யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/5/18

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திட்டம் :

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்1, 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதற்கான நடைமுறையை பின்பற்ற அரசுத் தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. 
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் துறை பள்ளிகளுக்கு சிடி வழங்கி நோட்டீஸ் போர்டில் தேர்வு முடிவுகளை ஒட்டுதல், செய்தித்தாளில் பிரசுரம் செய்தல், இணையதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வெளியிட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து, மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்களுக்கு, தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் ஒட்டும் நடைமுறையையும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு இணையதளம், எஸ்எம்எஸ் தவிர இ-மெயில் மூலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. 
தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும், அந்த பள்ளியில் படித்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். அவற்றை பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் ஒட்ட உத்தரவிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக