யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/11/17

நீட்' தேர்வு பயிற்சி மையம் 13ல் துவக்கம் : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

நீட் தேர்வு பயிற்சி மையத்தை வரும், 13ல் முதல்வர், பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாநில அளவில், 412 இடங்களில் பயிற்சி மையம் செயல்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச லேப்டாப் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று பேசியதாவது:தமிழக பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், 412 பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளன.

வரும், 13ல் முதல்வர், பழனிசாமி, முதல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பயிற்சியையும் துவக்கி வைக்கிறார். படிப்படியாக பிற இடங்களில் மைய செயல்பாடு துவங்கும். பயிற்சிக்காக இதுவரை, 'ஆன் - லைனில்' 75 ஆயிரம் மாணவ - மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு, டிசம்பருக்குள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக