யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/1/18

நாளை முதல், 'லீவ்' மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கூடுதலாக, ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல், 'லீவ்'  மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொங்கல், மாட்டு பொங்கல் என கூறப்படும், திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் என்ற உழவர் திருநாள் என, மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்த ஆண்டு, 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரசின் விடுமுறை பட்டியலின்படி, ஜன., 14 முதல், 16 வரை, மூன்று நாட்களுக்கு, பள்ளிகள் விடுமுறை என, அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், பஸ் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், குறித்த நேரத்தில், பொங்கல் 

பண்டிகைக்கு செல்ல முடியுமா என, பலர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அவர்கள்முன்கூட்டியே ஊருக்கு செல்லும் வகையில், பள்ளிகளுக்கு, நாளை ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவில், 'பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி, இளம் வயது முதல், தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணி காக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக, ஜன., 12ல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக