யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/4/17

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: மின் ஆளுமை முகமை அறிவிப்பு.

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப் பித்தல் மற்றும் திருத்தங்கள் செய் வதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவித் துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின்கீழ், கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை அவர்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கமாகும்.இச்சேவை மையங்கள் மூலம், வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள், பல்வேறு உதவித் திட்டங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், இதில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம், மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வாரியத் துக்கு செலுத்த வேண்டிய குடி நீர் வரியையும் செலுத்தலாம்.இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதல் சேவைகளை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வரும் 24-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் பெற பொதுமக்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக