யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/4/17

ஊழியர் நலனில் அக்கறையில்லாத அரசு: ஊழியர்கள்சங்கம் புகார்

தற்போதைய தமிழக அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மதுரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில், ஆதரவு திரட்டிய, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் கூறியதாவது:காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து, மார்ச்சில் அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விட்டோம். இதுவரை, சங்க நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. இடைக்கால நிவாரணம் குறித்து, புதிய ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும்.

 சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, காலமுறை சம்பளம் வழங்குவதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. எனவே, 61 துறை ஊழியர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், உள்ளாட்சி தேர்தல் உட்பட, பல்வேறு பணிகள் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக