யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/8/17

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின மாணவ- - மாணவியருக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 84 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். சில ஆண்டுகளாக, இந்த விடுதிகளில், 40 சதவீதம் வரை காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஒரு காப்பாளர், மூன்று விடுதிகள் வரை கவனித்து வருகிறார். விடுதியை சரியாக நிர்வகிக்க முடியாததால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2014ல், காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதாக அரசு அறிவித்தது; அது, இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. இதேபோல, சமையலர், இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, சத்தான உணவும் கிடைப்பதில்லை.
இரவு நேரத்தில் உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவமனை செல்வதற்கும் வழியில்லை. 
எனவே, காலியாக உள்ள விடுதி காப்பாளர்கள், இரவு காவலர், சமையலர் பணி இடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக