யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/3/17

10ம் வகுப்பு மாணவர்கள் பழநியில் மொட்டை

பழநி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற வேண்டி, கோவை யைச் சேர்ந்த 48 மாணவர்கள் பழநிகோயிலில் முடிகாணிக்கை (மொட் டை) செலுத்தினர்.பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8ல் துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 48 பேர் ஆசிரியர்களுடன் நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனர்.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவேண்டும் என வேண்டிமுடிகாணிக்கை செலுத்தினர். பின், மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மாணவர்கள் கூறுகையில்,''பல பள்ளிகளில் தேர்வில் வெற்றிபெற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அத்துடன் முருகப்பெருமான் அருள்வேண்டி 'மொட்டை'அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளோம்,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக