யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/10/17

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் !!

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வர
வேண்டும்’ என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து, கருத்து கேட்பு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தற்போதுள்ள முப்பருவ முறையில், இரண்டாம் பருவத்திற்கான பாடங்களை குறைத்து, அவற்றை மூன்றாம் பருவத்தில் இணைக்க வேண்டும். ஆசிரியர்களை கல்வி பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களை புதிதாக அமைப்பதோடு, அறிவியல் ஆய்வுக்கான உபகரணங்களை வழங்கிட வேண்டும்.மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சியுடன், ஆங்கிலத்தை புரிந்து படிப்பதற்கேற்ப பாடத்திட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக