யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/2/18

குருப் நான்கு 2018 தேர்வு சொல்வது என்ன ? சிவ ஆனந்த கிருஷ்ணனின் அலசல்

1. 20.80 லட்சம் பேர் விண்ணபித்து 17 லட்சம் பேர் எழுதியது பற்றி ?
எனக்கு தெரிஞ்சு அதிக மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசம்ல கூட இப்படி நடந்தது இல்ல.. காரணம் இளைஞர்கள் படிப்பறிவு விகிதம் கம்மி.. அதுவே கேரளால இந்த மாறி நடக்கும்... இப்ப எல்லாம் படிக்றதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை.. அப்டியே படிச்சாலும் வேலை கிடைக்கிறது இல்ல.. அதற்கான தகுதிகளை இன்றைய இளைஞர்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்வதும் இல்லை. பக்கோடா விற்பதே வேலைவாய்ப்பு என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால் இது போன்ற போட்டித் தேர்வுகள் இத்தனை பேர் விண்ணப்பிப்பது அதிசயம் இல்லை... அதைவிட முன் எப்போதும் இல்லாததை விட அதிக விழிப்புணர்வு கூடிருக்கு போட்டி தேர்வை பற்றி .... எத்தனை பேர் எழுதினாலும் முழுமையாக முயற்சி கொண்ட முழுமையாக அர்பணித்துக் கொண்ட தேர்வு அன்று முழுமையாக திறனை வெளிபடுத்திய நபருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும் ....

2. இந்த தேர்வில் வட மாநில இளைஞர்கள் இங்கே எழுதியதாகவும் அதனால் பாதி வேலையே அவங்களே பறிச்சிட்டு போயிருவாங்க போலன்னு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதே ?
பொதுவா நம்ம தமிழ்நாட விட வட மாநில இளைஞர்களுக்கு கொஞ்சம் கூடுதலாவே போட்டி தேர்வு பற்றிய விழிப்புணர்வு இருக்கும்... யாரோ 5 பேரு நேரம் போகல போல.. இதுக்கு விண்ணப்பித்து எழுதி இருக்காங்க.. 5 வருஷம் உக்காந்து படிச்சவனே இங்க தள்ளாடுறான்.. இவங்க தமிழும் ஒன்னும் தெரியாம எப்படி பாஸ் பண்ண முடியும்.. ஒரு வேலை இங்கயே அவங்க குடும்பம் முன்னாடியே செட்டில் ஆயிருக்கலாம்... ஊடகம் எப்பவே இப்டித்தான் கிளப்பி விடும்... ஏய் இந்தா பாருடா தமிழ ஒழிக்க வந்துட்டாங்க ன்னு ... .. இது எப்டின்னா சீட்டு கட்டுல ஒரு சீட்டு ஜோக்கர் வந்தா எல்லாமே ஜோக்கரா மாறிரும் ன்னு சொல்ற மாறி இருக்கு .... சும்மா பீதிய கிளப்பி விடறதே இவங்க தான் ... அப்டியே அவங்க பாஸ் பண்ணாலும் தமிழ் எழுத படிக்க தெரியலன்னா பணி நீக்கம் செய்யபடுவார்கள்.. பொறுப்புள்ள ஊடகம் இந்த மாதிரி செய்திலாம் வெளியிடுவது வருத்ததற்குரியது.
3. கேள்வித் தாளில் ஓர் நகரத் தன்மை தெரிகிறதே,வாழ்வியல் குறித்த கேள்விகள் இடம்பெறவில்லை என்று ஒரு நாளிதழ் வெளியிட்டதே ?
கேள்வித்தாளில் என்னங்க நகரத் தன்மை ஊரகத் தன்மை ன்னு ... ? ஊரகத் தன்மை ன்னா ஜல்லிக்கட்டு எந்த விலங்கை கொண்டு விளையாடபடுகிறது னு கேக்கணுமா? இல்ல இந்தியா சுதந்திரம் பெற்றது எப்போது னு கேக்கணுமா ? போட்டித் தேர்வு என்பது ஒருவரை ஒருவர் முந்திக் கொள்வதற்கான தேர்வு.. இங்கே முந்துபவர் வெற்றி பெற்று வேலை பெறுகிறார்... பிந்துபவர் வாய்ப்பை இழக்கிறார்.. விழுமியங்கள் குறித்த கேள்விகள் இடம்பெற வில்லை என்ற கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமாகவே இருந்தாலும் இதைதான் கேட்க வேண்டும் இதைத் தான் கேட்க கூடாது என்று பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை வழங்கினால் கேள்விகள் எல்லா பாடத்தில் இருந்து சரி சமமாக இடம் பெற வாய்ப்பே இல்லை... மேலும் ஆணையம் ஒரு பாடத் திட்டத்தை மையமாக கொண்டு வினாத்தாள் வடிவமைக்குமே தவிர எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கேட்பதில்லை.. நடப்பு நிகழ்வுகள் பகுதி கேள்விகள் என்பது நாம் அன்றாடம் செய்தித்தாள் மற்றும் செய்திகளில் இருந்து இடம்பெறுவது.. இதில் ஒன்றும் வியப்பான வினாக்கள் கேட்கவில்லை... சாமானிய மனிதனுக்கு இதுவியப்பை தரலாம் .. ஆனால் முழுமையாக தயார் ஆகும் ஒரு தேர்வர் இதை எல்லாம் படித்தால் தான் தேர்வு பெற முடியும்... தகவல் நிறைந்த கேள்விகள் தான் எல்லா போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன.. இங்கே விழுமியங்கள்,வாழ்வியல் பாடங்களை கேள்விகளாக வைக்க வேண்டும் என்றால் உயர் பதவிகளுக்கு உள்ள தேர்வான குருப் 1 தேர்விற்கு அது பொருந்தும்.. மற்றபடி குருப் நான்கு தேர்விற்கு அதை படிக்கும் அளவுக்கு யாருக்கும் வாய்ப்பும் இல்லை..அப்படிப்பட்ட கல்வி முறையும் இங்கே கற்பிக்கப்படவில்லை.... எனவே வயிற்றுபிழைப்பா வாழ்வியலா என்று தேர்வரிடம் கேட்டால் இன்றைய சூழ்நிலையில் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் கூற வேண்டுமா என்ன ? எனவே ஆணையத்தின் கேள்வித்தாள் தரத்தில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை
4. கேள்வித் தாளில் பிழை இருக்கிறதே ?
பிழையை தவிர்ப்பது தான் முக்கிய கூறாக இருந்திருக்க வேண்டும்... அனால் எப்படியும் எல்லா தேர்விலும் பிழையுள்ள வினாக்கள் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது.. அது டைப் பன்னவரின் வேலையா கூட இருக்கலாம் ? இல்ல அச்சின் பிழையா இருக்கலாம்.. இல்ல எடுக்கும்போதே பிழையோடு இருந்திருக்கலாம்.. அதற்கு தேர்வாணையம் கண்டிப்பாக மதிப்பெண் வழங்கும்.. இந்த பிழையுள்ள கேள்விகளால் தேர்வாணையத்தின் தரமே போச்சு ன்னு சிலர் எழுதறப்ப தான் சிரிப்பு வருது... நீங்களே 200 கேள்விகள் எடுத்து பாருங்க.. ஒட்டு மொத்தமா வரும்போது ஒரு சில கேள்விகளில் நம்மளே தப்பு விட்டு இருப்போம்.. ஆணையம் இதை கொஞ்சம் கவனித்து இருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை
5. இறுதியாக இந்த தேர்வை பற்றி ?
ஒவ்வொரு வருஷமும் புது வண்டி மார்கெட்ல வந்துட்டே இருக்கு.. நீங்க ஆரம்பிக்கும்போது உங்க திறன் ஒரு டி வி எஸ் 50 அளவுக்கு இருந்து இருக்கலாம்... இன்னைக்கு பல்சர் ,KTM ன்னுகூடுதல் திறன் கொண்ட அதிக புதுபிக்கபட்ட வாகனங்கள் வந்தாகி விட்டது.. நீங்க அதே TVS50 வச்சிக்கிட்டு அடுத்த தேர்வையும் எதிர் கொண்டா அடுத்த வருஷம் குள்ள வேற ஒரு கூடுதல் திறன் கொண்ட ஒரு புது வண்டி முந்தி போயிட்டேஇருக்கும்.. ஆமா இது ஒரு ரேஸ்..ரேஸ் க்கு எவ்ளோ பிரயத்தனம் வேணும்.. வண்டிய எப்படி பராமரிக்கணும் ? எப்படி ஓட்டனும் ? கூட வரவங்களாம் என்ன மாதிரி வண்டி வச்சி ஓட்டறாங்கன்னு ளாம் பாக்கணும்.. அதனால அடுத்த பந்தயத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்கள் நீங்களே திறன் கூட்டிய ஒரு நபரா மாறி தயாரா இருங்க... திருக்குற திருக்குல மத்தவங்க எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு முன்னாடி போய் நிக்கணும்...
அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக