யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/4/17

31ல் விற்ற 41 ஆயிரம் வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், மார்ச் 31ல் வாங்கிய, 41 ஆயிரம் வாகனங்களை
பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமும் 6,000
தமிழகத்தின், 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 60 பகுதி நேர அலுவலகங்கள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை தினங்களை கழித் தால், தினமும், சராசரியாக, 6,000 வாகனங்கள் பதிவாகின்றன.
இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலு வலகங்களில், ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. 104 வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் உள்ள நிலையில், 54 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதே போல், 229 கிரேடு 2 ஆய்வாளர் பணிக்கு, 102 பேரும், 178 கிரேடு 2 ஆய்வாளர் பணிக்கு, 88 பேர் மட்டும் பணியில் உள்ளனர்.
பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஆய் வாளர் பணியிடம் காலி யால், புதிய வாகனங்கள் பதிவில் தாமதம் ஏற்படுகிறது. இந் நிலையில், 'பி.எஸ்., - 3' தொழில்நுட்பங்களில் தயாரித்த வாகனங்களை, மார்ச், 31க்கு பின் விற்க கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விலை குறைப்பு
இதனால், 31ம் தேதி, வாகன விற்பனையை அதிகரிக்க, இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கார்களுக்கும், உற்பத்தி நிறுவனங்களும் விலை குறைப்பை அறிவித்தன. அன்று மட்டும், 41 ஆயிரம் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன; அவற்றுக்கு பதிவு கோரி, ஆன்லைனில் பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஏப்., 1, 2 விடுமுறை நாட்கள்என்பதால், வாகன பதிவு இல்லை. இன்று, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் நிலையில், 41 ஆயிரம் வாகனங் களை பதிவு செய்ய, ஏராளமானோர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: மார்ச் 31ல் மட்டும், 41 ஆயிரம் வாகனங்கள் பதிவுக்காக, ஆன்லைனில் விண்ணப்பித்துள் ளன.இதனால், தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில், இன்று, வாகன பதிவு களை கட்ட வாய்ப்புள்ளது.

அதேநேரம், வாகன ஆய்வாளர் 1, வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அனைத்து வாகனங் களையும் ஒரே நாளில் பதிவு செய்ய முடியாது. மலிவு விலை வாகனம் வாங்கியவர்கள், பதிவுக்காக, குறைந்தபட்சம், நான்கு நாட்கள் வரை காத்திருக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக