யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/8/17

முதல்வருடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: செங்கோட்டையன்

ஈரோடு: வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ந் தேதியன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஆனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த ஆண்டு 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

அந்தமாணவர்கள் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக