யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/9/17

ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப் பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர் சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்க கூட்டுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை குறித்தும், நீதிமன்ற வழக்குகள் குறித்தும், அரசின் அணுகுமுறை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஓய்வூதியம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும், அரசுத்துறை சார்ந்த பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 
அரசின் அணுகுமுறை, நீதிமன்ற வழக்குகள், கோரிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும். மேலும், தமிழக முதல்வர் அறிவித்தவாறு ஊதியமாற்று அறிக்கையைப் பெற்று அறிக்கை மீது சங்கங்களை அழைத்துப் பேசி அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்திட வேண்டும். இதே கோரிக்கையுடன் ஓய்வூதியர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், தோழமை சங்கங்களை ஒன்றிணைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு உருவாக்கப்படும். அக். 15-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், திருச்சியில் அக். 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ-ஜியோ மாநில பேரவை கூட்டத்தில் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக