யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/6/18

முதல் நாளே அரசு பள்ளி மாணவர்களுக்கு..! தமிழக அரசு தந்த இன்ப அதிர்ச்சி

கடந்த 40 நாட்களாக கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் பள்ளி திறந்ததால் உற்சாகத்துடன் பள்ளி சென்றனர். மேலும் இந்த வருடம் முதல் 9 ,10 ,11 ,12 மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்துள்ளதால் மாணவர்கள் புதிய சீருடையில் வந்தனர்.

இந்நிலையில், இலவச பஸ் பாஸ் இல்லாத பள்ளி மாணவர்களை அரசு பேருந்தில் பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை பலதரப்பினரும் முன் வைத்தனர். இதனையடுத்து, தமிழக பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தாலே போதும், பஸ் பாஸ் இருக்க வேண்டிய கட்டாயமில்லை, அவர்கள் பேருந்தில் பயணம் செய்யலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முன்னதாக, தமிழக பள்ளி கல்வி முறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதில் முக்கியமாக +1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவந்ததை சொல்லலாம். இந்நிலையில், +1 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து புதிய பாடத்திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
மற்ற வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்ட நிலையில், +1 வகுப்பு பட புத்தகங்கள் மட்டும் இன்னும் முழுமையாக அச்சிடப்படவில்லை, இதனால் புத்தகமே இல்லாமல் அவ்வகுப்பு மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், தமிழக பள்ளி கல்வித்துறையில் இந்த கல்வியாண்டில் செய்யப்பட்ட மாற்றங்கள்,
* 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் மொழி பாடத்தேர்வு முறையில் இரண்டு தாள்களாக உள்ளதை, ஒரே தேர்வாக நடத்தப்படும்.
* தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்டவிதிகள் கொண்டுவந்து உரிய நடவடிக்கை. எடுக்கப்படும்.
* பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170 லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
* அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவுக்கு இனி பயோமெட்ரிக் முறைபடி வருகை பதிவு செய்யப்படும்.
என பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக