யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/1/17

TRB - அரசுப் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு. (நாள்:06.01.2017)

📝 அரசு பொறியியல்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடிநியமனத்துக்கு
நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர்தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
📝 இதில் தகுதிபெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

📝 அரசுப் பொறியியல்கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பைகடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பிவெளியிட்டது.

📝 அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

📝 அதன் பிறகுவயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

📝 விண்ணப்பதாரருக்கான அதிகபட்சவயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

📝 பின்னர் மீண்டும்அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வுநடத்தப்பட்டது.

📝 மொத்தம் 48,286 பேர்விண்ணப்பித்ததில் 27,635 பேர் பங்கேற்று தேர்வுஎழுதினர்.

📝 இந்தத் தேர்வுக்கானமுடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

📝 தேர்வு எழுதியஅனைவருக்குமான முடிவுகள் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

📝 அதனுடன் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

📝 ஒரு இடத்துக்குஇருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள்தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

📝 சான்றிதழ் சரிபார்ப்பானதுசெனனை கிழக்கு தாம்பரத்தில் பாரத்மாதா சாலையில் அமைந்துள்ள ஜெய் கோபால் கரோடியாதேசிய உயர்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

📝 இதற்கான அழைப்புக்கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்ள வேண்டும்.


📝 அழைப்புக் கடிதம்தனியார் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக