யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/6/17

மீண்டும் அமலாகிறது மதிப்பெண் முறை

நடப்பு கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் மதிப்பெண் மற்றும் 'டாப்பர்ஸ்' முறைஅமலாகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு, ௨௦௧௦ல், பொதுத்தேர்வு முறை மாற்றப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு அமலானது. விருப்பப்படும் மாணவர்கள் மட்டும், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின், 2011ல், மதிப்பெண் முறை மாற்றப்பட்டு, கிரேடு முறை அமலானது. 

இந்நிலையில், பள்ளி அளவிலான தேர்வால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மீண்டும் பொதுத்தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு கட்டாயமாகிறது. 
அத்துடன், வரும் பொதுத்தேர்வில், கிரேடு முறை ஒழிக்கப்பட்டு, மீண்டும் மதிப்பெண் மற்றும் முதல் மூன்று இடங்களை பெறும், 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நேற்று வெளியான, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு தான், கிரேடு முறையில் கடைசியானது. இனி வரும் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் படி மாணவர்கள் தேர்ச்சி கணக்கிடப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக