தான், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என கூறப்படுகிறது.
தற்போது, தனி அதிகாரிகளால், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமனின் பதவிக்காலம், மார்ச் 21ல் முடிகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கடந்த, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், சோ.அய்யர், மாநில தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்; அதே ஆண்டு, தேர்தலை நடத்தி முடித்தார். அவரது பதவிக் காலம், 2013ல் முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இது, 2015 மார்ச்சில் முடிவுக்கு வந்ததால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், புதிய தேர்தல் கமிஷனராக சீதாராமன் நியமிக்கப்
பட்டார். அவர், இரண்டு ஆண்டு பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம், வரும் மார்ச் 21ல் முடிகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்துள்ளார். வழக்கு விவகாரங்களையும் கவனித்து
வருகிறார்.
எனவே, தேர்தல் நடத்தப்படும் வரை அவரே பதவியில் நீடிப்பாார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கமிஷனர் பதவியை பிடிக்க, சில ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், போயஸ் தோட்டத்தில் காய் நகர்த்த துவங்கி விட்டனர்.

இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FLASH NEWS-TNTET-2017 -TET தேர்வுக்கான-TRB CHAIRMAN- ன் கடிதம்

விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017

விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017

TNTET Paper 1 தேர்வு - 29.04.2017


TNTET Paper 2 தேர்வு - 30.04.2017

PG TRB தேர்வு - 20.04.2017

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்!: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை மறுநாள் தொடங்குகிறது.  மத்திய 
அரசின் பொது நிதிநிலை அறிக்கையும், தொடர்வண்டித்துறை நிநிதிலை அறிக்கையும் 92 ஆண்டுகளுக்குப் பிறகு இணைத்து தாக்கல் செய்யப்படுவதால், இதில் வெளியாகவிருக்கும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

வருமானவரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை  மாத ஊதியம் பெறுவோரிடமிடருந்து நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வருமானவரி  உச்சவரம்பு உயர்வு என்பது அவ்வப்போது பெயரளவில் செய்யப்படுகிறதே தவிர, கள யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரித் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பாதகமற்ற, சாதகமான வரிச்சூழல் ஏற்படுத்தப்படும். வரிவிதிப்பு முறை எளிமைப்படுத்தப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் இன்று வரை வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. அதன்பின் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துவிட்டது. மேலும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு இணையாக  வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் மாத ஊதியம் பெறுவோரில் பெரும்பான்மையினர் தங்களது ஊதியத்தின் பெரும்பகுதியை வருமானவரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மக்களிடையே வரி மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.

இவைஒருபுறமிருக்க வருமானவரியின் அளவை குறைத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தான் வரி வருவாயை அதிகரிக்க முடியும். வருமானவரியின் அளவு அதிகமாக இருப்பதாலும், வரி விலக்குக்கான உச்சவரம்பு மிகவும் குறைவாக இருப்பதாலும் அதிக அளவு  வருவாய் ஈட்டுபவர்கள் கூட வருமான வரி செலுத்தத் தயங்குகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்படுவதுடன், வருமான வரிவிலக்கு வரம்பும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, வருமானவரி விலக்கு வரம்பை இப்போதுள்ள ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். அத்துடன் வருமானவரி அளவை ரூ.10 லட்சம் வரை 10% ஆகவும், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20% ஆகவும், அதற்கு மேல் 30% ஆகவும் மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், மூத்த குடிமக்களின் ஓய்வூதியத்திற்கு முழுமையான  வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மாற்றியமைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். கடந்த 2012-13 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து  தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நோக்குடன் 2% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக 10% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பின் தங்கத்தின் இறக்குமதி குறைந்து விட்ட பிறகும், அதன்மீதான வரி குறைக்கப்படவோ, ரத்து செய்யப்படவோ இல்லை. இறக்குமதி வரி விதிப்பால் அரசுக்கு கிடைத்த லாபத்தை விட இழப்புகள் தான் அதிகமாகும். இறக்குமதி வரியால் முறைப்படியான இறக்குமதி குறைந்தாலும், தங்கம் கடத்தி வரப்படுவது பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சுங்க வரி வருவாய் பெருமளவில் குறைந்திருக்கிறது.

அதேநேரத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்காக ஒரு குடும்பத்தினர் ரூ.5 லட்சத்திற்கு தங்கம் வாங்க வேண்டுமானால் ரூ.50,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கிறது. இது ஏழை மக்கள் மீது கடுமையான சுமையை சுமத்தும். எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யவோ, அது சாத்தியமாகாத நிலையில் 5% ஆக குறைக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர்வண்டித்துறையை பொறுத்தவரை தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏராளமானவை  நிதி இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அத்திட்டங்களை அடுத்த இரு ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கும் வகையில் அவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.’’

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக
தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்புக்கென தனித்தனியாக இரு சட்டங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.

எனவேநீட் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதால் இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுதலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்- மாணவர்கள் தேர்வைக் கண்டு அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,

மன்கி பாத் நிகழ்ச்சியில் மோடி, 'காந்தி நினைவு நாளை முன்னிட்டு, நாளை அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். குடியரசு தின விழாவில் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்கள் தேர்வைக் கண்டு
அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை. பதற்றமின்றி இருந்தால்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். யாருடனும் போட்டி போடாதீர்கள். உங்களுக்கு நீங்களே போட்டி. சச்சின் டெண்டுல்கர் அப்படிதான் தனது சாதனைகளை அவரே முறியடித்துள்ளார்.

வாழ்க்கையில் இடையூறுகள் வரதான் செய்யும். அப்துல்கலாம் அதுபோன்ற தடைகளை எல்லாம் எதிர் கொண்டதால்தான் வெற்றி பெற முடிந்தது. அவரைப் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது மிகவும் அரிது. நேற்றை விட இன்று சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய கடலோர காவல்படை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதியுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டுக்காக சேவை செய்த கடலோர காவல்படை வீரர்களுக்கு நன்றி' என்றார்.
புதுடில்லி: தேர்வை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.   

மவுனஅஞ்சலி:
மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: ஜனவரி 30ம் காலை11 மணியளில், மகாத்மா காந்தி மற்றும் மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக வருடந்தோறும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். இது நமது ஒற்றுமையையும் காட்டுவதுடன், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை போற்றுவது போல் ஆகும். நமது நாடு ராணுவ வீரர்கள், பாதுகாப்புபடையினருக்கு சிறப்பு மரியாதை அளித்து வருகிறது .காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் போற்ற வேண்டும். இளைஞர்கள் அவர்களை முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும்.

மறுசீர்திருத்தம்:
மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்கள் தேர்வை மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும். திருவிழா போல் தேர்வை பார்க்க வேண்டும். கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். நல்ல மனநிலை தான் நல்ல மதிப்பெண்களை தரும். தேர்வின் போது அனைவரும் குழுவாக செயல்பட வேண்டும். சிறிது நேரம் ஓய்வெடுப்பது நினைவாற்றலுக்கு சிறந்த மருந்தாகும். இது எனது சொந்த அனுபவம். அனைத்து அறிவும், விஷயமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் கற்றறிந்ததை அறியவே தேர்வு நடத்தப்படுகிறது. வாழ்க்கையின் வெற்றிக்கு தேர்வு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கு, தேர்வு சிறிதளவு உதவுகிறது.தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை மிக எளிதாக எதிர் கொள்ள வேண்டும். மகிழ்வோடு தேர்வை எழுதுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும் -முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

28/1/17

Breaking News: ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என
திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேட்பாளருக்கு இடஒதுக்கீடு பின்பற்றவில்லை எனக் கூறி கடந்த அக்டோபர் மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தது.

 இந்நிலையில் இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

அப்போது தேர்தல் நடத்த எவ்வளவு காலம் தான் தாமதிப்பீர்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

 இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.


இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது சிரமம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி போடக் கூடாதா? வாட்ஸ் அப்பில் பகிரும் முன் படிக்க வேண்டியவை

மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி மக்களை
குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, தமிழகப் பள்ளிகளில் வெளிநாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு ஊசி என்று சொல்லி நம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது.
இதனைஅனைவருக்கும் ஷேர் செய்யவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அரசு வருகிற பிப்ரவரி மாதம் 6 முதல் 28 தேதி வரை 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் மீசில்ஸ் (தட்டம்மை) மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசியை இலவசமாக போட திட்டம் கொணர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தஊசிக்கு எதிராகத்தான் சமூக ஊடகங்களில் ஒரு புரளி வெகு வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. அது பற்றிய உண்மை நிலை குறித்து அறியாமல், அதனை ஏராளாமனோர் மற்றவர்களுக்கும் ஷேர் செய்துவருகிறார்.
ஆனால், இந்த ஊசி பாதுகாப்பானதுதான். இந்த ஊசியின் மூலம் மீசில்ஸ் எனும் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம்.
மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் பிற அம்மை நோய்களைப் போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் எளிதில் உடலில் பரவி நியுமோனியா / உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகளை தோற்றுவிக்கவல்லது. இந்த நோயினால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம்.
ரூபெல்லா எனும் நோய் கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனங்கள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் ரூபெல்லா நோய் அதிக கருக்கலைப்புகளை ஏற்படுத்துகின்றது.
மீசில்ஸ் நோய்க்கு எதிராக நமது தடுப்பூசி திட்டத்தில் 9 மாதம் நிறைவான குழந்தைகளுக்கும் ஒன்றரை வயதான குழந்தைகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்ததடுப்பூசியை தற்போது மீசில்ஸ் மற்றும் ரூபெல்லாவிற்கு எதிரான இரு நோய் தடுப்பு ஊசியாக (measles rubella Vaccine ) அரசாங்கம் தரம் உயர்த்தியுள்ளது.
இந்தரூபெல்லாவிற்கு எதிரான தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. அதைத் தான் தற்போது இலவசமாக அரசு measles rubella vaccine என்று மாற்றியுள்ளது.
அந்தவாட்சப் செய்தி கூறுவது யாதெனில் இந்த தடுப்பூசி நல்லதல்ல. கேடு விளைவிப்பது. இதில் அரசியல் லாப உள்நோக்கம் உள்ளது என்பது போன்று அந்த ஆடியோ மெசேஜ் இருக்கிறது.
அரசுமருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் ஏராளமானோர், இந்த தடுப்பூசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.
ஆனால் உண்மையில்லாத ஒரு தகவல் எளிதில் வாட்சப்பில் பரப்பி விட முடிகிறது. இது தவறு.
Measles rubella vaccine ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் போட்டு வரும் ஊசி தான். இதுவரை பணம்படைத்தவர்கள் மட்டும் இந்த ஊசியை போட்டு வந்தனர்.
தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும் , இந்த measles rubella vaccine தேசிய தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. 9 மாதங்கள் நிறைவுற்ற குழந்தைகளும் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் இந்த measles rubella தடுப்பூசி தான் இனி போடப்பட உள்ளது. வீண் புரளிகளை நம்ப வேண்டாம்.
தடுப்பூசிகள் கொடும் நோய்களுக்கு எதிராக செயல்படுபவை. ஏற்கனவே பலம் நல தடுப்பூசிகளைப் பயன்படுத்தி, மிகக் கொடூரமான நோய்களையும், தொற்று நோய்களையும் இந்தியாவில் இருந்து விரட்டியுள்ளோம். அதுபோல இந்த தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. தயவுசெய்து தவறான பதிவுகளை நம்பவேண்டாம்.
உங்கள் குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் மீசில்ஸ்- ரூபெல்லா நோய்க்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விட்டதா என்பதை உறுதிசெய்யுங்கள் என்பதே விவரம் அறிந்தவர்கள் சொல்லும் உண்மை.
இதேவிஷயத்தைத்தான், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதாவது, மீசெல்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் குழந்தைகளுக்கு வராது. ரூபெல்லா எனும் கொடிய வியாதியில் இருந்து குழந்தைகளைக் காக்கவே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து சிறார்களுக்கும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

TNTET- கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில்
வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. எனவே இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும். 
தகுதித்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும். கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5 மாநில தேர்தல்.. 10, 12 - ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு தேதியில் மாற்றம்

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், சில பாடங்களின் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 10-ல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 23-ல் நடைபெறவிருந்த 10-ம் குருங் படத்தேர்வு மார்ச் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 -ல் நடைபெறவிருந்த 10-ம் என்சிசி தேர்வு மார்ச் 23-க்கு மாற்றப்பட்டுள்ளது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்புக்கான தேர்வில் உடற்கல்விக்கான தேர்வு ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 20-ந்தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு (Theatre Studies paper) ஏப்ரல் 20-ந்தேதிக்குப் பதில் ஏப்ரல் 10-ந்தேதியும், தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு (Food Service paper) ஏப்ரல் 29-ந்தேதிக்குப்பதில் ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ? - படிக்க மிஸ் பண்ணிடாதீங்க...

பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை,
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி
உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி)

வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள், மத்தியஅரசு இடையே சில விசயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதால், ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்த வரி வீதம், மாநில அரசுகள் எவ்வளவு வரிவருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3. வருமான வரி

ஜி.எஸ்.டி. வரியைத் தொடர்ந்து, வருமானவரியில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும். வருமான வரி உச்சரவரம்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

4. கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வருமானவரியை பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.

5. ரெயில்வே

ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையால், ரெயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றபோதிலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரெயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

6. விவசாயம்

ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையையும், வேதனையையும் குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர்,டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் .

7. தொழில்துறை, உற்பத்திதுறை

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்வகையில் தொழில்துறைக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம். சீனாவைப் போல், தொழிற்சாலைகளுடன், தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் திட்டம் அறிமுகமாகலாம்.

8. அன்னிய முதலீடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்படலாம். அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம்.

9. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

புதிய தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விரும்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை வேகமாக பெறுதல், வரிச்சலுகையை 10. ஆண்டில இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் இருக்கும்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை சந்தித்து மனு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி அமைச்சர்
பாண்டியராஜன் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இன்று கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும், முதல்வர் தனிப்பிரிவிலும் இரு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் பாதிக்காத வண்ணம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், 

 தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 31 ஆம் நாள் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

ஆதார் எண் அடிப்படையில் பணபரிவர்த்தனைகளை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.

 உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு பணத்தட்டுப்பாடு உருவானதால் மக்கள் வேறு வழியின்றி கார்டு,
ஆன்லைன் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினர்.


இதற்காக சமீபத்தில் கூட ஸ்மார்ட் போன்களுக்காக 'பீம்' என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

 இந்நிலையில், ஆதார் எண் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனைகளையும் செயல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது.

 ஆதார் அடிப்படையில் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 இதன்படி, வணிகர்களிடம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்த மொபைல் போன் கூட எடுத்துச்செல்ல வேண்டாம்.

💷 தங்களது ஆதார் எண்ணை கூறினால் போதும். பயோ மெட்ரிக் முறையில் பணத்தை செலுத்திவிடலாம்.

  தற்போது ஆதார் பேமன்ட் முறையில் 14 வங்கிகள் இணைந்துள்ளன.

 இந்த சேவைகள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

 பிற வங்கிகளிடமும் இந்த திட்டத்தில் இணைவது தொடர்பாக பேசி வருகிறோம்.

 பீம் ஆப், யுபிஐ ஆகியவையும் ஆதார் அடிப்படையில் இயங்குவதுதான்.

💷 நாடு முழுவதும் 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். 49 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

 மாதத்துக்கு 2 கோடி கணக்குகளில் ஆதார் எண் சேர்க்கப்பட்டு வருகிறது.

 எனவே, ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை வெகு விரைவில் செயல்படுத்தப்படும்.


இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்