யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/1/17

110 GROUP-க்கு ADMIN! வாட்ஸ் அப்பில் கலக்கும் ஆசிரியர்.. கவனிக்கும் கல்வி அமைச்சர்!

வாட்ஸ்அப்பில் என்னவெல்லாம் செய்யலாம்? காலை எழுந்தவுடன்குட்மார்னிங், இரவு ஆனவுடன் குட்நைட் மெசேஜ்போட்டுக் ‘கடமை’யாற்றலாம். நமக்குவந்த பழையஃபார்வர்ட் மெசேஜ்களையே நாமும் ஃபார்வர்ட் செய்து, படிப்பவர்களை டரியல் ஆக்கலாம். இன்னும் மீம்ஸ், அதிசயச் செய்திகள், அரசியல் கிண்டல்கள்என அத்தனையும்பகிரலாம். ‘வாட்ஸ்அப் என்பது வெறுமனே பொழுதுபோக்கமட்டுமல்ல; மற்றவர்களுக்கு உதவவும்கூட’ என்பதற்கு சென்னைப்
பெருவெள்ளத்தின்போது நடந்த சேவைகளேசாட்சி.



 ‘வாட்ஸ்அப்’பைஉருப்படியாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இன்னுமொருஉதாரணம் விழுப்புரம்மாவட்டம் தியாகதுருக்கம்பக்கம் உள்ளஉதயமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் முரளிதரன். அரசுப்பள்ளியில் பணிபுரியும்ஆசிரியரான முரளிதரன்நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்பின் மூலம்முனைப்பும், ஆர்வமும் உள்ள  ஆசிரியர்களைஇணைத்து அரசுபள்ளி ஆசிரியர்களிடையேபுதிய கற்றலைஅறிமுகப்படுத்தி வருகிறார் .

இவர் ஒன்றாம் வகுப்பில்இருந்து பன்னிரண்டாம்வகுப்பு வரைஉள்ள ஒவ்வொருபாடத்துக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும், மாணவர்களுக்குமருத்துவம் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்குதயார் செய்யும்வகையில் போட்டித்தேர்வுகளுக்குஎன்று இரண்டுவாட்ஸ்அப் குரூப்பையும், பள்ளி குழந்தைகளுக்குநீதிக்கதைகளை சொல்லிக் கொடுக்க இரண்டு குரூப்கள், மாணவர்களின் கல்வி செயல்பாட்டுக்கு ஒரு குழு, முதல் உதவிக்குமருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழு, ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதலுக்கு எட்டு குழுக்கள், ஆசிரியர்களுக்கான அரசாணைகளைத் தெரிவிப்பதற்குஒரு குழு, பொதுவான தகவல்களைப்பதிவு செய்வதற்குஎன்று பதிமூன்றுகுழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு குழுஎன்று மொத்தம்110 வாட்ஸ்அப் குரூப்புகளை வைத்திருக்கிறார்.  இந்த குரூப்பில் தமிழகபள்ளி கல்விஅமைச்சர் மாபாபாண்டியராஜனும் இணைந்து ஆசிரியர்கள் என்னென்ன விஷயங்கள்விவாதித்து வருகிறார்கள் என்று சத்தம் இல்லாமல்கவனித்து வருகிறார்என்பது தான்சிறப்பு.

அமைச்சரைத் தவிர மாவட்டஅளவிலும், மாநிலஅளவிலும் உள்ளகல்வித் துறைஅதிகாரிகளும் இவரது வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறார்கள்.

“தமிழ்நாட்டில் ஏதாவது பள்ளியில்ஒரு ஆசிரியர்  வித்தியாசமானமுறையில் சொல்லிக்கொடுத்தாலும் அந்த விஷயம் அடுத்த நாளேதமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி் ஆசிரியர்களும்போய் விடுகிறது. இதன் மூலம்தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதியகற்பித்தல் முறையும், தொலைநுட்ப பயன்பாடும் அதிகரித்துவருகிறது.

வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர்களைஇணைத்து புதியகற்றலுக்கு எப்படி உதவி வருகிறேன் என்பதைஅமைச்சர் கலந்துகொண்டகூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் சொன்னார்கள். கற்றலுக்குஉதவும் இந்தமுறை அமைச்சருக்குப்பிடித்துப் போய் ‘சமூக வலைத்தளங்களை இதுபோல்கல்விக்கு நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும்’ என்றுபாராட்டி அடுத்தநாளே எங்களுடையஇரண்டு வாட்ஸ்அப்குழுவில் இணைத்துக்கொண்டார். இது எங்களுக்குகூடுதல் மகிழ்ச்சியும்பொறுப்பையும் கூட்டியது. இவரைத் தவிர கல்வித்துறையில் உயர்அதிகாரிகள் பலரும் எங்களது குழுவில் இணைந்திருக்கிறார்கள்என்பது எங்கள்வாட்ஸ்அப் குழுக்களுக்குப்பலம்" என்கிறார் முரளிதரன்.

 வாட்ஸ்அப்  மூலம் கற்க வைக்கும் ஆசிரியர் முரளிதரன்ஆசிரியர் வேலையைவிட வாட்ஸ்அப்குரூப்பை நிர்வாகிக்கவேஉங்களுக்கு நேரம் சரியாக இருக்குமே? எப்படிசமாளிக்கிறீர்கள்? 

“வகுப்பு நேரத்தில் வாட்ஸ்அப்பைப்பார்ப்பதே இல்லை. பாடம் நடத்தும்போது வாட்ஸ்அப்பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகவே காலை9.30 மணி முதல்  மாலை4.30 மணி வரைஎந்தத் தகவலும்பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதை முக்கியவிதிமுறைகளில் ஒன்றாக வைத்திருக்கிறோம்.

இதைப்போலவே, ஒவ்வொரு பாடத்துக்குஎன்று உள்ளகுரூப்பில் பாடம் சார்ந்த விஷயங்களை மட்டுமேவிவாதிக்க வேண்டும்என்ற தெளிவானநிபந்தனைகளோடு இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன. ஆகையால்வகுப்பு நேரத்தில்வாட்ஸ்அப்-க்குநோ சொல்லிவிடுகிறோம்.

குரூப்பில் காலை வணக்கம், மாலை வணக்கம்போன்ற பதிவுகளுக்குஇடமில்லை. தங்களுடையதனிப்பட்ட, பொதுக் கருத்துகளை எல்லாம் பதிவுசெய்வதற்கு என்று தனித்தனியே வாட்ஸ்அப் குரூப்புகள்இருக்கின்றன. அதில் பதிவு செய்யலாம் என்றுசொல்லி விடுகிறோம். இதனை எல்லாம்கடைப்பிடிக்காதவர்களைப் பட்டியலில் இருந்துஉடனே வெளியேற்றிவிடுகிறோம். புதியதாகக் குழுவில் இணைந்தவர்களை ஆரம்பத்தில்கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதன் பின்புகுழு இயங்கும்முறையையும் அதன் அடிப்படைக் கட்டுப்பாட்டையும் புரிந்துகொள்கிறார்கள். நானும்பள்ளியில் இருந்துவீட்டுக்கு வந்தவுடன் இரண்டு முதல் மூன்றுமணி நேரம்ஒதுக்கி குரூப்பில்என்னென்ன தகவல்களைப்பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைக் கவனித்துஅதில் உள்ளதகவல்களை ஃபேஸ்புக்கிலும், இணையத்தளத்திலும் பகிர்ந்துக்கொள்கிறோம். இதன்மூலம் வாட்ஸ்அப்குரூப்புகள் வெற்றிகரமாக இயங்குகின்றன”.

இத்தனை குரூப்கள் மூலம்எதாவது சாதிக்கமுடிகிறதா?

“இந்தக் குழுக்கள் மூலம்தமிழகம் முழுவதும்உள்ள ஆசிரியர்கள்ஒருங்கிணைக்கப்பட்டு, கற்றல், கற்பித்தலில்புதிய உத்திகளையும்பாடப்பகுதிக்கான வினாத்தாள்கள், குறிப்புகள், விளக்கங்களையும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த குரூப்பில்பகிரப்பட்ட 1300 கணித ஃபார்முலாக்கள் அடக்கிய தகவல்இன்றைக்கு 90% அரசு பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் தளத்தில் ஓர்ஆசிரியர் பயன்படுத்தியவித்தியாசமான அணுகுமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் கடைப்பிடித்துக்கற்றுக்கொடுப்பதை எளிமையாகச் செய்கிறார்கள். வாட்ஸ்அப்பில் நிறையதகவல்கள் பகிர்ந்துகொள்வதால்ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகும் கற்றல்கற்பித்தல் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தகுரூப்பின் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் பெருமளவில்பயனடைகிறார்கள்” என்கிறார். 

தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்திஅரசு பள்ளியில்படிக்கும் மாணவர்களதுமுன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியரைவாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக