யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/3/18

காச நோய்: தகவல் தெரிவிக்காவிட்டால் சிறை!

காச நோயாளிகள் குறித்த தகவல்களை
அரசுக்குத் தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காச நோய் (டிபி) என்பது தோற்று நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஒரு காச நோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். உலகக் காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரலாம்.

இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ''மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் காச நோயாளிகள் குறித்து உள்ளூர் காச நோய் சிறப்பு சுகாதார மையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், காச நோய் ஒருவருக்கு இருப்பது தெரிந்தும், அது குறித்துத் தகவல் தெரிவிக்காமல் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐபிசி 269, 270 பிரிவின்படி, அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்தியக் குற்றவியல் பிரிவு 269 என்பது மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் குறித்து அறிந்தும், அது பரவுவது அறிந்தும் அதைத் தடுக்காமல் கவனக்குறைவாக இருத்தலாகும். பிரிவு 270 என்பது, தொற்று நோய் பரப்பும் நோயை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பரப்ப அனுமதித்தல் பிரிவாகும்.

காச நோய் என்பது மிகவும் ஆபத்தான தொற்று நோய். இந்த நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து, நோய் மற்றவர்களுக்குப் பரவாத வகையில், பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும், அவர்கள் குறித்த விவரங்களையும் மருத்துவர்கள் அறிந்துவைத்திருப்பது அவசியம்.ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை மையங்கள் ஆகிய இடங்களில் இருந்து காச நோயாளிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து வைத்திருப்பது, பொதுச் சுகாதார மைய அலுவலர்களின் கடமை" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 லட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக