யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/6/17

எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்..ஜுலை 8 கடைசி நாள்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்  விநியோகிக்கப்படுகின்றன. 22 மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு பிடிஎஸ் கல்லூரியிலும் மருத்துவ விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தளியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 3050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அசில இந்திய ஒதுக்கீடான 456 இடங்கள் போக எஞ்சியுள்ள 2594 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கிட்டின் மூலம் நிரப்பப்படுகிறது.
சுயநிதி கல்லூரிகளில் உள்ள 400 இடங்களில் 200 நிர்வாக இடங்கள் போக 200 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்டுகிறது. பல் மருத்துவ கல்லூரியைப்  பொறுத்தவரை மொத்தமுள்ள 1910 இடங்களில் 720 நிர்வாக ஒதுக்கீடு போக மீதமுள்ள 1190 இடங்கள் தமிழக அரசு மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதனிடையே நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 2,66,221 மாணவர்கள்  , 3,45,313 மாணவிகள்  5 திருநங்கைகள் என மொத்தம் 6,11,539 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. ஜூலை 7 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும்,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 8 கடைசி நாள் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக