யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/10/17

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள்
தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
டெங்கு காய்ச்சலால் மாவட்டம்தோறும் சிறுவர்களும், பெரியவர்களும் அதிகளவு உயிரிழக்கின்றனர். மணல் கிடைக்கவில்லை, கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாட்டால் கட்டட வேலைகள் தடைபட்டு கிடக்கின்றன. இதனால், 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.


நலவாரியப் பணிகள் நடைபெறவில்லை. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தவர்களில், 3 ஆண்டுகளாகக் காத்திருந்த பலர் உயிரிழந்துவிட்டனர். இயற்கை இறப்பு நிதி கொடுக்கவில்லை. நலவாரியமே முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் முழு அதிகாரம் கொண்ட, செயல்படக்கூடிய ஆட்சி அமைய வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி வழங்க வேண்டும். தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக