யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/11/17

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தான் அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், முதுநிலை வரை தமிழில் படித்த தன்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை என்றும், எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு 2010ல் வெளியான அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, மனுதாரர் செந்தில்குமாரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக