யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/6/17

படிச்சா படிங்க...! படிக்காட்டி போங்க...!


திரும்பும் திசையெல்லாம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளம்பர பதாகைகளும், சுவரொட்டிகளும் தான் தென்படுகின்றன.

காசுக்கு கலவி செய்யும் கூட்டமொன்று கல்வியின் தரம் பற்றி காணொளி ஊடக விளம்பரங்களில் நொடிக்கு நொடி அபச்சாரமாய் விபச்சாரம் செய்கின்றன.

எங்கள் பள்ளியில் அது இருக்கு...
எங்கள் கல்லூரியில் இது இருக்கு என்றும், மண்ணைப் பொன்னாக்கி உங்கள் குடிசையை கோபுரமாக்குவோம் என்றும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க அப்பாவிகளை நோக்கி கவர்ச்சித்தூண்டில்கள் வீசப்படுகின்றன.

மூன்று வயது குழந்தையின் மூளைக்குள் ஆறு வயது குழந்தையின் அறிவை, அறுவை சிகிச்சை செய்தாவது திணித்துவிட வேண்டும் என்ற அவசரமும், பேராசையும் கொண்ட பெற்றோர்களும்....

படிக்காமல் பட்டம் பெற்று, உழைக்காமல் உயர்ந்து விடத் துடிக்கும் இளைஞர்களின் கூட்டமும் இந்த கவர்ச்சித் தூண்டில்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிஉலகில் தங்களை கலியுக காமராசர்களாக காட்டிக்கொண்டு உள்ளுக்குள் கல்வியை காசாக்கிவிடத் துடிக்கும் கயவர்களிடம்....

கசாப்புக் கடை முதலாளிகளிடம் காசை வாங்கிக்கொண்டு கறிக்கு சினை ஆட்டைக் கூட விற்கும் மந்தையின் சொந்தக்காரனைப் போல் இந்த கல்வி வியாபாரச் சந்தையில் முதலாளிகளிடம் பெட்டிகளை வாங்கிக்கொண்டு நம் அடுத்த தலைமுறையை விற்றுக்கொண்டிருக்கின்றன பகட்டு விளம்பரங்களால் ஆட்சியை பிடித்த அரசுகள்.

# இதனால் பாதிக்கப்படப் போவது இளைஞர்களின் எதிர்காலம் மட்டுமல்ல...
இளைஞர்களின் எண்ணிக்கையை மட்டுமே பெரும் சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் எதிர்காலமும் தான் என்பதை அரசுகளும் நாமும் உணர்ந்து திருந்தாதவரை அழிவுப் பாதையில் நடைபோடும் கல்வியின் கால்களை தடுத்து நிறுத்த வழியேயில்லை....


ச.தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக